என் காதலி Part 5 46

விக்கி அதை நினைத்து கொண்டே நின்று கொண்டு இருந்தான் ,பின்னர் விக்கி விக்கி என்று சுவாதி கூப்பிடவும் பழைய நினைவுகளில் இருந்து திரும்பினான் .ஏன் சோறு பிடிக்காதா என்றாள் .அவன் அப்படி இல்ல சோறு எங்க இருக்குன்னு சொல்லு நான் சாப்புடறேன் என்றான் .அந்த கிச்சன்ல ஹாட் பாக்ஸ்ல இருக்கு என்றாள் .பின் விக்கியாக போயி சோற்றை தட்டில் வைத்து சாப்பிட்டு கொண்டே கிச்சனுக்கு வந்தான் .

சுவாதி ஏதோ ஒரு ஆங்கில சேனல் வைத்து படம் பார்த்து கொண்டு இருந்தாள் .அவன் ஹாலுக்கு வந்து அவளுக்கு கொஞ்ச தூரம் தள்ளி உள்ள சோபாவில் உக்காந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான் . பின்னர் அவனை பார்த்து சுவாதி கேட்டாள் விக்கி சாப்பாடு பரவலையா என கேட்டாள் .ம்ம் சாப்பிடும் போது பேச கூடாது .சாப்பிட்டு முடிச்சுட்டு சொல்றேன் என்றான் .பின்னர் சாப்பிட்டு கொண்டு இருந்தான் . அவன் தட்டை பார்த்தாள் .அவன் வின்ஜனம் இல்லாமல் சாப்பிட்டு கொண்டு இருந்தான் .

டேய் வெஞ்சனம் வச்சு சாப்பிடுடா என்றாள் .வெஞ்சனமா அது எங்க இருக்கு என்று பசியில் அவசர அவசரமாக சாப்பிட்டு கொண்டு இருந்தான் .இரு நானே போயி எடுத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு சுவாதி போயி அவனுக்கு வெஞ்சன்மும் ஹாட் பாக்ஸ் மற்றும் ரச பாத்திரமும் எடுத்து வந்து வைத்தாள் . பின் விக்கி அதை அவனே எடுத்து சாப்பிட்டான் .

யே இது என்ன காய் என்றான் .அவர காய் என்றாள் .காய் எல்லாம் நான் வீட்ல வச்சுருக்கவே இல்லையே எப்ப வாங்குன என கேட்டான் .நீ பப்க்கு போனப்ப வீட்ட பூட்டாம போயிட்ட நாந்தான் போயி சமையல் பண்றதுக்காக போயி வாங்கிட்டு வந்தேன் .ஒகே என்று சொல்லி விட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தான் .டேய் ரசம் இருக்கு எடுத்துக்கோ என்றாள். சரி என்று சொல்லி விட்டு நல்லா சாப்பிட்டான் .ஹாட் பாக்சில் இருந்த சோறு முழுதையும் காலி பண்ணினான்

சாப்பிட்டு முடித்து விட்டு வந்து உக்காந்தான் .என்ன சாப்பாடு ஓகேவா என்று கேட்டாள் .உண்மையை சொல்ல போனாள் விக்கி ரொம்ப நாள் கழித்து சோறே அன்றுதான் சாப்பிட்டு உள்ளான் .என்னதான் அவனிடிம் பணம் நிறைய இருந்தாலும் மும்பையில் அவன் எப்போதும் துரித உணவுகளான பிசாவும் பர்கரும் இல்லை பிரைட் ரைஸ்ம் தான் சாப்பிட்டு வந்து இருக்கிறான் .எப்போதுவாதுதான் வள்ளி வீட்டிற்கு போயி சோறு சாப்புடுவான் ,இன்று சுவாதி அவன் அம்மா வார்த்தைகளை மட்டும் அல்ல

ஒரு விளம்பரத்தில் காட்டுவது போல அவன் அம்மா சமையலையும் நினைவு படுத்தி விட்டாள் .அன்றுதான் ரொம்ப நாள் கழித்து அவன் வயிறு மட்டும் அல்ல மனதும் நிறைந்து விட்டது .இருந்தாலும் சுவாதியை நேரடியாக புகழ விக்கிக்கு மனசு வர வில்லை .பரவல ஏதோ இருக்கு என்றான் சாதாரணமாக .ஒ அவேறேஜ் ஆச்சும் இருந்துச்சா என கேட்டாள் .அடி பாவி சூப்பரா இருந்துச்சுடி என்று சொல்லாலம் என்று நினைத்தான் . ஆனால் ம்ம் ஆமா அவேறேஜா தான் இருந்துச்சு குறிப்பா ரசமும் அந்த காயும் ரொம்ப சுமார் என்றான் .ஆனால் விக்கி அந்த ரெண்டையும் தான் மிகவும் ரசித்து சாப்பிட்டு இருந்தான் .

சாரி விக்கி கொஞ்சம் அவசரத்துல சமைச்சது அதனால் தான் அப்படி இருக்கு நான் நாளைக்கு நல்லா பண்றேன் என்றாள் .அதை கேட்டு விக்கி ஹலோ நீ என்ன என் பொண்டாட்டியா ஏதோ ஒரு அவசரத்துக்கு சாப்பிட்டேன் டெய்லி லாம் சாப்பாடு போட்டு என்னையே மயக்கலாம்னு பாக்காத விக்கி சாப்பாடுக்கு எல்லாம் மயங்குற ஆள் இல்ல என்றான் .

ஐயோ இவர் பெரிய மன்மதன் இவர மயக்க பாக்குறோம் ஏதோ பாவம் ஒரு பிரண்டா நினைச்சு வீட்டு சாப்பாடு கொடுப்போம்ன்னு பாத்தா ரொம்பதான் பிகு பண்றே போடா எனக்கும் வேல மிச்சம் என்றாள் .

அவனும் போடி என்று சொல்லி விட்டு தூங்க போனான் .ஆனால் அவன் ரூமுக்கு போயி அப்பா ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் நல்லா சாப்பிட்டு இருக்கோம் .பரவல இம்சை நல்லாத்தான் சமைக்குது .என்று மனதிற்குள் நினைத்து கொண்டு ஏப்பம் விட்டுவிட்டு தண்ணியை குடித்து விட்டு தூங்கினான் .ரொம்ப நாள் கழித்து அன்றுதான் நல்லாவும் தூங்கினான் .

அடுத்த நாள் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது .முந்தைய இரவில் நடந்தை எல்லாம் நினைத்து பார்த்தான் .பப்பில் அவன் செக்ஸ் ஆசைக்கு என்று ஒரு பெண் கிடைத்தும் அவளை தன் கொள்கைக்காக விட்டு கொடுத்தது வீட்டிற்கு வந்து சுவாதி சாப்பாட்டால் அவன் அம்மா அவனுக்கு ஞாபகம் வந்தது என்று எல்லாத்தையும் நினைத்து பார்த்தான் .

4 Comments

Add a Comment
  1. Semma…😘🤞👌👍 Intha story…2 days a waiting ithuku…Seekiram aduthadutha part la upload pannunga .. pls..
    Epdiyachu viki Swathi kuda sernthura maari kondu ponga.. I love this story ♥️❣️❤️

  2. Write the stories like hindi movie aastha acted by rekha and Om puri

  3. Next part bro?

    1. Super story bro really loved it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *