நல்லா எங்கப்பாவ கெடுத்து வெச்சுட்டா, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல பா என்றாள், நீ எதுவும் சொல்ல வேணாம் எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு அதனால நீ கண்டுக்காத, எல்லாம் நான் பாத்துகிறேன், இனிமே நான் உஷாரா நடந்துக்குறேன் என்றேன், எதுவும் பேசாமல் வண்டியை வீட்டிற்கு திருப்பினாள்.
ஏதோ ஒரு தைரியத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி நான் என் மகளிடம் இருந்து தப்பித்தேன், உடனே நான் நார்மலாக மாறி விட்டேன் ஆனால் என் மகள் இன்னும் நார்மலாகவில்லை, அன்று இரவு என் மனைவியிடம் கேட்டேன் அவளும் புலம்பிய படி சொன்னாள், என்னவோ தெரியலஜி பூஜிதா, இன்னைக்கு நாள் பூராவும் சரியாவே யாரிடமும் பேசல, சாப்பிடவும் இல்லை என்று சொன்னாள்.
அவளுடைய போக்கு எனக்கு கொஞ்சம் கவலையைக் கொடுத்தது, அவள் மனதில் என்ன இருக்கிறது என்று என்னால் யூகிக்க முடியவில்லை. இவள் செய்த டென்ஷனில் என்னால் பழையபடி இருக்க முடியவில்லை.
எங்கே விட்டோம் எங்கே தொடங்கினோம் என்பது கூட எனக்கு மறந்து போய்விட்டது சரி ஷீலாவிடம் பேசலாம் என்று முடிவு செய்து அவருக்கு கால் செய்தேன்
போனை எடுத்ததும் என்ன ஆச்சுஜி இன்னைக்கு உங்கள நான் பாக்கவே இல்லையே என்றாள், அது ஒரு சின்ன பிரச்சனை ஆயிடுச்சு, என் பெரிய பொண்ணு கிட்ட நான் வசமா மாட்டிக்கிட்டேன் என்று சொன்னேன்.
என்ன ஜி சொல்றீங்க எல்லா விஷயங்களுமே தெரிஞ்சு போச்சா என்று கேட்டாள், ஆமாம் எல்லாமே நானே சொல்லி விட்டேன் என்றேன், ஆனால் உன்னோட பெயரை வைத்துதான் நான் என்னை சேவ் பண்ணிட்டேன் அதனால உன்னை ஏதாவது அவள் நாளைக்கு கேட்டா கூட அதற்கேற்ற மாதிரி சமாளித்து கொள் என்று அவளிடம் சொன்னேன்.
நோ ப்ராப்ளம் ஜி நான் பார்த்துக்கிறேன், அக்கா என் கூட இருக்க நாள எனக்கு எந்த பிரச்சினையும் வராது என்று ஷீலா சொன்னாள்.
அங்கே எப்படி ஏதாவது விஷயம் இன்னைக்கு நடந்ததா என்று அவளிடம் கேட்டேன். ஆமாம் ஜி அதை சொல்லத்தான் நான் உங்களுக்கு கூப்பிடலாம்னு இருந்தேன் என்று சொன்னாள், என்ன விஷயம் சொல்லு என்று கேட்டேன் சரசும் தங்கராஜூம் என்னை வந்து பார்த்தார்கள், இது மாதிரி இரண்டு கேள்விகள் நான் முடியாது என்று தவிர்த்து விட்டேன் அதனால் எங்களை gameஇல் இருந்து தூக்கி விட்டார்கள், நீங்கள்தான் ஏதாவது சொல்லி எங்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள்.
அவளுக்கு நான் என்ன பதிலை சொல்லட்டும் என்று ஷீலா என்னிடம் கேட்டாள், இதுதான் லாஸ்ட் சான்ஸ் இனிமேல் எந்த டாஸ்க்கையும் முடியாது என்று தவிர்த்தால் உடனடியாக நிரந்தரமாக எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று சொல்லிவிடு என்று ஷீலாவிடம் சொன்னேன், மேலும் ரொம்ப கஷ்டப்பட்டு ரிஸ்க் எடுத்து நான் உன்னை மீண்டும் இந்த விளையாட்டில் சேர்த்து இருக்கிறேன் என்று சொல்லிவை என்றேன். செறி என்று வைத்துவிட்டாள்.
மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது எப்போதும் சிஸ்டம் ஆன் செய்து உட்கார்ந்து பழக்கப் பட்டு இருந்ததால் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. இந்நேரம் 3 ஜோடிகளும் எனக்காக காத்துகொண்டு இருப்பார்கள்.
அதேசமயம் இங்கு திடீரென்று என் மகள் வந்து பார்க்கும் பொழுது, என்னிடம் எந்த மாற்றமும் இல்லை என்றால் கண்டிப்பாக அவள் கோபம் கொள்வாள் அதையும் யோசித்துக்கொண்டிருந்தேன்.
சரி தவறு என் பக்கம் இருக்கும் பட்சத்தில் நானே போய் பேசுவது தான் சரி என்று முடிவு செய்தேன், இன்னும் சாப்பிடாமல் கூட இருக்கிறாள் இதற்கு இன்றோடு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று அவளைப் பார்க்கப் போனேன்.
அவள் ரூம் சென்று கூப்பிட்டேன், ஆஷிஷ் உடனே எழுந்து வெளியே வந்தான் என்ன மாமா என்ன விஷயம் என்று கேட்டான் ஒன்னும் இல்லப்பா பூஜிமா night சாப்பிடல அப்படின்னு உங்க அத்தை சொன்னாள், அது தான் ஏன் சாப்பிடலனு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன் என்று சொன்னேன், அப்படியா மாமா எனக்கு இந்த விஷயம் தெரியாது நான் வரும்போது அவள் தூங்கிகொண்டு தான் இருந்தாள் சரி தூங்கட்டும் என்று நானும் விட்டு விட்டேன் என்று சொன்னான். சரிப்பா விடு தூங்கட்டும், நான் போய் படுக்கிறேன் என்று அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

Super
Next part
Pls update next part
Next part when uploaded yesterday no update Waiting for update
Yesterday next not updated plz uploaded next part soon waiting