இல்ல சார் அதுலம் ஏதும் வேணாம் சார் 100

மதன் “சார் எனக்கு வேற எந்த வழியும் இல்லையா சார் மறுபடி நான் 3 இயர் படிசெதான் ஆகணுமா நீங்க தான் சார் எனக்கு ஹெல்ப் பண்ணனும் ”

மாணிக்கம் ” மதன் என்னால எதுமே பண்ண முடியாது டா சாரி இத பத்தி நாம இனி பேச வேண்டாம் ”

மதன் ” சரி சார் ஓகே சாரி நான் கெளம்புறேன் சார் மணி வேற ஆய்ட்டு ”

மாணிக்கம் ” மதன் நீ தெளிவா இல்ல நைட் தங்கிட்டு காலம்புர போ”

மதன் ” சார் இல்ல சார் ”

மாணிக்கம் ” சொன்னா கேளு … நா பொய் டின்னெர் ரெடி பண்றேன் நீ உக்காந்து இரு ” என்று சொல்லிவிட்டு தள்ளாடியபடி சமையல் அறைக்கு சென்றார் .

இப்படி ஆகிவிட்டதே என்று என்னை நொந்தபடி உட்காந்திருந்தேன் .
சரி சமையல் அறைக்கு சென்று அவருக்கு உதவலாம் என சென்றேன். இருவரும் சேர்ந்து தோசை உற்றி எடுத்து வந்தோம் .

சாப்பிட தொடங்கினோம் .தொலைகாட்சியில் பழைய விஸ்வநாதன் பாட்டு மெல்லிய ஓசையுடன் ஓடிகொண்டிருந்தது . மாணிக்கம் அதை மெல்லமாக முனுமுனுத்தபடி சப்பிடுகொண்டிருந்தார் .

மாணிக்கம் ” என்ன மதன் என் சமையல் எப்படி ?”

மதன் ” நல்ல இருக்கு சார் , ரொம்ப நாள் கழிச்சு வீட்டு சாப்பாடு சாபிடுறேன் ”

மாணிக்கம் ” உன் சொந்த ஊர் எது ? அப்பா என்ன பண்றாங்க ?”

மதன் ” சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் ஒரு கிராமம் சார் , அப்பா 1 வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்துல இறந்துட்டாங்க . நானும் அம்மாவும் மட்டும் தான் சார் ”

மாணிக்கம் சிறிது அதிர்ச்சியாகி விட்டார் .

மாணிக்கம் ” சாரி பா . அம்மா ஏதும் வேல பக்குரான்களா?”

மதன் ” இல்ல சார் .. ஊர்ல உள்ள விவசாய நிலம் குத்தகைக்கு விட்டு இருகாங்க வீட்டுல ஆடு மாடு வச்சு பாத்துகுறாங்க சார் ”

பின்பு சிறிது நேரம் எங்கள் கல்லூரியை பற்றி கதைத்துக்கொண்டே உணவை முடித்தோம் . இப்பொழுது எங்களுக்குள் சிறிது நெருக்கம் ஏற்பட்டு இருந்தது . இருவரும் சேர்ந்து பாத்திரங்களை எடுத்துகொண்டு சமையல் அறைக்கு சென்று கழுவினோம் .

மதன் ” சார் என் நீக கல்யாணமே பண்ணிக்கல ?”

மாணிக்கம் ” உன்ன மாறி தான் என் அப்பாவும் நா சின்ன கோள்ளகே படிக்கும் போதே இறந்துட்டாரு . எனக்கு 1 அக்கா 2 தங்கச்சி . படிச்சு வேலைக்கு பொய் சம்பாதிச்சு அவுங்களுக்கு கல்யாணம் பன்றதுக்குல்லையே எனக்கு 35 வயசாகிட்டு அப்பறம் அதுக்கு மேல என்ன கல்யாணம் நு விட்டுட்டேன் இப்ப என் வயசு 45 ஆகுது ”

மதன் ” அதுனால என்ன சார் இப்ப குட நீங்க கல்யாணம் பண்ணிக்கலாம் இவ்வளோ பெரிய வீட்டுல தனிய இருந்து இவளோ கஷ்டபடுரின்களே ”

மாணிக்கம் ” அதுலா பழகிட்டு பா ..இப்படியே இருந்துட்டு போய்ட வேண்டியதான் ”

சிறிது நேரம் இருவரும் அமர்ந்து டிவி பார்த்தோம்
இளையராஜாவின் பாடல்கள் பற்றி பாடம் எடுப்பது போல் மாணிக்கம் எனக்கு விளக்கி கொண்டிருந்தார் .

மணி 10 நெருங்கியது .

மாணிக்கம் சரி மதன் படுக்கலாமா ? காலம்புர நி என் கூடவே வந்துடு
என்று கூறி எனக்கு ஒரு லுங்கியை கட்டி கொள்ள குடுத்தார் .

மாணிக்கம் ” மதன் நி கிழ எந்த ரூம் வேணும் அதுல படுத்துக்கோ நா மாடி ல என் ரூம் ல படுத்துக்குறேன் . அப்பறம் நீ நாளைக்கு உன் அம்மாவ வர சொல்லி என்கிட்டே ஒரு லெட்டெர் எழுதி குடுக்க சொல்லு
நா டீன் கிட்ட பேசிக்குறேன் ”

மதன் ” சார் ரொம்ப தேங்க்ஸ் சார் ”

மாணிக்கம் ” தேங்க்ஸ் லா வேணாம் ஒழுங்கா படிச்சு முடி அது போதும் ஓகே குட் நைட் “