“அந்த கொலைலாம் பண்றது யார் தம்பி..??” என்று பரந்தாமன் அசால்டாக கேட்டார். அவர் அப்படி கேட்டதும் ஓரிரு வினாடிகள் அவரையே திகைப்பாக பார்த்த அசோக், அப்புறம்
“இ..இருங்க ஸார்.. நான் ஒவ்வொரு ஸீனா சொல்றேன்.. அப்போத்தான் நல்லாருக்கும்.. இப்போவே க்ளைமாக்ஸை சொல்லிட்டா உங்களுக்கு சுவாரசியம் போய்டும்..!!” என்று பரிதாபமாக சொன்னான்.
“ஹாரர்னா..?? எந்த மாதிரி ஹாரர் தம்பி..??” அவர் கேள்வியை மாற்றினார்.
“சூப்பர் நேச்சுரல் ஹாரர்..!!” அசோக் கெத்தாக சொல்ல,
“ஹ்ஹ.. பேய்ப்படமா..??” அவர் கேலியாக கேட்டார்.
“ஆமாம் ஸார்..!!”
“அப்போ.. பேய்தான் இந்தக்கொலைலாம் பண்ணுதா..??”
“ஆ..ஆமாம் ஸார்..!!”
‘கதை சொல்கிற சுவாரசியத்தையே இந்த ஆள் காலி செய்துவிட்டாரே’ என்று நொந்துபோன குரலில் சொன்னான் அசோக். அவரோ தனது கனத்த சரீரம் குலுங்கும் அளவிற்கு ‘ஹாஹா..’ என்று கனைத்தார். கிண்டல் தொனிக்கும் குரலில் சொன்னார்.
“என்ன தம்பி நீங்க.. நான் உங்ககிட்ட இருந்து என்னன்னவோ எதிர்பார்த்தேன்.. நீங்க என்னடான்னா.. பேய், பூதம், ரத்தக்காட்டேரின்னு சப்புன்னு முடிச்சுட்டீங்க..??” அவர் சொன்னதைக்கேட்டு சற்றே அதிர்ந்த அசோக்,
“ஸார்.. நீங்க ஒரு தடவை கதையை முழுசா கேளுங்க ஸார்.. அப்புறம் சொல்லுங்க.!!” என்று அவசரமாக சொன்னான்.
“அவுட்லைனே புடிக்கலன்றேன்.. அப்புறம் கதையை கேட்டு என்ன ஆகப்போகுது தம்பி..?? வேற ஏதாவது ஸ்டோரி இருந்தா சொல்லுங்க..!!”
“வே..வேறன்னா..”
“வேறன்னா வேறதான்..!! வேற ஏதும் ஸ்டோரி உங்கட்ட இல்லையா..??”
“இ..இருக்கு.. ஆனா..” அசோக் இழுக்க,
“அதுவும் பேய் ஸ்டோரியா..??”
“ஆ..ஆமாம்..!!”
“ஹ்ம்ம்… இன்னொரு பேய்.. இன்னொரு பத்து பதினஞ்சு பேரை கொல்லுதா..??”
“ம்ம்..!!”