‘அப்ரம் ஏன் அத்தை கிட்ட அப்டி சொன்ன… பேசாம இப்போ எங்கிட்ட சொன்னதையே சொல்லிருக்கலாம்ல????’ என்றேன்
’சொல்லிருக்கலாம் தான், ஆனா அவங்கள்ளாம் அந்த காலத்து பீசுங்க டா, நாம என்ன சொன்னாலும் நம்மல மடக்கிடுவாங்க…. ஒருவேளை நீ சொன்னபடி அப்போவே அவங்க கிட்ட அத சொல்லிருந்தேன்னா இப்பயே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண ஸ்கெச் போட்ருப்பங்க டா…’ என்றாள் சிரித்தபடியே
‘ம்ம்… அதுவும் சரி தான்… என் அப்பாவும் இதான் Chance-னு எனக்கு கால் கட்டு போட்டுருப்பாரு….’ என சிரித்தேன்
‘சரி இந்த பேச்ச இத்தோட விடு….’ என்றாள்
‘ம்ம்ம்…’
‘சரி எனக்கு இப்போ ஐஸ் வாங்கி கொடு’ என்க
நானும் அவளும் பக்கத்திருந்த ஐஸ் பாரினுள் சென்று Cornato Ice Cream Order செய்து அமர்ந்தோம்… இங்கும் இருவரும் நேரெதிரே அமர்ந்து கொண்டோம், ஆனால் வெளியிடம் என்பதால் வீட்டில் நடந்த கூத்து ஏதும் இல்லாமல் கையையும் காலையும் அடக்கி வைத்து கொண்டு சாப்பிட்டு கடற்கரை நோக்கி நடந்தோம்…
‘நீ சொல்லு அடுத்து என்ன…..???’ என்றேன்
‘Nothing டா’ என்றாள் உதட்டை பிதுக்கியவாறு
‘அப்போ நம்ம ஃப்யூச்சர்..???’
‘எனக்கு உன் கூட சந்தோசமா இருக்கனும்டா…’ என்றவள் என் தோளில் தலை சாய்ந்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள்
‘அதுக்கு தான் 1 வீக் உன்னாலயே ரெடி ஆயிட்டோமே… ’ என்றேன் அவள் காதில் சன்னமாய் நான் எதை சொகிறேன் என்பதை உணர்ந்தவள்,
‘ச்சீ…. எப்ப பாரு அந்த நெனப்பா உனக்கு….’ என என் தோலில் குத்தினாள்
‘மேடமா அத பேசுரது…???… நீ தானடி அன்னைக்கு என்ன உசுப்பெத்துன??’
‘ம்ம்… ஆனா நீ இல்லாதப்ப எல்லாம் மாறி போச்சி டா….’ என்றாள்
‘அப்டின்னா…??’
‘Temporary Power Cut….’ என சிரித்தாள்
‘அடிப்பாவி…???’
‘ம்ம்… இனிமே இப்டி தான்…. இப்போ Control ரொம்ப முக்கியம் டா… அதான் இப்போலாம் நானே யோகா-லாம் செஞ்சி அதுல இருந்து மீண்டுட்டு இருக்கேன்… மறுபடி என்ன தூண்டி விட்டுடாதடா…’ என்றாள் என் காதினில் மெதுவாய்
‘ம்ம்…’ என சோகமாய் சொல்ல
‘இப்போவே எல்லாம் பாத்துட்டா அப்றம் கிக் இருக்காதுடா ….’ என்றாள்
‘அப்போ அன்னைக்கு பாத்தது….’ என நான் இழுக்க
‘அப்போ பாத்த வரைக்கும் போதும், இனி எதுவும் இல்ல….’
‘……’ ………………. (ஒருவேளை அவள் சொல்வதற்கு உடனே ஒப்பி கொண்டாள் என் மீது சந்தேகம் வரலாம் என எண்ணி மௌனமானேன்)
‘வேனும்னா…..’
‘………’
‘எப்பவாச்சும் கிஸ் ஓகே…’ என்றாள்
‘ம்ம்….. (என் முகத்தில் மீண்டும் பல்பு எறிய), சரி சரி… அத அப்றம் பாக்கலாம்….’ என்றேன், அவளோ ஆசையோடு காதலாய் என் கையை இறுக பிடித்து கொண்டே நடந்தாள், அதில் எனக்கு காமம் தவிர இனம் புரியா ஒரு உணர்வு தோன்றியது தான் உண்மை
அப்படியே இருவரும் பொடிநடையாய் நடக்க மீண்டும் மனதினுள் தோணல் “””அவள் சொல்லுவதெல்லாம் அப்போது சரி’யென எண்ணினேன்… காரணம் அக்கா, இப்போது சிந்து வேறு நடுவில் இவள் வந்தாள் எப்படி சமாளிப்பது??? ஒருவேளை காதலில் கூட கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது…. எனக்கு எல்லாவற்றிற்கும் மேல் ப்ரீத்தியுடனான காதல் தான் முக்கியம், இதில் காம இச்சையை திணிக்க எனக்கு துளியும் விருப்பமில்லை… எப்படியும் Chance கிடைக்கும் போதெல்லாம் தடவாமல் இருக்க போவதில்லை, அவளும் அதற்கு தடை போடமாட்டாள் எனவும் தெரியும்…. இருப்பினும் காத்திருப்பு தான் காதலுக்கு வலிமை சேர்க்கும்…..””” என எண்ணிக்கொண்டேன்….
இப்படியாக எனக்குள் பேசி கொண்டே செல்ல கண்ணுக்கு எட்டும் தொலைவில் மூவரும் (மாமா, அத்தை, அக்கா) அமர்ந்து கதைத்து கொண்டிருந்தனர்… அவர்களை கண்டதுமே எங்களுக்குள் இடைவெளியும் இருவர் முகத்திலும் ஒருவரையொருவர் பிடிக்காததை போன்ற இறுக்கத்தையும் வைத்து கொண்டோம்…… எங்களை பார்த்ததும் மூவரும் எழுந்து எங்களருகே வர திரும்பி பார்க்கிங் நோக்கி சென்றோம்…. மாலை மங்கும் நேரம் வீட்டை அடைந்தோம்…..
