வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஏழு 41

மோகனின் உடலில் இருந்த அத்தனை தைரியம், பலம், தன்னம்பிக்கை எல்லாமும் ஒட்டு மொத்தமாக வேரோடு பிடுங்கி எறிந்தாற் போல் இருந்தது. தொடர்ந்து, எல்லா பக்கமும் அடி என்றால் அவன் என்ன செய்வான்?

முதலில் மதன், பின் மனைவி, அதன் பின் முன்ன பின்ன தெரியாத வினோத், இப்ப ஆஃபிஸ்ல, தான் இதுவரை அதிகாரம் செலுத்தியவர்கள், எல்லாருமே தன்னை அடிக்கிறார்கள். மிகச் சுலபமாக எள்ளி நகையாடுகிறார்கள்! இதெல்லாம் தொடர்ச்சியாக நடக்கிறது! என்ன நடக்கிறது! மோகனுக்கு வாழ்வின் மீது, அளப்பரியாத பயம் எழுந்தது.

என்ன சவுண்டே காணோம்? அவ்ளோதானா உன் வீரமெல்லாம்? எப்ப எங்களை வேலையை விட்டு தூக்கப் போற? இங்க தூக்கிதான் பாரேன்!

பிரம்மை பிடித்தவாறு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் தயங்கித் தயங்கி கேட்டான்.

உ… உங்களுக்கு எப்படி இதெல்லாம்….

நாந்தான் சொன்னேன், என்ற படி உள்ளே வந்தது, நம்ம ஹீரோ மதன் தான்!

ம… மதன்! நீ… நீ… நீயா? நம்ப வெச்சு கழுத்தறுத்துட்டியே!

இவ்வளவு நேரம் பெரும்பாலும் அமைதியாக இருந்த, அடிக்காத தேவி பொங்கி விட்டாள்.

டேய்… நம்பிக்கைத் துரோகத்தைப் பத்தி நீ பேசுறியா? நான் பண்ணாமியே, பணத்தை திருடினேன்னு பொய் குற்றம் சொன்னியே, உனக்கு என்ன தகுதி இருக்கு? அதுக்காக என்னை எப்டியெல்லாம் சித்ரவதை பண்ண? உன்னை என்று காலில் இருந்த செருப்பைக் கழட்டி அடிக்கச் சென்றாள்.

டக்கென்று இடையில் வந்த மதன், இரும்மா என்று தடுத்தான்.

நீங்க விடுங்கண்ணா! என் அப்பா வயசு இவனுக்கு. இவன் பண்ண கொடுமைக்கு, இவனை, என்று அழுது கொண்டே சொன்னாள்.

இருப்பதிலேயே இளையவள் என்பதால், அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை அனைவராலும் உணர முடிந்தது.

இல்லைம்மா, நீ அவனை அடிக்க வேணம்னு சொல்லலை. இவ்ளோ நல்ல விஷயத்தை செய்யப் போற, வீடியோ எடுக்க வேணாமா? என்று செல்லை எடுத்து ஆன் செய்தவன், இப்ப அடிம்மா என்றான்.

தேவி சராமரியாகக் கொடுத்த செருப்படியில் அவளுடைய ஆவேசம் நன்கு தெரிந்தது. மற்ற இருவரும் கூட அடித்தனர். கூடவே, தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுவியா? பண்ணுவியா என்று கேட்டு கேட்டு அடித்தார்கள்.

ஓய்ந்து போய் நின்றவுடன், மதன் சொன்னான். இனி அவனால உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. இந்த வேலைக்கும் எந்த பிரச்சினையும் வராது. இதை எல்லாத்தையும் மறந்து, சந்தோஷமா இருக்கனும், என்ன?

ரொம்ப தாங்ஸ்ண்ணா என்று சாந்தியும், ப்ரியாவும் சொல்ல, தேவியோ, மதன் அருகில் வந்து, அவன் கையைப் பிடித்து, ரொம்ப தாங்ஸ்ண்ணா! உங்களை என் அண்ணனா நினைச்சி சொல்லுறேன். வாழ்க்கையில என்னிக்கும் உங்களை மறக்க மாட்டேன். வயசு கம்மின்னாலும் சொல்லுறேன்… நீங்க ரொம்ப நாளைக்கு சந்தோஷமா இருக்கனும். உங்க குடும்பமே நல்லாயிருக்கனும் என்று நெகிழ்ந்தாள்!

அவளது அண்ணா என்ற அழைப்பும், அவள் பேச்சும், அதில் இருந்த அன்பும், மதனையே ஆட்டியிருந்தது. பெண்களின் மேலேயே நம்பிக்கை இல்லாதிருந்த அவனுக்கு, அவன் அக்கா, அந்த அவள், இவர்களைத் தாண்டி, இந்த தேவியின் பரிசுத்தமான அன்பில் அவன் மனம் தெளிவடைந்தது! இந்த சாந்தி, ப்ரியாவும் கூட, அவனிடம் காட்டிய நன்றி, அன்பில், அவன் இதுவரை தனக்குத் தானே போட்டிருந்த இரும்புக் கதவுகளை, மன இறுக்கத்தை எல்லாவற்றியும் உடைத்தெறிந்தான்.

ஒரு வகையில், இந்த வாழ்க்கையை மிக அழகாக வாழ வேண்டும், ரசிக்க வேண்டும், முடிந்த வரை மற்றவர்களுடன் கலந்து நிற்க வேண்டும் என்ற எண்ணமும், தூய எண்ணங்கள் மனதில் நிறைந்து நிற்பதால் அது கொடுத்த தெம்பும், புத்துணர்ச்சியும், அவன் மனதிற்கு மிகவும் இதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இன்னமும், பிரச்சினை இருக்கிறதுதான்.

தன் மனம் கவர்ந்தவளுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சினை தீரவில்லை. சொல்லப் போனால், அது தீரக் கூடிய ஒன்றா என்று கூடத் தெரியவில்லை. ஆனாலும், இனி வாழ்க்கையை ரசிக்க முடியும். தன் அக்காவுடன் மட்டுமல்ல, மற்ற எல்லாருடனும் மிக மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அவனுக்குப் புரிந்தது.

இந்த பழிவாங்கலே, தனக்கான ட்ரீட்மெண்ட் என்று அவன் நினைத்திருந்தது, மிகவும் உண்மையானது.

புன்னகையுடன், அண்ணன்னு சொல்லிட்டு, எதுக்கு தாங்ஸ்? ம்ம்ம்? போங்க! போய் சந்தோஷமா இருங்க! போங்க என்று அவர்களை வழியனுப்பியவன், ஓய்ந்து போய் நின்ற மோகனைப் பார்த்துச் சொன்னான்.

நான் இன்னிக்கு வீட்டை காலி பண்ணிடுவேன் மாம்ஸ்! இன்னும் கொஞ்ச நாள்ல, என் அக்கா இங்க வீட்டுக்கு வந்துடுவாங்க! நீங்க வேணும்னா, என் அக்கா மூலமா, நான் இப்படியெல்லாம் நடந்துகிட்டேன், நீயே நியாயம் சொல்லுமான்னு கேட்டுப் பாருங்க ஓகேயா?

அப்புறம், உண்மையாலுமே நேத்து வினோத் கூட நடந்த விஷயமெல்லாம் ப்ளூ ரே ப்ரிண்ட்ல, கிரிஸ்டல் சவுண்ட் க்ளாரிட்டில வீடியோவா என்கிட்ட இருக்கு! என்னிக்காச்சும் யூஸ் ஆகும். வினோத்தை அனுப்புனவனே நாந்தானே! ஆனாலும், நீ இவ்ளோ கேவலமானவனா இருப்பன்னு நினைக்கவே இல்லை மாம்ஸ்! இந்த லட்சணத்துல நாந்தான் ஆம்பளைன்னு, என்கிட்டயும், என் அக்காகிட்டயும் சவடால் பேச்சு வேற!

வீட்ல அத்தையை கேட்டதா சொல்லுங்க மாம்ஸ்! வரட்டுமா?

இனி அவன், புது மதன்! அவன் காதல் கை கூடுமா?

இப்பொழுது!

சோஃபாவில், கலங்கியபடி அமர்ந்திருந்த மதனும், அவன் அக்காவும், வெளியில் சத்தம் கேட்டு நிமிர்ந்தனர். ஹரீஸ்ஸுடன் நுழைந்த அந்த நபர், மதனின் அக்காவைப் பார்த்த பார்வையில் எந்தளவு அன்பு இருந்ததோ, அதே அளவிற்கு கோபமும் இருந்தது. அந்தக் கோபத்தில், அந்த நபரின் கண்கள் கலங்கியிருந்தது!

அந்த கோபத்தின் பின்னாலிருந்த நியாயத்தை உணர்ந்த மதனின் அக்கா, அந்த நபரை நெருங்கி, கண்ணீர் மல்க, எ.. என்னை மன்னிச்…

அவளால் பேச முடியாத அளவிற்கு கண்ணீரும், உணர்ச்சியும் பெருக்கெடுத்தது.

ஏறக்குறைய அதே மனநிலையில்தான் அந்த இன்னொரு நபரும் இருந்தார். அந்த நபருடைய கண்களும் கலங்கியிருந்தாலும், மதனின் அக்காவின் உணர்ச்சியைப் பார்த்து, அந்த நபரும் உணர்ச்சி வயப்பட்டிருந்தாலும், முழுக் கோபம் தீராததால், முகம் கல்லைப் போல் இறுகியிறுந்தது. கோபமும், வருத்தமும், ஒன்று சேர பிரதிபலித்தது.

கண்ணைத் துடைத்த, மதனின் அக்கா, இப்பொழுது கொஞ்சம் நிதானமடைந்திருந்தாள். தனக்காக மட்டுமல்ல, மதனுக்காகவும், ஏன், எதிரிலிருக்கும் அந்த நபருக்காகவும், தான் நிதானமாக, இந்தச் சிக்கலை கையாளுவது அவசியம், அதற்கான பொறுப்பு தனக்கிருக்கிறது என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்! ஆகையால், கண்ணீரைத் துடைத்த படி கேட்டாள்.

என் கூட பேச மாட்டியா? என்று கேட்டவாறே, நடுங்கும் கையால், எதிரிலிருக்கும் நபரின் கன்னத்தை வருடினாள். எ… என்னை மன்னிக்க மாட்டியா?

எவ்வளவு கோபம் இருந்தாலும், மதனின் அக்காவின் அன்பு, எப்பொழுதும் பரிசுத்தமானது என்று தெரிந்திருந்த அந்த நபரால், அந்த உணர்வைத் தாங்க முடியவில்லை.

Updated: April 1, 2023 — 12:31 pm

1 Comment

  1. Raji ma

Comments are closed.