எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 2 75

வசந்த் : டேய் உன்னை எவ்வளவு நேரமா குமார் கூப்பிடறான் தெரியுமா

ரகு : (சற்றே தெரிந்தவனாக) சொல்லுடா என்ன???

குமார் : என்னடா யோசிச்சிட்டு இருக்க

ரகு : ஒன்னும் இல்லடா அப்புறம் சொல்றேன்

வசந்த் : சரி சரி கட்டிங் ஊத்து என்றான். அனைவரும் சியர்ஸ் செய்து சரக்கு அடித்தனர் .ரகு முகத்தை ஏதோ போல் வைத்துக்கொண்டு சரக்கை குடித்தான். பின் ஊர் பேச்சை பேச நேரம் மாலையானது .அனைவரும் கலைந்து வீட்டுக்கு சென்றனர் வீட்டுக்கு செல்லும் முன் மச்சான் நைட்டு ஒன்பது மணிக்கு எல்லாரும் கோவிலுக்கு வந்து இருங்கடா என்று குமார் சொல்லி அனுப்பினான்.