ஸ்லீப்பர் பஸ் 356

வழக்கமான ஒரு செவ்வாய் இரவு. “சார் சென்னை சார், ஏசி பஸ், ஸ்லீப்பர் கூட இருக்கு” திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் என்னை வழிமறித்து நின்றார்கள் சிலர். அவர்களிடமிருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றானது. சென்னைக்கு மட்டும் ஏன் தான் இத்தனை மவுசோ தெரியவில்லை. அதுவும் திருச்சியிலிருந்து நிமிசத்துக்கு நிமிசம் சென்னைக்கு அரசு வண்டிகள் இருக்கும் போது, சொகுசு வண்டிகளுக்கு வேலையில்லை. ஆனால் மக்கள் அரசு பேருந்துகளை மதிப்பதில்லை. எப்போது எது புட்டுக் கொள்ளுமோ, பிரேக் பிடிக்காம போயிடுமோன்னு எல்லோருக்கும் மனசுக்குள் பயம். அரசு பேருந்தில் ஏறுகின்றவர்கள் ஒன்று ஏழையாக இருப்பர், இல்லையென்றால் கஞ்சனாக இருப்பார்கள். நான் ஜெகதீஸ் சிவன். இப்போது சென்னைக்குதான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு தனியார் பேருந்து என்றாலே அலர்ஜி. அதிக விலைகொடுக்க மனமில்லாமல் டப்பா ஸ்பீக்கர்களை வைத்து ஏதேனும் ஒரு ரேடியோ சேட்டை ஏற்பாடு செய்து விடுவார்கள். வண்டி திருச்சியை தாண்டும் வரை ஏதாவது ஓடாத படத்தினைப் போட்டுவிட்டு, அதன் பின் அந்த பாழாய் போன ரேடியோ செட்டை வைத்து சேட்டை செய்ய ஆரமித்துவிடுவார்கள். பேருந்தின் கடைசி சீட்டில் முட்டிக் கொண்டிருந்தாலும் நம்மை அந்த பாட்டு எழுப்பி விடும். நான் இரவு நேர பயணங்களை ரசிக்கும் குணமுடையவன். ஜன்னலோர சீட்டை பிடித்து வைத்து பின்னால் செல்லும் மரங்களையும், இருளில் எங்கோ தெரியும் சிறு விளக்குகளையும் பார்த்தபடி செல்வன். அதனால் ஜன்னலை திரைச்சீலை போட்டு மறைத்திருக்கும் ஏசிபேருந்தும் எனக்கு உதவாது.

அரசு பேருந்து திருச்சி டூ சென்னை என்று எழுதப்பட்டிருந்த பேருந்தை நோக்கி நடந்தேன். பொங்கல், தீபாவளி என்று பெரும் பண்டிகை காலம் இல்லை என்பதால் வெரிச்சென காணப்பட்டது. டிரைவர் சீட்டிற்கு பின்புறம் இரண்டு சீட்டு தள்ளி ஒரு புதுத்தம்பதி உட்காந்திருந்தார்கள். அதற்கு அடுத்த சீட்டில் ஒரு சொட்டை மண்டை டாலடித்தது. கண்டெக்டர் சீட்டுக்கு அடுத்தாற்போல ஒரு கல்லூரிப்பெண் தனியாக அமர்ந்திருந்தாள். அடிக்கடி ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி யாரையோ எதிர்பார்த்தபடி இருந்தாள். நிச்சயம் பாய்பிரண்டாகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு பேருந்தின் நடுமத்தியில் இருந்த இரண்டு பேர் அமரக்கூடிய சீட்ஒன்றில் அமரசென்றேன். வேண்டாம் பின்னால் சீட்டிற்கு போவோம். வண்டியே காலியாக கிடக்கும் போது எதற்காக எலிக்குஞ்சு பொறிக்குள் அகப்பட்டதுபோல திணறிக் கொண்டு அமர்ந்துவரவேண்டுமென எண்ணியபடி பின்சீட்டிற்கு நகர்ந்தேன். மூன்று பேர் அமரும் சீட்டைவிட கால்களை நீட்டி படுத்து செல்ல கடைசி சீட்தான் என் சாய்ஸ். அங்கே சென்று தலைக்கு பையை தலையணைப் போல வைத்து ஒய்யாரமாய் படுத்துக் கொண்டேன். பேருந்தின் வெளிச்சம் கடைசி சீட்டில் பட்டதாக வரலாறு கூட கிடையாது. ஜன்னலிருந்து காத்துவந்து என் முகத்தில் பட, எப்போது தூங்கினேனோ எனக்கே தெரியவில்லை. கண்டெக்டர் டிக்கெட் வாங்க எழுப்புகையில்தான் ரொம்போ அசந்து தூங்கிட்டேன்னு தெரிஞ்சது. “என்ன தம்பி ஆள அடிச்சு போட்ட மாதிரி தூங்கரீங்களே, டிக்கெட் எடுத்தபிறகு தூங்கியிருக்கலாம் இல்லையா”என்று கேட்டார். என்னான்னே பண்ணறது வேலை அப்படி, நேத்துதான் சென்னையிலிருந்து இங்க வந்தேன். முழுசா களைப்பு கூட நீங்கள, இப்ப மறுபடியும் சென்னைக்கு கிளம்பியாச்சு” என்று நொந்துகொண்டே டிக்கெட் வாங்கினேன். நாளைக்கு காலையில கோயம்பேடு போய், அதுக்கப்புறம் அங்கிருந்து அம்பத்தூர் எஸ்டேட் போறதுக்குள்ள உடம்பு என்னாகிறது.

அப்போதுதான் 40 வயது மதிக்கதக்க ஒரு கருத்த நபரும் இறுதி சீ்ட்டில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். சுருட்டை முடியில் வசீகரமாக இருந்தார். இருளில் கொஞ்சம் அவரை பார்ப்பது சிரமம்தான். அத்தனை கருப்பு. பேருந்து வெளிச்சம் வேறு சரியாக இல்லை. அவரைப் பார்த்து புன்னகை செய்தேன். கண்டெக்கரிடம் அவரும் சென்னைக்கு டிக்கெட்வாங்கிக் கொண்டார். தூக்கம் களைந்துவிட்டதால் ஜன்னரோரத்தில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினேன். கண்டெக்டர் டிரைவருக்கு எதிரே இருக்கும் சீட்டில் அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் பேருந்தின் நடுவிளக்கினை தவிற மற்ற விளக்குகளை டிரைவர் அணைத்தார். அதற்காகத்தான் நான் காத்திருந்தேன். என்னுடைய பையிலிருந்து லுங்கியை எடுத்தேன். கால் வழியாக மேலே இழுத்து வாயில் கவ்விக்கொண்டேன். லுங்கிக்குள் கைகளைவிட்டு பேன்டை அவிழ்த்தேன். அதனை மடித்து என் முன் சீட்டில் தொடங்கவிட்டேன். ஜட்டியை அவிழ்க்கலாம் என்று நினைத்தபோது, அந்த கருப்பு ஆள் என்னையே பார்ப்பது தெரிந்தது. கொஞ்சம் சங்கடமாக இருக்க அப்படியே லுங்கியை இறுக்கி கட்டிக்கொண்டேன். மீண்டும் ஜன்னலில் பார்வையை திருப்பி தூரத்தில் தெரியும் விளக்குகளை ரசித்துப் பார்த்தேன்.