அவளின் சத்துக்கொடியும் பூனை மயிரும் 45

” ஐயோ… லுசு.. நம்ம வயசு பசங்களயே பண்றதுல என்னடி கிக்கிருக்கு .. ? இப்படி .. அதிக ஏஜ்லதான் .. செம கிக்கா இருக்கும் ..! ”
” அப்ப நீ … லவ்வ சொல்லத்தான் போறியா ? ”
” ஆமா… நால்லாம்.. டிசைட் பண்ணியாச்சு…! ” எனத் தீர்மாணமாகச் சொன்னாள் !
” சே… ”
” ஏய.. நீ ஏன்டி… இவ்ளோ பீல் பண்ணிக்கற.. ? ”
” வேற என்ன பண்றது… ? நீ லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா.. அதுக்கப்றமெல்லாம் என்னை எங்க கண்டுக்கப் போற நீ… ? ”
” யூ.. டோண்ட் வோர்ரிடி… அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு என்கிட்ட. .. ”
” என்ன ஐடியா. . ? ”
” நா… சுதன லவ் பண்றேன்… ! நீ..பிரேம லவ்பண்ணு. .. ”
” பிரேமயா… ? ”
” ஆமாடி நாம ரெண்டு பேரும் எப்படி க்ளோஸ் பிரெண்ட்ஸோ.. அது மாதிரி அவங்க ரெண்டு பேரும் க்ளோஸ் பிரெண்ட்ஸ் … அவங்கள லவ் பண்ணா.. பிராப்ளம் சால்வ்தானே… ”
” என்னருந்தாலும் அவங்கள்ளாம் பெரிய பசங்கடி ”
” ஏய் விட்றி… அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. …நாம லவ் பண்றோம் … என்ன … ? ” மலருதா கேட்க … அரை மணதுடன் தலையை ஆட்டினாள் யுகநிதா !!!
☉ ☉ ☉
” இந்த ட்ரெஸ்.. ஓகேவாடி… ? ” ஆரஞ்சு வண்ண மிடியில் இருந்த. . மலருதா கேட்டாள் !
கருப்புக் கலர் லெக்கின்ஸில்.. கச்சிதமாக இருந்த. . யுகநிதா
”ம்.. ஓகே. . சூப்பரா இருக்க.. ! நான் ஓகேவா ? ” எனக் கேட்டாள்.
” நீ… டபுள் ஓகே. .. ! போலாமா?”
” டென்ஷனா இருக்குடி எனக்கு”
” ஏய் … சீ… வா… ” என யுகநிதாவின் கையைப் பிடித்து இழத்துப் போனாள் மலருதா !
மாடிப்படிகளில் ஏறி… மேல் போர்சனுக்குப் போனாரர்கள் !
ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார் சுதனின் அப்பா.!
இவர்களைப் பார்த்ததும் சிரித்து
” அட… வாம்மா…மலரு.. ! அது யாரு உன் பிரெண்டா .. ? ” எனக் கேட்டார்.
” ஆமா அங்கிள் .. என்னோட க்ளோஸ் பிரெண்டு. .. ” எனச் சிரித்தாள்.!
” வாம்மா… உக்காருங்க. . ” என யுகநிதாவைப் பார்த்துச் சொன்னார் .
இருவரும் சோபாவில் உட்கார்ந்தனர் !
” ஆண்ட்டி இல்லியா அங்கிள்..”
மலருதா கேட்டாள்.

” கிச்சன்ல இருந்தாம்மா… ” என்றவர் உள்ளே பார்த்துச் சத்தமாகச் சொன்னார். ” மாது.. ரெண்டு கப் காபி கொண்டு வா..கீழ் வீட்டுக் கொழந்தைங்க வந்துருக்காங்க…” யுகநிதாவைப் பார்த்துக் கேட்டார் ” உன் வீடு எங்கருக்குமா… ? ”
மலருதாவே பதில் சொன்னாள்
” அடுத்த தெருல அங்கிள் .. ”
” பேருமா… ? ”
”யுகநிதா. ..” அவளே சொன்னாள் .
” யுகநிதா. .. ம் … நைஸ் நேம்..! வெரி நைஸ்…! யாரு செலக்ட் பண்ணது… ? ”
” அம்மா. . ”
” குட் செலக்ஷன்…! பேரு மட்டுமில்ல.. நீயும் க்யூட் கேர்ள்தான். .. ! நீயும் செவந்த்துதான் படிக்கறியா.. ? ”
” ஆமா அங்கிள் … ஒரே கிளாஸ்… ஒரே ரேங்க்… ” எனச் சிரித்தவாறு சொன்னாள் மலருதா !
” நைஸ் கேர்ள்ஸ் …. ” என்றார்.
டிவியை ஒரு பார்வை பார்த்து விட்டு. .. மெல்லக் கேட்டாள் மலருதா. . ” எங்க அங்கிள் .. உங்க சன்னக் காணமாட்டக்குது… ? ”
” யாருமா.. சுதனா… எங்கயோ போனான்மா.. ”
அவரது மணைவி காபி கொண்டு வந்தாள் ! தட்டில் பிஸ்கெட்டோடு .. !
” ஹலோ.. ஆண்ட்டி .. ” என உரிமையோடு சிரித்தாள் மலருதா !
” ஹாய்… ஸ்வீட்டிமா..! யாரிது உன்னோட பிரெண்டா ? ” என யுகநிதாவைப் பார்த்துக் கேட்டாள்.
” ஆமா ஆண்ட்டி. . யுகநிதா ”
” உன் பிரெண்டும் உன்ன மாதிரியே க்யூட்டா இருக்காளே”
” ஆமா ஆண்ட்டி நாங்க ரெண்டு பேரும் எல்கேஜிலருந்தே..பிரெண்ட்ஸ் … ”
” குட்… ” காபியைக் கொடுத்து விட்டு அருகில் உட்கார்ந்து அன்பாகப் பேசினாள் !
☉ ☉ ☉
காலை நேரம். .. !!!
ஸ்கூல் யூனிஃபார்மில் இருந்த மலருதா மாடிப்படியருகே போய் நின்றிருந்தாள் . அவள் கையில் புத்தகம் .! படிப்பதுபோல பாவனை செய்தவளின் கவனமெல்லாம் மாடிப்படிகளின் மெலேயே இருந்தது.
படி இறங்கி வந்தான் சுதன் .
அவளது இதயம் எகிறியது.
அவன் பார்த்ததும் சிரித்து. ..
” குட் மார்னிங் ” என்றாள் !
” மார்னிங் … ” சிரித்தான்.
” கா… காலேஜ் .. கெளம்பிட்டிங்களா …? ” மெல்லிய படபடப்புடன் கேட்டாள் .!
” ம் … ! நீ ஸ்கூல் போகல … ? ”
” போகனும் ” சிரித்தாள் !
” ஓகே. .. பை ” என அவன் நகர..
” ஒ….ஒரு .. நிமிசம். .. ” என்றாள்.
நின்று அவளைப் பார்த்தான் !
” என்ன. .. ? ”
” இ…. இல்.. ல … வந்து. … உங்ககிட்ட. … கொஞ்சம்.. பேசனும். .. ”
” ம்… சொல்லு.. மலரு .. ”
” இ… இல்ல… அது… ” குரல் உள் அமுங்கியது ! மேலே பேசத்திராணியில்லாமல்.. புத்தகத்தை விரித்து. . அதனுள்ளிருந்து. . இரண்டு மடித்த காகிதங்களை எடுத்து நீட்டினாள் !
திகைத்தான் ! ” என்னது… ? ”
” லெ… லெட்டர்.. ” பயத்தில் கைகால் உதறலெடுத்தது.
” லெட்டரா…. ? ரெண்டிருக்கு? ”
” ஒண்ணு உங்களுக்கு. … ? ”
” இன்னொண்ணு… ”
” உங்க பிரெண்டுக்கு. .. ”
” பிரேமுக்கா.. ?”அவன் கேட்க
” மேல பேரு போட்றுக்கும் பாத்துக்கோங்க… ” என அவள் முடிக்க. .. மாடிப்படிகளிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த சுதனுடைய அப்பா பார்த்துவிட்டார் !
விலகி ஓடினாள் மலருதா !
தன் அப்பாவைப் பார்த்துவிட்ட சுதன்… காகிதங்களை. .. புத்தகத்தின் நடுவே மறைத்தான் .
கீழே வந்த அவனது அப்பா இயல்பாகக் கேட்டார்.
” என்னப்பா அது …. ? ”

” இ… இல்லப்பா… அது. .. ஒண்ணுல்ல… ” எனத் திணறினான் !
தோளில் கை போட்டார் ” நட போலாம் … ”
உள்ளே ஓடிய மலருதா ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.
அப்பாவும் மகனும். .. நடந்து போய்க் கொண்டிருந்தனர் .!!!