அந்த பயல் டேனிக்கு அடிச்சுது லக்கு – Part 2 41

ஆதி மகிழ்ச்சியுடன், “அம்மா!” என்று உரக்க கத்திக்கொண்டே சென்றான். அவனது அம்மா அவனைப் பார்த்ததும், அதிர்ச்சி அடைந்தவள் போல உறைந்து நின்றாள். ஆதி அவள் அருகில் சென்று அவளை லேசாக அணைத்துக்கொண்டேன். ஆனால் அவள் அதிர்ச்சியில் இருந்து மீண்டவளாய் தெரியவில்லை. “அம்மா.. என்னாச்சு.. ஏதாவது பிரச்சினையா..?” என்றான் ஆதி.
“ம்ம்ம்ம்ம்.. ஓஓ..ஒன்னுமில்லை ஆதி.. உன்னை பார்க்கிறதுக்கு.. அசல் உங்க அப்பாவை பார்க்கிற மாதிரியே இருக்குது. அதான் நான் அசந்துட்டேன்..” என்று அவள் சுதாரித்தாள்.
“அம்மா பயணம் எல்லாம் சவுகாரியமா இருந்திச்சா..?” என்று கேட்டான். “ஓ.. எல்லாம் சவுகாரியமா இருந்துச்சு. உன் பிரண்டு என்னுக்கு எந்த குறைவும் இல்லாம பார்த்துக்கிட்டான். ஆனா அவன் அட்லாண்டாவிலேயே இறங்கி, என்னை இந்த பிளைட்டில ஏத்தி விட்டு போயிட்டான். நீ இங்க வந்து பிக்கப் பண்ணிக்குவேன்னு சொன்னான். ஆனா எனக்கு தான் உள்ளுக்குள்ளே ஒரே பயமா இருந்திச்சு.. எங்க நீ வராம போயிடுவியோன்னு.. நல்ல வேளை நீ வந்து சேர்ந்தே.. இல்லாட்டி நான் பயத்திலேயே செத்துப்போயிட்டு இருப்பேன்..” என்று அம்மா வழக்கம் போல பயந்தில் நடுங்கினாள். கன்வேயரில் வந்த அம்மாவின் சூட்கேஸ”களை ஆதி எடுத்துக்கொள்ள, இருவரும் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தார்கள். வெளியில் வந்தவுடன் ஆதியின் அம்மா குளிரில் நடுங்கினாள். “இந்தாங்கம்மா.. இதைப்போட்டுக்கோங்க.. ராத்திரியில இப்படி தான் பயங்கரமா குளிரும். ஆனா பகல்ல ரொம்ப இதமா இருக்கும்..” என்ற படி அம்மாவுக்கு கோட்டு ஒன்றை கொடுத்தான் ஆதி.

காரில் உட்கார்ந்ததும், ஹீட்டரை ஆன் செய்துவிட்டு, ஆதி காரை செலுத்தினான். அவனது அம்மா கண்கள் விரிய வெளியில் தென்பட்ட காட்சிகளை பார்த்த வண்ணம் வந்தாள். “அடேங்ப்பா.. எவ்வளவு பெரிய ஊரு.. எவ்வளவு காரு..” என்று வியந்த வண்ணம் வந்தாள். “ஏண்டா ஆதி.. இங்க இருக்கிற பொண்ணுங்க இப்படி அரைக்குறையா டிரஸ் பண்ணிக்கிட்டு சுத்தராளே.. இவங்களுக்கு குளிரவே குளிராதா..?” என்று ஒரு முறை அம்மா கமெண்டு அடிக்க, ஆதி சிரித்துக்கொண்டான்.
சுமார் அரை மணி நேரம் கடந்ததும், வீட்டை அடைந்தார்கள். ஆதி, காலிங் பெல்லை அழுத்த, “வீட்டில யாருடா இருக்காங்க..?” என்று அவனது அம்மா அவனை அதிசையத்துடன் பார்த்தாள். அவள் கேட்டு முடிப்பதற்குள் பானு வந்து கதவை திறந்து விட்டு, “வாங்க வாங்க.. பயணம் எல்லாம் சவுகாரியமா இருந்திச்சா..? எப்படி இருக்கீங்க? ” என்று கேட்ட படியே, ஆதியின் அம்மாவிடம் இருந்து ஒரு பெட்டியை வாங்கிக்கொண்டாள். “யார் இவள்?” என்பது போல ஆதியின் அம்மா அவனைப் பார்க்க, “அம்மா… இவங்க பேரு பானு. என்னோட பிரண்டு. பானு, இது என்னோட அம்மா. பேரு சுந்தரி” என்று ஆதி அறிமுகப்படுத்தினான். “நான் நல்லா இருக்கேம்மா..” என்று ஆதியின் அம்மா சொன்னாலும், அவளின் பார்வை பானுவை சந்தேகத்துடன் ஊடுருவியது. பானு அதைக் கண்டுக்கொள்ளாமல் உள்ளே செல்ல, சுந்தரி பானுவை நுனுக்கமாக பார்த்தாள். பானு சென்றுவிட்ட உடன், “ஆதி! யாருடா இந்த பொண்ணு..?” என்றாள். “சும்மா என்னோட பிரண்டும்மா..” என்றான் ஆதி. சுந்தரி மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றாள்.
“பானு! நீ டின்னர் எடுத்து வை. நான் அம்மாவுக்கு அவங்க ரூமைக்காட்டிட்டு வரேன். .. நீ வாம்மா” என்று சுந்தரியின் கையை பிடித்துக்கொண்டு ஆதி இழுத்து சென்றான். உள்ளுக்குள் ஆதிக்கு லேசாக பயம். “இந்த பானு, நம்மோட ரூமை ஒழுங்கா ஏறக்கட்டி இருக்கிறாளா? இல்லையா?” என்று பயந்துக்கொண்டே அவன் அறைக்குள் பிரவேசித்தான். நல்ல வேளையாக பானு தன் மூட்டை முடிச்சுக்களை ஏறக்கட்டி இருந்தாள். அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். ஆதி தன் கண்களால் அந்த அறையை அலசினான். டிரஸிங்க டேபிலுக்கு மேலே இருந்த ஒரு கப்போர்டின் கதவு லேசாக திறந்து இருந்தது. பானு தங்களுடைய காமகளியாட்ட உபகரணங்களை அதனுள் தான் வைத்து இருப்பாள் என்று ஆதி எண்ணிக்கொண்டான்.
தன் மகன் ஆதியின் அறையை நோட்டம் விட்ட சுந்தரி, “யாருடா இந்த பானு? எனக்கு தெரியாம எங்கேயாவது கலியாணம் கிலியாணம் பண்ணிக்கிட்டேயா? பார்த்தா அய்யர் வீட்டு பொண்ணு மாதிரி தெரியுது! அதுவும் உன்ன விட வயசு ஜாஸ்தியா இருக்கிற மாதிரி தெரியுது?” என்று சரமாறியாக கேள்விகளை தொடுத்தாள்.
“அம்மா! நீங்க ஏன் இப்படி டென்ஷன் ஆகறீங்க? பானு அய்யர் வீட்டு பொண்ணு தான். என்னை விட வயசு ஜாஸ்தி தான். ஆன நான் அவளை கலியாணம் எதுவும் செய்ஞ்சுக்கிலை” என்று ஆதி சொன்னான்.
“அப்ப கலியாணம் செய்ஞ்சுக்க போறியா? அவ பாட்டுக்கும் ஏதோ அவ வீடு மாதிரி எங்கிட்டே இருந்து பெட்டிய வாங்கிக்கிறா.. பின்னாடி சமயல் அறைக்கு போறா?” என்றாள் சுந்தரி அம்மா.
“அம்மா. நான் அவளை கலியாணம் பண்ணிக்க போறதில்லை. முன்னாடி ஒரு சமயம் கலியாணம் செய்ஞ்சுக்கிறதா இருந்தேன். ஆனா இப்ப இல்லை. எனக்கு உதவிக்காக அவளை வரச்சொன்னேன்” என்று ஆதி சமாதானம் சொன்னான்.
“வேற ஒன்னும் இல்லையே..” என்றாள் சுந்தரி.
“அதெல்லாம் அப்புறமா சொல்லுறேன். நீங்க முகத்தை கழுவிக்கிட்டு வாங்க. முதல்ல சாப்பிட்டு அப்புறம் பேசலாம்..” என்றான் ஆதி.
“இல்ல இல்ல.. நீ இப்பவே எனக்கு சொல்லு..!” என்று பிடிவாதம் பிடித்தாள் சுந்தரி. வேறு வழியில்லாம் ஆதி தங்களின் உறவை சுருக்கமாக ஆனால் மழுப்பலாக சொல்லி முடிக்க, சுந்தரியின் முகத்தில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தெரிந்தது.
“டேய் ஆதி. என்னடா சொல்லற நீ! அந்த பானுவை வச்சிக்கிட்டு இருக்கியா?! இதெல்லாம் அடுக்குமாடா! ஐய்யோ கடவுளே! அதுக்குத்தான் இந்த வெளியூர் எல்லாம் வேணாமின்னு தலைக்கு மேல அடிச்சுக்கிட்டேன்..” என்று சுந்தரி அரற்ற ஆரம்பித்தாள்.
“அம்மா! இது அமெரிக்காம்மா. இதெல்லாம் இங்கே சகஜம். ஆனா நான் தான் சொன்னேன் இல்ல. நான் அவளை கலியாணம் பண்ணிக்கலைன்னு! அப்புறமும் ஏன் இப்படி அலட்டிக்கிறீங்க..! அவளுக்கு வேற ஒரு பாய் பிரண்டு இருக்கான்” என்று ஒரு வழியாக சுந்தரியை சாமாதானம் படுத்திவிட்டு ஆதி வெளியேறினான்.
சுந்தரி தன் முகம் கைகளை கழுவி விட்டு டைனிங் டேபிளுக்கு வந்தாள். அங்கே பானு ஏற்கன்வே தான் சமைத்த எல்லாவற்றையும் எடுத்து வைத்து இருந்தாள். சுந்தரியையும், ஆதியையும் பார்த்தவுடன், “ஆதி! நான் கிளம்பரேன். எனக்கு நேரமாயிடுச்சு..” என்று பானு சொல்லவும், வெளியில் ஹார்ன் ஒலி கேட்கவும் சரியாக இருந்தது. ஆதியின் முகத்தில் கேள்விக்குறி எழ, “வெளியில டேனி வந்து இருக்கான். நீ ஏற்போர்ட்டுக்கு போயிருந்ததப்போ அவனிடம் இருந்து இதோட நாலு போன் கால் வந்துடிச்சு..” என்றாள் பானு. ஆதியின் முகத்தில் இருந்த கேள்விக்குறி இன்னும் மறையாமல் இருக்க, “ஐய்யோ சொல்ல மறந்துட்டேனே! டேனி தான் என்னோட பாய் பிரண்டு! என்னை டின்னருக்கு கூட்டிட்டு போக வந்து இருக்கான்” என்றாள் பானு. சுந்தரி தன் முகத்தை சுளித்தாள். ஆதி மேலே அவளை இருக்க வற்புறுத்தாமல், “பானு..! நாளைக்கு நீ பிரியா இருந்தேன்னா அம்மாவை கூட்டிக்கிட்டு போய் கொஞ்சம் விண்டர் டிரஸ் (winter dress) வாங்கிட்டு வாயேன்.. அவங்களுக்கு குளிர் தாங்காது. பீளீஸ்..” என்றான் ஆதி.