கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 20 10

இவன் உதடுகள்ல வார்த்தைகள் மேனர்ஸோட வருது; ஆனா மனசுல அது கம்மியோ? வேஷம் அதிகமோ? யார் இவன்? அவன் புன்னகையில் மெலிதான அலட்சியமும், கர்வமும் கலந்திருப்பதாக சுகன்யாவுக்குப் பட்டது. தன் மனதுக்குள் மெலிதாக அதிர்ந்தாள் சுகன்யா. அதிர்ந்தவள் மெதுவாக கதவையும் திறந்தாள்.

“வாப்பா உள்ள வா … நீ மட்டும் தான் வர்றயா? உன் அம்மா வரலையா?” தன் பின்னால் பாட்டியின் குரல் வந்ததும், பாட்டிக்கு வழி விட்டு, சுகன்யா சற்றே வரண்டாவில் ஒதுங்கி நின்றாள்.

“பாட்டீ … நீங்க முதல்ல, நான் யாருன்னு உங்க பேத்திக்கிட்ட சொல்லுங்க; அவங்க என்னை உங்க வீட்டுல திருட வந்தவனோன்னு சந்தேகத்தோட பாக்கறாங்க” அவன் இப்போது கலகலவென சிரித்தான்.

“உனக்கு எல்லாத்துலேயும் கிண்டல்தாண்டா; நீ யாருன்னு சுகன்யாவுக்கு எப்படித் தெரியும்? அவ கதவைத் தொறக்க தயங்கினதுல தப்பே இல்லே? பேசியவாறே கனகா வீட்டுக்குள் நடந்தாள்.

“சுகன்யா … யூ ஆர் வெரி ப்ரெட்டி அண்ட் ஸோ ஸ்வீட் இன் திஸ் ட்ரெஸ்! நீங்க இவ்வளவு மாடர்னாவும் ட்ரெஸ் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது…” சுகன்யாவுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு, அவளை நெருங்கி, தன் அடித்தொண்டையில் கிசுகிசுத்த அவன் உதடுகளில் ஒரு அசாத்தியமான கவர்ச்சி இருந்தது.

அவன் பேச்சைக் கேட்டதும் சுகன்யா ஒரு வினாடி தன் நிதானத்தை இழந்தாள்; இருந்த போதிலும் முதலில் அவன் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளை மனதில் அலைக்கழிக்க அவளும் மெல்லிய குரலில் ஒரு மரியாதைக்காக
“தேங்க் யூ” என முணுமுணுத்தவள், தன் பாட்டியின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

அடுத்த நொடி நான் ஏன் இந்த ஸ்டுபிட்டோட காம்பிளிமென்ட்டுக்கு தேங்க்ஸ் சொன்னேன்? சுகன்யாவுக்கு தன் மீதே சட்டென எரிச்சல் எழுந்தது. வர வர நானும் ஒரு இடியட்டாத்தான் பிஹேவ் பண்றேன்.

“ஓ மை காட் …” வந்தவன் இதயம் ஒரு வினாடி நின்றது. பின் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.

தன் முன்னால் மெதுவாக நடந்த சுகன்யாவின் சீராக அசைந்த இடுப்பையும், வாளிப்பான அவளுடைய பருத்த தொடைகளையும், அவள் கால்களின் வீச்சையும், அதனால் அவளுடைய பின்னெழில்கள் ஆடிய நடனத்தையும் கண்ட சம்பத், சுகன்யாவின் பின்னழகை முழுமையாக ரசிக்க எண்ணி, தன் மனம் சிலிர்க்க, வீட்டுக்குள் செல்லாமல் கதவருகிலேயே நின்றுக்கொண்டிருந்தான்.

வந்தவன் கதவருகில் நின்று தன் குறுகுறுக்கும் கண்களால், திருட்டுப் பார்வையால், தன் உடலை முழுதுமாக ஸ்கேன் செய்வதை சுகன்யா நன்றாக உணர்ந்தாள். அவள் மனதிலிருந்த எரிச்சல் மெல்ல மெல்ல சினமாக உருவெடுக்க தொடங்கியது.

“என்னங்க … நம்ம ராணியோட பையன் சம்பத் வந்திருக்கான் …”

“வாப்பா … நல்லாயிருக்கியா … இப்ப பெங்களூர்லதானே நீ வேலை செய்யறே? லீவுல வந்திருக்கியா?” சிவதாணு சோஃபாவில் சாய்ந்திருந்தார்.

“நல்லாயிருக்கேன் தாத்தா … நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுக்குள் வந்தவுடன், தனக்கென்னவோ சுகன்யாவிடம் அதிக உரிமை கிடைத்துவிட்டது போல், அவளை அவன் இப்போது நேராகப் பார்த்தான். அவன் பார்வை மீண்டும் மீண்டும் அவள் மார்பில் சென்று படிந்தது. அவன் திருட்டுப் பார்வையை கண்டதும், எழுந்து சென்று அவனை ஓங்கி அறையலாமா என்றிருந்தது சுகன்யாவுக்கு.

சுகா, ராணின்னு நம்ம உறவுல உனக்கு ஒரு அத்தை இருக்கறதை நீ கேள்வி பட்டு இருப்பே; ஆனா பாத்து இருக்க மாட்டே. ராணியோட பிள்ளை இவன்; பேரு சம்பத்; பெங்களூர்ல இஞ்சீனியரா வேலை செய்யறான். உங்கம்மாவுக்கு ராணியை நல்லாத் தெரியும்; ரெண்டு பேரும் ஓரே காலேஜ்ல படிச்சவங்களாம். பாம்பேயிலே வேலையாய் இருந்த இவன் அப்பா இப்பத்தான் ரிடையராகி இங்க வந்து செட்டிலாயிருக்கான். சம்பத், பாம்பேயில அப்பா அம்மா கிட்டவும், இங்கே இவனோட தாத்தா வீட்டுலேயும் அல்லாடிக்கிட்டு கிடந்தான். இங்க ஊருக்கு வரும் போதெல்லாம் எங்களை ஒரு தரம் தவறாம பாத்துட்டு போவான்.

“அப்படியா பாட்டி; ராணி அத்தை ரெண்டு மூணு தரம் எங்க வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட பேசிட்டு போறதை நான் பாத்து இருக்கேன். நான் அவங்க கிட்ட அதிகமா பேசினது இல்லே; இவரைப் பத்தியும் எனக்கு தெரியாது.” சுகன்யா மையமாக பேசிக் கொண்டே தன் செல் போனை ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்தவள், திடுக்கிட்டு போனாள்.

“டேய் சம்பத்து, என் பையன் குமாரோட பொண்ணு இவ; எங்க பேத்தி, மெட்ராஸ்ல வேலை செய்றா…” கனகா அவர்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்தாள்.

மை காட் .. என் செல் ஆஃப் ஆகி கிடக்கு. என் செல்லை எப்ப நான் ஆஃப் பண்ணேன்? ரெண்டு நாள் முன்னே செல்வா மேல இருந்த எரிச்சல்ல, போனை டேபிள் மேல தலையை சுத்தி விசிறி எறிஞ்சேன். அதுக்கு அப்புறம் இன்னைக்கு காலையிலத்தான் அம்மா ஸ்கூலுக்கு போறாளே, அவசரத்துக்கு இருக்கட்டும்ன்னு தேடி எடுத்துகிட்டு வந்தேன். அப்போ ரெண்டு நாளா இது ஸ்விட்ச் ஆஃப் ஆகிக் கிடக்கா? என்னாச்சு இதுக்கு; ஆன் ஆக மாட்டேங்குது; என்னப் பிராப்ளம் இதுல? சனியன் … கெட்டு கிட்டு போச்சா?

நேத்து செல்வா எனக்கு போன் பண்ணியிருந்தால்…? போனை கெடுத்து வெச்சுட்டு நான் என்னமோ செல்வாவை தேவையில்லாமா திட்டிக்கிட்டு இருக்கேன். ஆனா போன் கெட்டுப் போன கதையெல்லாம் சனி, ஞாயிறு ரெண்டு நாளாத்தானே? அந்த தீவெட்டி தடியன் செல்வாதான் ஒரு வாரமாவே எங்கிட்ட பேசலையே? செல்வாவின் நினைவு மனதுக்குள் வந்த பின், தன் பாட்டி பேசியது எதுவும் சுகன்யாவின் காதில் ஏறவேயில்லை.