யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 8 164

ஆனால் இப்போது அந்த ஒரு சொந்தமும் இல்லை என அவன் மனது கலங்கியது … இதற்கு முன் ரவி இந்த மாதிரி சாவு வீட்டிற்க்கு சென்ற அனுபவம்லாம் கிடையாது. .. கனத்த இதயத்துடன் என்ன செய்ய வேன்டும் என்று தெரியாமல் நின்றிருந்தான். அவன் கால்கள் தானாகவே கூட்டத்தில் புகுந்து நடக்க தொடங்கியது.. சுவாதியும் அவள் கணவரும் பின் தொடர்ந்தனர்.. அங்கு உடலை அனைவரின் பார்வைக்கு படுமாறு நீண்ட மேசையின் மீது கிடத்தி படுக்க வைத்திருந்தனர். . சுற்றி அக்கம்பக்கத்தினர் மற்றும் தூரத்து உறவினர்கள் சூழ்ந்திருந்தது அழுது ஒப்பாரி வைத்திருந்தனர்.. ரவி அருகில் சென்று இறந்த தன் சின்ன பாட்டியின் உடலை பார்த்தவாரே நின்றிருந்தான். .

வடிவுக்கரசியின் சித்தியான இந்த பாட்டிக்கு இங்கு இந்த வீடும் மற்றும் 45 ஏக்கர் விளையும் நிலமும் இருக்கிறது. .* வடிவுக்கரசியின் அம்மா , அப்பா ,தம்பி மற்றும் வடிவு எல்லாரும் இருபது வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு திடீரென காலிசெய்து யாருக்கும் தெரியாமல் காஞ்சிபுரத்திற்கு சென்றுவிட்டனர். . இப்போது வரை யாரும் இங்கு வந்ததில்லை. .. எனவே இப்போது இந்த வாரிசு இல்லாத பாட்டியின் சொத்தை தான்தான் அடுத்த வாரிசு என்று சொல்லி சொத்தை அபகரிக்க பாட்டியின் கணவரின் தூரத்து சொந்தங்கள் குடும்பத்துடன் உடலை சுற்றி அமர்ந்து நீலிக்கண்ணீர் விட்டு கொண்டிருந்தனர்..

ரவிக்கு ஏதோ சொல்ல முடியாத துக்கம் தொண்டையை அடைத்தது.. இந்த உணர்வு இதற்க்கு முன் அவன் உணர்ந்ததில்லை.. திடிரென அவனுக்கு அழுகை பீறிட்டு வந்தது அதை அடக்கி கொண்டு கால்களை தொட்டு வணங்கிவிட்டு பாட்டியின் கால்களுக்கு அடியில் மேசையில் தன் முகத்தை குனிந்தவாரே அமர்ந்தான்.. நீலிக்கண்ணீர் வடித்த தூரத்து குடும்பமெல்லாம் “யார் இவன்” என்றவாறே யோசித்து கொண்டிருந்தார்கள். அங்கு ஊரின் வழக்கபடி மாலை ஐந்து மணிக்கு தான் சுடுகாட்டிற்க்கு உடலை எடுத்து சென்று எரிப்பார்கள்..

மாலை மணி 4:50 ஆனது..

உடலுக்கு கொல்லி வைக்கும் நபருக்கே சொத்தில் அதிக உரிமை என்பதால் அந்த நீலிக்கண்ணீர் குடும்பங்கள் தங்களுக்குள்ளேயே யார் பாட்டியின் உடலுக்கு கொல்லி வைப்பது என வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது ..

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த சுவாதி அங்கிருந்த ஊர் தலைவரிடம் ” ஐயா… பேரனே இங்க இருக்கும் போது எதுக்கு யார்யாரோ கொல்லி வைக்கனும்” என்றாள்.. சுவாதியின் இந்த பேச்சை கேட்டு அனைவரும் அமைதி ஆனார்கள்..

ஊர் தலைவர் ” என்ன சுவாதி. .. சொல்ற… பேரனா??? அந்தம்மாக்கு தான் பிள்ளைகளே இல்லையே… அப்படி இருக்க எப்படி பேரன் இருக்க முடியும்? ?” என்றார்.

” அந்தம்மாக்கு இல்ல தான்… ஆனா… அவங்க கூட பொறந்த அக்காவுடைய பேரனும் இவங்களுக்கு பேரன் முறை தானே…!!!” என்றாள். இப்போது அந்த சதிகார குடும்பங்களுக்கு எங்கே சொத்து கைவிட்டு போய்விடுமோ என்று திருதிருவென முழித்து கொண்டிந்தனர்…

” யாரு…. ராதா..வா.??? அவங்க தான் 20 வருஷமா எங்க இருக்கங்கனு யாருக்குமே தெரியாதே!!” என்றார்.

” ஏன் தெரியாது…. அவங்க காஞ்சிபுரத்தில இருக்காங்க..” என்றாள்

“சரி மா….. இப்ப எப்படி அங்க தகவல் சொல்லி அவங்கல வரவச்சி பேரன் கையால கொல்லி போடமுடியும்..” என கூறினார்.

1 Comment

  1. Eagerly waiting for next part konja sikiram upload pannunga

Comments are closed.