கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 36 9

சுந்தரியின் மார்பின் மேல் களைத்து விழுந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த குமார், மெல்ல கட்டிலில் மனைவியின் அருகில் சரிந்தவர், போர்வையில் நுழைந்து அவளை தன்னுடன் இழுத்து தழுவி, அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டார்.

“தேங்க்ஸ்டீ சுந்து…” நிறைந்த மனதுடன் தன்னை உடலாலும், உள்ளத்தாலும் மகிழ்வித்த மனைவிக்கு உளமார நன்றி சொன்னார், குமாரசுவாமி.

“ஏங்க இப்படில்லாம் தேங்க்ஸ் சொல்லி என்னை அன்னியப்படுத்தறீங்க?” சுந்தரி, ஒருக்களித்து புரண்டு, தன் வலது கையையும், காலையும் அவர் மேல் போட்டுக்கொண்டாள். மென்மையாக அவர் உதடுகளில் தன் உதட்டை ஒரு முறை ஒற்றி எடுத்தாள்.

குமாரின் கை சுந்தரியின் உடலில் தயக்கத்துடன், அவர் மனம் திருப்தியுறாதது போல், இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தது. குமார் ஒரு முறை உடலால் தன் மனைவியிடம் முழுவதுமாக திருப்தியடைந்தபின், வழக்கமாக சுந்தரியின் இடுப்பை வளைத்துக்கொண்டு, அவள் முதுகோடு தன்னை ஒட்டிக்கொண்டு நிம்மதியாக தூங்கத் தொடங்கிவிடுவார். இளமையிலும் அது அவருடைய வழக்கம். எப்போதுமே ஒரே இரவில் மீண்டும் மீண்டும் அவர் சுந்தரியைத் தொட்டு உடல் சுகத்திற்காக அவளைத் தொந்தரவு செய்வதில்லை.

‘இன்னைக்கு என்ன ஆச்சு இவனுக்கு?’ சுந்தரி தன் மனதுக்குள் யோசித்து, சற்று வியப்படைந்தாள்

“என்னப்பா குமரு, இன்னொரு தரம் வேணுமா?” கொஞ்சலாக பேசியவள் அவன் மார்பின் மேல் தவழ்ந்து, குமாரின் இதழ்களை கவ்விக்கொண்டாள்.

“நோ… நோ… அதெல்லாம் இல்லம்மா… நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்… என் மனசு திருப்தியா இருக்கு..” மனதின் திருப்தியை வாய் சொன்னபோதிலும் குமாரின் கைகள், சுந்தரியின் பின் மேடுகளில் மெல்ல தவழ்வதை நிறுத்தவில்லை.

“சொல்லுப்பா… நான் வேணா பண்ணவா?”

“உங்கிட்ட எனக்கு என்னம்மா வெக்கம், தயக்கம்… வேணுமின்னா நானே கேக்கமாட்டேனா?” சுந்தரியின் தலையை அன்புடன் வருடினார், குமார்.

“அப்புறம்… என் கிட்ட சொல்லமுடியாத அளவுக்கு அப்படி என்ன யோசனை?”

“ப்ச்ச்ச்… ஒண்ணுமில்லே… சுந்தூ..”

“ஆபீஸ்ல ஏதாவது ப்ராப்ளமாங்க?”

“ம்ம்ம்.. அதெல்லாம் இல்லம்மா…”நீளமாக பெருமூச்செறிந்தார்.

“இப்ப சொல்லப் போறீங்களா… இல்லையா?” சுந்தரி அவர் முகத்தைத் தன்புறம் திருப்பி போலியாக முறைத்தாள்.

“நம்ம சுகாவைப் பத்தித்தான்…”

“இப்ப, இந்த நேரத்துல அவளைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?” சுந்தரியின் குரல் வியப்பு தோய்ந்து வந்தது.

“செல்வாவுக்கு நான் மோதிரம் போடப்போறேன்… இன்னைக்கு வாங்கித்தான் ஆவணும்… நீங்க வேணாம்ன்னு சொன்னா, என் பணத்துல வாங்குவேன்னு பிடிவாதம் பிடிச்சாளே?”

“ஆமாம்…”

“நீங்க உங்க இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..? என் கல்யாணத்துல எதுக்காக குடும்ப பழக்கம், வழக்கமுன்னு பேசி, என் ஆசையில ஏன் குறுக்கிடறீங்கன்னு, ரொம்ப கோவமா அவ கேட்டது… நெனைப்புக்கு வந்துச்சு… என் பொண்ணுக்கு இவ்வளவு கோவம் வருமான்னு, சட்டுன்னு மனசு கலங்கிட்டேன்…”

“ம்ம்ம்… இப்பத்தான் ஒரு வளர்ந்த பொண்ணுக்கு அப்பனா, குடும்பத்துல அக்கறை இருக்கற மனுஷனா நீங்க பேசறீங்க…” கிசுகிசுப்பாக பேசினாள் சுந்தரி.

“சுகாவோட மொகம் சிவந்து, குரோதமா இருந்த மாதிரி எனக்குத் தோணுச்சு… உன் பேச்சு சரின்னு எனக்கு தோணினப்பவும், அவளை சாந்தப்படுத்தறதுக்காக ஒரு மோதிரம் வாங்கிடலாம்ன்னு முடிவு பண்ணேன்…” தன் மார்பில் படுத்திருந்த சுந்தரியை புரட்டி, தன்னருகில் கிடத்தி, அவளைத் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டார்.

“நான் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க… நீங்களே பாத்தீங்க இல்லையா? இப்ப புரிஞ்சுதா உங்கப் பொண்ணைப்பத்தி? சுந்தரி பேசிய போது, அவள் உதடுகள் குமாரின் கன்னத்தில் உரசிக்கொண்டிருந்தன.

“இல்லே சுந்து… என் பொண்ணை நான் இன்னும் முழுசா புரிஞ்சுக்கணும்… நானே கிட்ட இருந்து.. பாத்து.. அவளையும், அவளுடையத் தேவைகளையும் நான் நல்லாப் புரிஞ்சுக்கணும்…”

“பத்து நாளு அவகூட தனியா இருந்தீங்கன்னா மெள்ள மெள்ள உங்களுக்கு அவ மனசு புரிஞ்சுடும்… ஒரு பொட்டைக் குழந்தையை வளர்க்கறது எவ்வளவு கஷ்டம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சுடும்…?”

3 Comments

  1. Pothum story vera story podunga

  2. Kathai endi sonuga ya

    1. Vera kathai sonnga pls

Comments are closed.