கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 13 16

என் தோள்ல கையை போட்டு இறுக்கமா அணைச்சானே! அந்த இறுக்கத்துல, அழுத்தத்துல, அவன் என் மேல வெச்சிருக்கற ஆசை தெரிஞ்சுதே! கையெல்லாம் தளர்ந்து போவாம கல்லு மாதிரிதான் இருந்தது. கர்லா கட்டை தூக்கி சுத்தின உடம்பாச்சே? நானாவது என் பொண்ணு மூஞ்சை பாத்துக்கிட்டு உசுரு வாழ்ந்தேன். பாவி இவன் தனியா இருந்து அலைகழிஞ்சானே; நாலு நாளைக்கு நம்ம வீட்டுல உக்கார வெச்சி நேரத்துக்கு அவனுக்கு புடிச்சதை வாய்க்கு ருசியா ஆக்கிப் போடணும். சுந்தரியின் மனதும் ஓரிடத்தில் நிக்கவில்லை.

“ஒன்னுமில்லேடா கண்ணு ..” சுந்தரி தன்னையே பார்ப்பதை கண்டவன் கிசுகிசுவென பேசினான்.

“பின்னே …

“சுந்து …” குமார் சோஃபாவில் உட்க்காந்தவாறே மெல்லிய குரலில் தன் மனைவியை ஆசை பொங்க அழைத்தார்.

“ம்ம்ம் …”

“இங்கே கிட்ட வாயேன் …”

“எதுக்கு,” சுந்தரியும் தன் கள்ளக்குரலில் பேசியது சமீபத்தில் கல்யாணமான பெண், நேரம் கெட்ட நேரத்துல உடலுறவுக்கு அழைக்கும் தன் கணவனிடம் சிணுங்குவது போலிருந்தது குமாருக்கு.

கிட்டப் போனா கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பானா? ஏண்டி சுந்தரி; அவன் வந்து பத்து நிமிஷம் ஆவலை. எப்படி இருந்தான் … எங்க இருந்தான்; என்ன பண்றான்; இப்படி எதைப் பத்தியும் நீ அவன் கிட்ட கேக்கலை; அதுக்குள்ள உனக்கு உடம்பு கிடந்து அலையுது; அவன் கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பானான்னு? . .

“சுந்தரி, என்னம்மா கேள்வி இது? …”

குமார் மனதுக்குள் தவித்தார். பால் வாங்கப் போன சுகா வரதுக்குள்ள ஒரு தரம் ஆசையா இவளைச் சேத்து அணைச்சிக்கணும்ன்னு உடம்பு பரக்குது … ஒன்னுமே புரியாதவ மாதிரி இப்பத்தான் இவ எதுக்குன்னு கேக்கறா? நாமே போய் கட்டிக்கிட்டா போச்சு. ஆனா அவ கதவுக்கு நேரால்லா நிக்கறா?

“கடை கிட்டத்துலதாங்க இருக்கு …”

“இருக்கட்டும் … சுந்து …”

“என்ன குமரு … இருக்கட்டுங்கறே … உனக்கு புரியலியா … சுகன்யா வந்துடுவான்னு சொல்றேன் …”

“அப்படின்னா நீ சீக்கிரம் வாயேன் … ப்ளீஸ் ..

அவன் குரலில் இருந்த காமத்தை உணர்ந்ததும் சுந்தரியின் முகம் வெட்க்கத்தால் சிவந்தது. என் புருஷன் கிட்ட எனக்கு ஏன் இத்தனை வெட்கம்? ரொம்ப நாளுக்கு அப்புறம் அவன் என்னைத் தொடப்போறானே அதனாலயா? அவளுக்கு புரியவில்லை.

சுந்தரி ஒரு முறை தன் கணவனை தீர்க்கமாக பார்த்தவள், மெல்ல நடந்து வாயில் கதவை படிய மூடினாள். தன் கணவனை நோக்கி மெதுவாக நடந்தாள். கதவு மூடப்பட்டதும், விருட்டென எழுந்த குமார், சுந்தரியை நோக்கி நடந்தார். அவள் இடுப்பை வளைத்து தன் புறம் இழுந்து தன் மார்புடன் இறுகத் தழுவினார். தழுவியவர் அவள் கழுத்து வளைவில் தன் உதடுகளைப் பதித்து முத்தமிட்டார், குரலில் அன்பு பொங்க அவள் காதில் முனகினார்
“சுந்து … ஐ லவ் யூ …”

மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆசையும், அந்த ஆசையால் ஏற்பட்ட பரவசமும், தன் கணவனின் முரட்டுத்தனமான தழுவலால் கிடைத்த உடனடியான ஆனந்தமும் என பல விதமான மன உணர்ச்சிகள் சுந்தரியின் முகத்தில் தெரிய, அவளுடைய உதடுகள் துடிக்க, அவள் தன் கீழுதட்டை மெதுவாக கடித்து தன் உடல் பதட்டத்தைக் குறைத்துக்கொள்ள முயன்றாள்.