இப்படியும் ஒரு கள்ளக்காதல் – End 174

கீதாவுக்கு உடல் வியர்த்தது.. பயம் சூழ்ந்தது. சத்தம் போட்டு சச்சினினை கூப்பிட்டாள்.. சச்சின் மாடியில் இருந்து ஓடி வந்தான் .. உடனடியாக ஆபீஸ் லேண்ட் லைன் நம்பர் கு போன் பண்ணினா அது அடித்து கொண்டே இருந்தது..

கீதா: சச்சின், கார் எடுடா.. நாம அவரோட ஆபீஸ் போகலாம்
சச்சின்: இதோ எடுக்குறேன்..

கீதாவின் மொபைல் அடித்தது.. ரகு ஆபீஸ் ல இருந்து.. அவள் கைகள் நடுங்கின..சச்சின் போன் எடுத்து பேசினான் .. ஆபீஸ் HR ரகு 10 வது மாடியில் இருந்து குதித்து ரகு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினாள். கீதா மூர்ச்சை அடைந்தாள்.. சச்சின் தண்ணீர் தெளித்து அவளை கார் ல கூட்டிகிட்டு விரைந்தான்

தற்கொலை என்பதால் போலீஸ் துருவி துருவி விசாரித்தது.. கீதாவின் போன் ல இருந்த மெசேஜ் பார்த்தபின் மகன் மரணத்தை தாங்க முடியாமலேயே தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது உடலை ஒப்படைத்தார்கள்.

சச்சின் அவனோட அப்பாவுக்கு போன் செஞ்சு சொன்னான். அவர் உடனே புறப்பட்டு வந்தார் .. அவரும் சச்சினும் தான் இறுதி சடங்கு எல்லாம் செஞ்சாங்க.. உறவினர் யாரும் வரல..ஆபீஸ் mates மட்டும் வந்தாங்க.

சச்சின் அப்பா ரெண்டு நாள் பிறகு கிளம்பி சென்றார்.. அப்பப்போ சச்சின் கிட்ட போன் பண்ணி விசாரிப்பார் .. கீதாவை சமாதான படுத்தி பத்திரமாக பார்த்து கொள்ளும்படி சொல்வார்.
கணவன் பிள்ளை இருவரும் போனதால் கீதா மனம் ஒடிந்து போனாள்.

பல நாட்கள் அழுது கொண்டே இருந்தாள். சாப்பிட மறுத்தாள்.. உடல் இளைத்து போனால்..அவர்கள் இல்லாமல் எனக்கென்ன வாழ்க்கை.. நானும் சாக போகிறேன் என்றாள். .சச்சின் மட்டும் அவளுக்கு சமாதானம் செய்ய வில்லை என்றால் அவளும் தற்கொலை பண்ணி கொண்டு இருப்பாள் .

சச்சின் அவளை அருகில் இருந்து பார்த்து கொண்டான்.. கொஞ்சம் கொஞ்சமாக அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர உதவி செய்தான் அவளை வெளி இடங்களுக்கு அழைத்து சென்றான். நிறைய பேசினான் கீதா கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வந்தாள்.. இப்போது அவள் வாழ்க்கையில் சச்சின் மட்டுமே என்று ஆகி விட்டது..

சச்சின் தனது கடைசி வருட படிப்பை முடித்தான், சிங்கப்பூர் சென்று அப்பாவை பார்த்து வர வேண்டும் என்றும் ..போகும்போது கீதாவை அழைத்து கொண்டு போக வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான்.. கீதா பற்றி அவரிடம் சொல்லி அவர் சம்மதம் பெற்று கீதாவை முறைப்படி பதிவு திருமணம் செய்து ஏற்று கொள்ள வேண்டும் என்பதே அவனது எண்ணம்.. அவனது அப்பா, தான் பெய்ஜிங் போக வேண்டி இருப்பதால் ஒரு வாரம் கழித்து வருமாறு சொல்லி இருந்தார்..

ஒரு நாள் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற விமானம் காணாமல் போயி விட்டதாகவும் அதில் சச்சினின் தந்தை பயணம் செய்ததாகவும் அவர்களுக்கு தகவல் வந்தது.. இந்த தகவல் கேட்ட சச்சின் கீதா இருவரும் நொறுங்கி போனார்கள்..கடைசி வரை அவரது மரணமோ உறுதி செய்ய படவில்லை.. உடலும் கிடைக்க்க வில்லை.. கடலில் மூழ்கி இறந்து விட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.. அடுத்தடுத்த மரணங்கள் அவர்களது வாழ்க்கையை திருப்பி போட்டு விட்டன . இப்போது கீதா அவனை தேற்றினாள்..வாழ் நாள் முழுவது தான் அவனுடன் இருப்பதாக உறுதி அளித்தாள். சச்சினுக்கு கீதாவுக்கு இப்போது உறவென்று யாருமில்லை.. ஒருவருக்கு ஒருவர் மட்டுமே துணை என்று ஆனது..

ரகு மற்றும் மகன் இல்லாத வீட்டில் கீதாவுக்கு இருக்க பிடிக்க வில்லை..அவள் வேலையை ராஜினாமா செய்தாள். சச்சினும் கீதாவும் சிங்கப்பூர் போனார்கள்.. கீதா சச்சின் அவர்கள் திருமணத்தை பதிவு செய்தார்கள் அங்குள்ள சச்சின் அப்பாவின் சொத்துக்களை கொண்டு ஒரு பிசினஸ் ஆரம்பித்தார்கள்
பிசினஸ் அமோகமாக நடந்தது.. பல கோடி ருபாய் செலவில் ஒரு இரண்டு மாடிகளை கொண்ட தனி வீடு வாங்கினான்.. அதற்கு “சச்சின்-கீதா பேலஸ்” என்று பெயர் சூட்டினான்..

அடுத்த வருடமே கீதா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்..அதட்கு அடுத்த வருடம் இரட்டை பெண் குழந்தைகள்.. சச்சின் கீதா வாழ்க்கை இதனால் முழுமை பெற்றது..

சச்சின் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றான்.. கீதாவை தலையில் வைத்து கொண்டாடினான்..சுகங்களையும் பாசத்தையும் வாரி வாரி வழங்கினான்
இருவரும் சந்தோஷமாக அவர்கள் வாழ்க்கையை தொடர்ந்தார்கள்.. பேரன் பேத்தி எடுத்து இறுதிவரை..ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் அன்யோன்யமாக வாழ்ந்தார்கள்.சச்சின் இறந்த அதே நாள் கீதாவும் அதிர்ச்சியில் இறந்து போனால்.. அவர்கள் பிள்ளைகள் அவர்கள் இருவரையும் ஒரே கல்லறையில் வைத்தார்கள்.

கள்ள காதலாக தொடங்கிய அவர்களது உறவு காலத்தின் போக்கில் அவர்களை தம்பதியராக்கி உண்மையான காதலர்களாக மாற்றியது. அவர்களது உண்மை காதல் பூமியில் மட்டுமன்றி..அவர்களை சொர்கத்திலும் ஒன்றாய் வாழ வைத்தது..

முற்றும்

6 Comments

  1. கதை,திரை கதை படு ஜோர் முடிவு ….?

  2. கதை சென்ற வேகம் அடுத்த பக்கத்தை படிக்க ஆவலை தூண்டியது ,செம ஜோர்…!

  3. சூப்பர் கிளைமேக்ஸ் ஏதிர்பார்காதது சூப்பர்

  4. Super stroy

  5. Naa ரொம்ப feel பண்ண கதை இல்ல லவ் this story.

Comments are closed.