எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 51

அசோக் தட்டு தடுமாறி கேட்டான். அவள் எதுவுமே சொல்லவில்லை. ஓரிரு வினாடிகள் அவன் முகத்தையே அமைதியாக பார்த்தவள், பிறகு மீண்டும் தனது தட்டை பார்த்து குனிந்து கொண்டாள். அசோக்கும் இப்போது தைரியம் பெற்றவனாய் அவளுக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்துகொண்டான். பாஸ்தாவை ஒரு ஸ்பூன் அள்ளி வாய்க்குள் தள்ளியவன், மெல்ல தலையை நிமிர்த்தி எதிரே இருந்தவள் மீது பார்வையை வீசினான்.

அவள் இவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. சாப்பாட்டிலேயே கவனமாக இருந்தாள். மழுங்கிப்போன கத்தியால் பிஸ்ஸாவை துண்டம் செய்வதும், ஃபோர்க்கால் அந்த துண்டை குத்தி எடுத்து வாய்க்குள் திணிப்பதும், உதடுகள் அழகாக அசைய அந்த உணவை சுவை பார்ப்பதுமாக இருந்தாள். மேலும் சில வினாடிகள்..!! பிறகு அவள் ஒருமுறை எதேச்சையாக இவன் முகத்தை ஏறிட்ட போது, அசோக் அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அவசரமாக சொன்னான்.

“ஹாய்..!! ம்ம்ம்ம்… எ..எனக்கு.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..!!”

அவள் இப்போது நெற்றியை சுருக்கி ‘என்ன..?’ என்பதுபோல இவனை பார்க்க, அசோக்கே தொடர்ந்தான்.

“ஆ..ஆக்சுவலா நான் ஒரு த..தத்தி.. எனக்கு இதுலாம்..” அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

“வாட்..??” அவள் இடைமறித்து கேட்டாள்.

“இ..இல்லைங்க.. ஆக்சுவலா..”

“ஹலோ.. கொ..கொஞ்சம் சத்தமா பேசுறீங்களா.. ப்ளீஸ்..?? எ..எனக்கு காதுல கொஞ்சம் ப்ராப்ளம்.. காது சரியா கேட்காது..!!”

அவள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, பரிதாபமான குரலில் சொல்ல, அசோக் இப்போது மெலிதாக அதிர்ந்தான். ‘என்னது..?? காது.. கேக்காதா..?? இது என்னடா புதுப்பிரச்னை..??’ என்று ஓரிரு வினாடிகள் தடுமாறினான். அவளை ஒருமுறை இரக்கமாக ஒருபார்வை பார்த்தான். அப்புறம் உடனடியாய் சமாளித்துக் கொண்டு, சற்றே சத்தமான குரலில் மீண்டும் ஆரம்பித்தான்.

“ஒ..ஒன்னுல்லங்க.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. நான் ஒரு..”

“இல்லைங்க.. எனக்கு சுத்தமா கேக்கல.. இன்னும் கொஞ்சம் சத்தமா.. ப்ளீஸ்..!!” அவள் கெஞ்சலாக சொல்ல, குழம்பிப்போன அசோக்

“ஹையோ.. நான் ஒரு தத்தின்னு சொன்னேங்க..!!” என்று கத்தியே விட்டான்.

உடனே அந்த இடத்தில் சட்டென்று ஒரு நிசப்தம்..!! அவர்கள் அமர்ந்திருந்த டேபிளை சுற்றிய ஐந்தாறு டேபிளில் அமர்ந்திருந்தவர்கள்.. சாப்பிடுவதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டு.. சடக்கென திரும்பி அசோக்கை பார்த்தார்கள்..!! அசோக்கிற்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை..!! ‘எல்லாரும் ஏன் என்னையே பார்க்கிறார்கள்..??’ என.. சிலவினாடிகள் திருதிருவென விழித்தவனுக்கு.. அப்புறம்தான் ‘தானே தன்னைப் பற்றி கேவலமாக சொல்லி கத்திவிட்டோம்’ என்ற உண்மை உறைத்தது..!!

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

சிரித்தது வேறு யாரும் அல்ல.. இவனுக்கு எதிரே அமர்ந்திருந்தவள்தான்..!! அவளுடைய பற்கள் எல்லாம் பளீரிட.. எளிறுகள் எல்லாம் பளிச்சென தெரிய.. ஒரு கையால் வயிறை பிடித்தவாறு.. இவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்..!! அசோக்கிற்கு லேசாக அடிவயிறில் கிலி கிளம்ப ஆரம்பித்தது..!! ‘என்ன இது.. ஆரம்பமே ஒன்னும் சரி இல்லையே..??’ என்று விளக்கெண்ணெய் குடித்துவிட்டவன் மாதிரி ‘பே’ என்று விழித்தான். எல்லோரும் இன்னும் இவனையே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது அசோக் அவர்கள் எல்லாரையும் தனித்தனியாக பார்த்து ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தி, அவரவர்களின் பார்வையை திருப்பிக் கொள்ள செய்தான்.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!” அவள் இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். அசோக் இப்போது சற்றே கடுப்பாக அவளை பார்த்தான்.

“ஹலோ ஹலோ.. போதுங்க.. நிறுத்துங்க..!!”

“ஹையோ.. கடவுளே.. முடியல என்னால.. ஹாஹா..!!”

“ஷ்ஷ்… ப்பா.. ஏங்க இப்படிலாம்..??”

“எப்படிலாம்..??” அவள் இப்போது சிரிப்பை நிறுத்திவிட்டு இவனை கூர்மையாக பார்த்தாள்.

“உங்களுக்கு காது நல்லா கேட்குந்தான..??” அசோக் சற்றே எரிச்சலுடன் கேட்க,

“கண்டுபிடிங்க பாக்கலாம்..!! உங்களுக்கு மூளை நல்லா வேலை செய்யுந்தான..??” அவள் கிண்டலாகவே பதில் சொன்னாள்.

“என்னங்க நீங்க.. வந்ததுல இருந்து ஏடாகூடமாவே பேசிட்டு இருக்கீங்க..??”

“ம்ம்.. நீங்களுந்தான் வந்த விஷயத்தை மறந்துட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க..??”

“ஹையோ.. அதைத்தாங்க சொல்ல வந்தேன்.. அதுக்குள்ள நீங்க..”

“சரி.. இப்போ சொல்லுங்க..!!” அவள் படக்கென சொல்லிவிட்டு அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்க்க,

“அ..அது.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. ஆக்சுவலா நான் ஒரு தத்..” என்று ஆரம்பித்த அசோக் பட்டென நிறுத்தி,

“இல்ல.. நான் வேற எங்கயாவது இருந்து ஆரம்பிக்கிறேன்..!!” என்று பரிதாபமாக சொன்னான்.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

“ஹலோ.. சிரிக்காதிங்க ப்ளீஸ்..!!”

“சரி சிரிக்கல.. மேல சொல்லுங்க..!!”

அப்படி சொன்னாலும், அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாயைப் பொத்தியவாறு சிரித்துக் கொண்டேதான் இருந்தாள். அசோக் இப்போது சற்று நிதானித்தான். ஆரம்பத்திலேயே அவள் செய்த கலாட்டா, அவனுக்குள் ஒரு படபடப்பை கிளப்பி விட்டிருந்தது. பேச வேண்டும், ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று குழம்பினான். பிறகு அந்த குழப்பத்துடனே..

“மொ..மொதல்ல ரெண்டு விஷயங்க..” என்று ஆரம்பித்தான்.

“என்ன..??”

1 Comment

  1. Varakkal thangal

Comments are closed.