கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 12

“நான் சொல்றேங்க … அவ எதுக்கு இதெல்லாம் உங்க கிட்ட கேக்கிறான்னு?”

“அம்மா … அப்பா இன்னைக்குத்தான் வீட்டுக்கு வந்திருக்கார்; என் கதையை சொல்லி, அவரை ஏம்மா நீ டிஸ்டர்ப் பண்றே?”

“நீ சும்ம்மா இருடி; அவருக்கு இதெல்லாம் என்னைக்கு இருந்தாலும் தெரிஞ்சுதான் ஆவணும். நான் பட்ட கஷ்டத்தை அவரும் கொஞ்சம் படட்டுமே. பொண்ணை பெத்துட்டா மட்டும் போதுமா?”

“சுந்தரி நீ சொல்லும்மா. நீ எதுவாயிருந்தாலும் என் கிட்ட சொல்லு.

“யாரோ ஒரு எடுபட்டவ, சுகன்யாவுக்கு சொத்து பத்து ஒண்ணும் கிடையாது … ஏன்னு கேக்க, சொந்த பந்தம் ஒன்னும் கிடையாது, இவ உன் குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டான்னு சொல்லிட்டா … அது இவளுக்கு தெரிய வந்ததுலேருந்து மனசுக்குள்ளவே மருகிக்கிட்டு கிடக்கிறா.” சுந்தரி கோபமாக பேசினாள்.

“சுகா என்னம்மா இது? யார் அப்படி சொன்னது? உனக்கு எந்த குறையும் இல்லேம்மா … நீயா உன்னை எந்த விதத்துலேயும் தாழ்வா நெனைச்சுக்க வேண்டாம்”

“என் ஆஃபீசர்ப்பா … சாவித்திரின்னு பேரு …”

“அந்த அம்மா எதுக்கு உன்னை அப்படி சொல்லணும்”

“பொறாமை தாங்க … வேறேன்னா ..” சுந்தரி குறுக்கில் பேசினாள்.

“புரியற மாதிரி சொல்லேன் … சுந்து …”

“நம்ம சுகா, ஒரு பையனை லவ் பண்றாங்க. அந்த பையனும் இவ கூடத்தான் வேலை செய்துகிட்டு இருந்தான். அவனும் நம்ம பொண்ணை ரொம்பவே ஆசை படறான். ஆனா அவன் அம்மா, புள்ளையை தன் முந்தானையில முடிஞ்சு வெச்சிருக்கா. அவன் அந்தம்மா உக்காருன்னு உக்காருவான்; எழுந்துருன்னா எழுந்துப்பான். இவ ஆபீஸ்ல, இவளோட இம்மீடியட் பாஸ் சாவித்திரின்னு ஒருத்தி, அவ தன் பொண்ணுக்கு, அந்த பையனை முடிக்கணும்ன்னு, இவங்க ரெண்டு பேர் நடுவுல குழப்பம் பண்ணிகிட்டு இருக்கா. இவளையும் ஆபீசுல இண்டேரக்டா தொந்தரவு பண்றாளாம். இவங்களை சந்திக்க விடாம பண்ணணும்ன்னு நெனைச்சு, தன் அதிகாரத்தை யூஸ் பண்ணி, அந்த பையனை வெளியூருக்கு மாத்திட்டா. அந்த பையனோட அம்மாவும் இந்த சாவித்திரியும் ஃப்ரெண்ட்ஸ்.

“ம்ம்ம் … இன்ட்ரஸ்டிங் …”

“போங்கப்பா … அந்த சாவித்திரி கிட்ட நான் படற அவஸ்தை எனக்குத்தான் தெரியும்” சுகன்யா அவரை முதுகில் மெதுவாக செல்லமாக அடித்தாள்.

“நம்ம சுகா, ஒரு வாழாவெட்டி வளர்த்த பொண்ணு; அப்பனும் ஆத்தாளும் வேற வேற ஜாதி. இப்ப அப்பா எங்கே இருக்காருன்னுகூட சுகன்யாவுக்கு தெரியாது. சுகா எதுவுமில்லாத அன்னாடங்காய்ச்சி குடும்பத்துலேருந்து வந்தவ. உறவுகாரங்கன்னு யாருமில்லாத அனாதை குடும்பம். பாக்கறதுக்கு செவப்பா, உடம்பு எடுப்பா, மூக்கும் முழியுமா இருந்தா போதுமா? வீட்டுக்கு வர மருமவளுக்கு, ஒரு வீடு, சொத்து சுகம், அப்படின்னு எதுவும் வேணாமா? இவ பின்னால உன் பையன் சுத்தலாமா? அந்த சாவித்திரி நம்ம குழந்தையைப் பத்தி இல்லாதையும் பொல்லாததையும், இவ லவ்வரோட அம்மா கிட்ட பேசி அவ மனசை குழப்பி வெச்சிருக்கா.”

“ட்ரான்ஸ்பர் ஆகி போன அந்த பையன் லீவுல சென்னைக்கு வந்தப்ப சுகா கிட்ட கேட்டிருக்கான் போல, உங்கப்பா எங்க இருக்கார்? அந்த சாவித்திரி சொல்றதுல எந்த அளவுக்கு உண்மைன்னு? இவ பதிலுக்கு அவனை, நீ என்னை கட்டிக்குவியா மாட்டியா? உனக்கு நான் வேணுமா இல்லை உன் அம்மா வேணுமா? இப்பவே சொல்லுன்னு கேட்டு இருக்கா.”

“அவன் தன் அம்மாவுக்கு பயந்துகிட்டு, சாவித்திரியோட பொண்ணை ஒப்புக்கு பாக்கறேன்னு சொல்லிட்டு அவ வீட்டுக்குப் போயிருக்கான். அங்க என்ன நடந்ததுன்னு இவளுக்கும் தெரியாது. அந்தப் பையன் வீட்டுக்கு திரும்பி வந்து, நீ சொன்னேன்னு அந்த பொண்ணைப் பாத்துட்டு வந்துட்டேன்; ஆனா நான் சுகன்யாவைத்தான் கட்டிக்குவேன்னு, அம்மா கிட்ட பெரிய சண்டை போட்டானாம்.”

“ஏம்மா சுகா … நீயே உன் லவ்வர் கிட்ட சாவித்திரி வீட்டுல என்ன நடந்ததுன்னு கேட்டுட வேண்டியதுதானே?”