மது மயக்கம்… புதிய காதல்…முதல் அனுபவம்! 86

சு..ஜி..தா! என்ன அருமையான பெயர். ஆனால் இவள் யாரென்றே தெரியவில்லை. நானாவது இவளுடன் மகாபலிபுரத்தில் ரூம் போட்டாவது? சரியான செமி! கிராக்கு என்று மனம் திட்டினாலும் அவள் அழகு என்னை கட்டிப்போட்டதென்னவோ உண்மை. ஆஹா..என்ன நைஸ் பெண்! அந்த அழகு முகத்தை பார்த்தவுடன் மனம் இறக்கை கட்டி பறந்தது. மனம் அவளை பல போஸில் கிளிக் செய்தது.

அப்போது என் கையை பிடித்து இழுத்தாள்…

“ம்ம் உள்ளே வா” என்று அருகிலிருந்த காரின் கதவை திறந்தாள்….

யோசித்தேன். நமக்கோ எங்கே போவது என்று தெரியவில்லை! போய்தான் பார்ப்போமே. ஒரு மூன்று நாள் பார்க்கலாம். பிடிக்கவில்லை என்றால் ஓடி வந்து விடலாம்.

மெதுவாக ஏறி காரில் அமர்ந்துக்கொண்டேன்… கார் வேகமாக போரூர் நோக்கி பயணித்தது…

கார் பயணித்து ஒரு வீட்டுக்குள் சென்றது. வீட்டுக்குள் சென்றோம். கதவை ஒரு வயதானவன் திறந்தான்…

அந்த வீடு பெரிய தோட்டத்தின் நடுவே இருந்தது. ஒரு பெரிய ஹால்..வாசலில் மாருதி கார், உள்ளே விசாலமான ரூம்கள், மேலே பெரிய கண்ணாடி சேண்டிலியர்…வீடு ஆடம்பரமாக இருந்தது.

“வாங்க சார்! இன்று நீங்களா” என்றான் சலிப்போடு!

சுஜிதா! நேரடியாக தன் ரூமிற்கு சென்றாள். நான் அந்த ஹாலில் உட்கார்ந்தான். அவனை பார்த்தேன். வயது ஒரு 60 இருக்கலாம். வேலைக்காரன் போலுள்ளது.

“அப்படினா ஏன் ரொம்ப பேர் வருவாங்களா” என்றேன்..

“ஐயோ சார்! நான் அப்படி சொல்லல. இந்த அம்மா ஒரு பையனை காதலிச்சு இருக்கு! அந்த பையன் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இந்தம்மா பார்க்கும்போதே அடிபட்டு செத்திருக்கான். எப்பவாவது அவன் ஜாடைல இருக்கிறவங்களை அழைச்சிட்டு வருவாங்க! அப்புறமே அந்தம்மாவுக்கு சுய புத்தி வந்து ஒரு ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்” என்றான்.
வயிற்றை பசி கிள்ளியது.. பேசாமல் இன்று இரவு இங்கு காலம் தள்ளிவிட்டு காலையில் ஓடி விடலாமா? மனம் வெகுவாய் யோசித்தது. அடச்சீ ஒரு தொழில் அதிபர் மகன் இதற்கு ஆசைப்படுவதா என்றும் மனம் பேசியது…

நான் கிளம்ப எத்தனித்தேன்.

“ஐயோ சாரே.. இப்ப போயிடாதீங்க! போனால் அழுது ரகளை பண்ணீடுவாங்க சார். காலையில் போயிடுங்க” என்று அவன் கெஞ்சிக்கொண்டு இருக்கும்போது சுஜிதா நைட்டியில் அழகாக வந்தாள்.

வந்தவள் அவனை ஆக்ரோஷமாக பார்த்தாள். அவன் அதை பார்த்துக்கொண்டே கதை திறந்து வெளியே சென்றான்..

“அவன் சரியான கிராக்கு! லவ்வர்ஸ் எவ்வளோ பேசிப்பாங்க! குறுக்கே நிக்கறான் பார்”

அடிப்பாவி. அவன் கிராக்கா! நீ கிராக்கா! என்றது மனம்.

“சரி வா உள்ளே போகலாம்” என்றாள். நான் அவள் வாலை பிடித்துக்கொண்டு உள்ளே போனேன்….

“நீ எனக்கு ஒரு வருடம் கழித்து கிடைத்துள்ளாய்! வா செலிபரேட் பண்ணலாம்” என்று அருகிலிருக்கும் நாற்காலியை காண்பித்தாள். முன்னால் ஏகப்பட்ட சாப்பாடு ஐட்டம், தண்ணி ஐட்டம் இருந்தது. அப்பாவின் பாட்டிலை ரகசியமாக எடுத்து அடித்ததுதான்… இன்று ஒரு கை பார்க்கலாம் என என் கை நீண்டது…