கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 36 9

வேணிகூட மார்க்கெட், ஷாப்பிங் போவும் போது, வாக்கிங் போகும் போது எங்களை யாராவது பாத்து திருட்டுத்தனமா சிரிச்சா, கமெண்ட் பாஸ் பண்ணா, அவ மூடுல இருந்தா, ஜாலியா எப்பவாவது, பசங்களைப் பாத்து திருப்பி கமெண்ட் அடிப்பா… அவனுங்க பயந்து ஓடற மாதிரி எதாவது பண்ணுவா…

என்னடீ இது வேணீன்னு கேட்டா, எனக்கு கல்யாணம் ஆயிடிச்சிடி… இப்படி ஜாலியா கேலி பண்ண அது ஒரு சுதந்திரம்ன்னு சொல்லி சிரிப்பா.. இது எனக்கு ஒரு ஸ்டேட்டஸ்.. ன்னு சொல்லுவா.. அப்ப அவ சொல்றதை பத்தி அதிகம் கவலைப்பட்டதில்லே… அவளை நான் அவ சொல்றது எல்லாத்துக்கும் விளக்கம் கேட்டதுமில்லே..

கல்யாணம் ஆகாத உங்களை மாதிரி விடலைகளை விட நான் ஒரு படி மேலே இருக்கேங்கற தைரியம் எனக்குன்னு அவ சொல்லுவா… என்னை ஈஸியா ஒருத்தன் கவுத்துட முடியாதுன்னு சொல்லுவா; எனக்கு செக்ஸ்ன்னா என்னன்னு தெரியும்; ஆம்பிளைன்னா என்னன்னு தெரியும்ன்னு சொல்லுவா; ஆம்பிளையின் தொடுகை எப்படிப்பட்டதுன்னு எனக்குத் தெரியும்பா; அவன் பாக்கற பார்வையின் அர்த்தம் என்னன்னு தெரியும்ன்னு சொல்லுவா; அவன் என் கிட்ட என்ன எதிர் பார்க்கிறான் இது தெரியும்ன்னு சொல்லுவா; எவனை எது வரைக்கும் அனுமதிக்கலாம்ன்னு எனக்குத் தெரியும்ன்னு சொல்லுவா…

நான் செல்வாவைத் தவிர வேற எவனையும் சரியா நிமிர்ந்து இந்த ஆங்கிள்ல எப்பவும் பாத்ததுகூட கிடையாது. ஆனா என்னையும் அறியாம இன்னைக்கு நான் ஏன் சம்பத்தை இப்படி நிமிர்ந்து பாத்து அணுஅணுவா அவனை ஆராயறேன்? இவன் என் சொந்தக்காரன்… என் அத்தைப்பிள்ளைங்கற உரிமையில, எந்த விதமான பயமும் மனசுல இல்லாம, அவனை நிமிர்ந்து பாக்கறேனா?

எனக்கு நிச்சயதார்த்தம் ஆயிடுச்சி… எனக்கும் சொசைட்டில ஒரு ஸ்தானம் கிடைச்சாச்சு; இது எனக்கு ஒரு சேஃப் ஸ்டேட்டஸ் அப்படீன்னு நெனைக்கிறேனா? இனிமேல் மத்த ஆண்களால் எனக்கு எதுவும் தொந்தரவு இல்லேன்னு நான் நெனைக்கிறேனா? அட் த லீஸ்ட், இவனால எனக்குத் தொந்தரவு வராதுன்னு நான் நினைக்கிறேனா? அவள் தன் தலையை ஒருமுறை வேகமாக ஆட்டிக்கொண்டாள்.

“ஹாய்… வாட் எ சர்ப்ரைஸ்… குட்மார்னிங் சம்பத்…!! சுகன்யா நட்பாய் சிரித்தாள். தன் வலது கையை அவனிடம் நீட்டினாள்.

சம்பத் ஈஸ் மை நியு ஃப்ரெண்ட்.. அண்ட் ஹீ ஈஸ் ரியலி ஹாண்ட்சம்… எப்பவும் டிப்..டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு ஃப்ரெஷ்ஷா இருக்கானே? எப்பவும் உற்சாகமா சிரிச்சிக்கிட்டே இவனால எப்படி இருக்க முடியுது? இவன் கிட்ட இளமையும், ஆண்மையும் என்னமா துள்ளுது…? மேன்லியா இருக்கானே? சுகன்யாவின் மனதுக்குள் இந்த எண்ணங்கள் சட்டென மின்னலிட்டு ஊர்வலம் போக, ஏனோ தெரியவில்லை, ஒரு நொடி உற்சாகத்தில் குதூகலித்தது அவள் மனசு.

“குட்மார்னிங்” கம்பீரமாக அவளை விஷ் செய்து கொண்டே, அவள் கையை இறுக்கமாக பற்றி குலுக்கிய சம்பத்தின் உடல் சிலிர்த்தது.
“சுகன்யா.. ஐ லவ் யூ டியர்…!’ காலையில் பூத்த அழகான ரோஜாவாக … குதூகலத்துடன் நின்ற அவளைத் தனியாக, பார்த்ததில் அவன் மனதுக்குள் சந்தோஷ கூச்சல் கிளம்பியது.

“நீங்க மட்டும்தான் வந்தீங்களா…?” தன் கண்களை சிமிட்டி, உதடுகளை மெல்ல சுழற்றி, நுனி நாக்கை வாய்க்கு வெளியில் நீட்டி, வெகு இயல்பாக சிரித்தாள், சுகன்யா.

“நோ.. நோ… அப்பாவும்…அம்மாவும்… அதோ… பின்னாடி வந்துகிட்டு இருக்காங்க…” அவன் திரும்பி அவர்களைப் பார்த்தான்.

சம்பத்துக்கு இலேசாக மூச்சிறைத்துக் கொண்டிருந்தது. சற்றுத் தூரத்திலேயே, சிவதாணுவும், சுகன்யாவும் பார்க் வாசலில் நின்றிருப்பதை அவன் கவனித்துவிட்டான். சுகன்யா அங்கிருந்து கிளம்புவதற்கு முன் அவளைப் பிடித்துவிடவேண்டும் என்ற நோக்கத்திலேயே, தன் பெற்றோர்களை பின்னால் விட்டுவிட்டு, அவன் தான் நடக்கும் வேகத்தை அதிகமாக்கி, வேகமாக ஓட்டமும் நடையுமாக அங்கு வந்திருந்தான்.
சுகன்யாவின் குணத்தை, தானே நேருக்கு நேர் பார்த்து அடையாளம் கண்டு கொண்ட பின், ஒரு பெண்ணுக்கு பெண்ணாக, அவளைப் பற்றி ராணி ஒரு புறம் சந்தோஷப்பட்ட போதிலும், அவளுக்கு அத்தை என்ற முறையில், அவளைத் தான் மருமகளாக, தன் மகனின் மனைவியாக, தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பை, வெகு சுலபமாக தான் இழந்துவிட்டதை நினைக்கும் போது வருத்தமும் ஏற்பட்டது.

இந்த நிச்சயதார்த்ததால், தன் மகனுக்கு சுகன்யா மூலமாக வரவேண்டிய தன்னுடைய பழைய குடும்ப சொத்து கைவிட்டு நழுவிவிடுகிறேதே என்ற உரிமைப் பிரச்சனையும், பெண்ணுக்கே உரிய வயிற்றெரிச்சலும், ஒன்றாக சேர்ந்து, நேற்றிலிருந்து அவள் தன் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்தாள்.

“சம்பத், நீ ஒடற வேகத்துக்கு எங்களால நடக்க முடியாதுடா; நானும் அப்பாவும் மெதுவா பார்க்குக்கு வர்றோம். நீ வேணா முன்னாடிப் போய் பார்க்குல ஜாகிங் பண்ணிக்கிட்டு இரு, நடந்து கொண்டே பேசிய ராணிக்கு மூச்சிறைத்தது.

“சரிம்ம்மா…” சம்பத் தான் நடக்கும் வேகத்தை அதிகமாக்கினான்.

“என்னங்க… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேக்கறீங்களா?” ராணி மெதுவாக தன் மனதில் அடித்துக் கொண்டிருக்கும் உரிமைப் புயலைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

3 Comments

  1. Pothum story vera story podunga

  2. Kathai endi sonuga ya

    1. Vera kathai sonnga pls

Comments are closed.