புருஷனால முடியல… பொண்டாட்டி எங்க போவா… ஏதோ ஒன்னு செஞ்சு தானே ஆகணும்…
என்று பூடாகமாக சொல்ல, மல்லிகா,
என்னங்க்கா… ஏதாவது எசகுபிசகா மாட்டிகிட்டாங்களா…
என்று கேட்க,
ஆமாம் ஆமாம்… அவ நட்ட நடு ராத்திரியில வெட்ட வெளில எசகுபிசகா இருந்தத மாமியார்காரி பார்த்துட்டா… ஒரே பிரட்சனை… ஒரே சண்டை சச்சரவுதான்…
குடி கெட்டது போங்க… வெட்ட வெளியில யார்கூடங்க்கா பண்ணினாங்க…
என்று ஆர்வமாய் மல்லிகா கேட்க,
எல்லாம் அவளோட….
என்று சொல்ல வந்தவள் வாயை திறந்தபடி அதிர்ச்சியாகி எதிரே பார்க்கிறாள். அங்கே புவனா அழுத்தமான மேக்கப்புடன் நீல நிற புடவையில் கிளாமராக உள்ளே வருகிறாள்.
சரசு அவளை பார்த்த அதிர்ச்சியில், மல்லிகாவிடம்,
அப்புறம் பேசிக்கலாம்… இப்ப வேணாம்…
என்று சொல்லி விட்டு, வேகம் வேகமாக இறங்கி செல்கிறாள். மல்லிகாவும் தன்னுடைய ஃப்ளோருக்கு செல்கிறாள்.
