“அடடே! சார்! நான் ஒரு கல்யாணத்துக்குக் கிளம்பிட்டிருக்கேன். சாரி சார்!”
சோர்வோடு பேச்சைத் துண்டித்து விட்டு பெருமூச்சு விட்டார் மூர்த்தி. அவருக்கு மனைவியின் ஞாபகம் வந்தது. உடனே அவளைத் தொடர்பு கொண்டார்.
“என்னான்னா?” மறுமுனையில் மனைவியின் குரல் கேட்டது.
“ஆத்திலே தானே இருக்கே! நேக்குத் தலைவலிக்கறது..கெளம்பி வறேன்!”
“மகராஜனா வாங்கோ! இதுக்கு போன் பண்ணணுமா?”
போனை வைத்த திருமதி. மூர்த்தி அவரது வீட்டில் அவசரப்படுத்தினாள்.
“அம்பி, கிளம்பு! அவர் தலைவலீன்னு கிளம்பி வந்திண்டிருக்கார்!”
“இன்னும் ஒண்ணும் ஆரம்பிக்கவேயில்லையே மாமி!” என்று பரிதாபமாக அலறினான் – ஸ்ரீதர்.
“என்னமோ இன்னிக்குத் தான் முத முதலாப் பண்ணற மாதிரீன்னா பேசிண்டிருக்கே? அதான் ஆசை தீர எத்தனையோ நாள் பண்ணினேயொ இல்லையோ? கிளம்பு ஸ்ரீதர்…ஆத்துக்குப் போ..அங்கே கிரிஜா இருப்பாளோன்னோ…? மிச்சம் மீதியெல்லாத்தையும் அவ கிட்டே வைச்சுக்கோ…”
“அவ எங்கேயோ கல்யாணத்துக்குப் போறேன்னு சொல்லியிருந்தாளே?” என்று தலையை சொரிந்தபடியே, உடைகளை சேகரிக்க ஆரம்பித்தான் ஸ்ரீதர்.