இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு நான் எடுத்த பாடம் 4 66

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையா ஊர் தலைவர் பிரெச்சனை மாலதி கணவர் கிட்டே சொன்னா தீர்ந்துடும்னு நினைச்சா இப்போ என் சந்தோஷத்துக்கே உலை வைக்கிறா மாதிரி ஒருவர் வீட்டிலே இருக்க போகிறார் என்ற செய்தி எனக்கு இடியாக விழுந்தது. ஆனாலும் ஒரு சின்ன திருப்தி வர போகிறவர் காலையில் தானே இருப்பார் நான் இரவு மாலதி கூட சந்தோஷமா இருக்க வாய்ப்பு இருக்கு என்பதால். இந்த யோசனைகள் மனசில் ஓடி கொண்டிருக்க பள்ளி மணி அடித்தது எனக்கு அடுத்த வகுப்பு எடுக்கணும் யோசனைகளை தள்ளி விட்டு வகுப்புக்கு போனேன். ஆறாம் வகுப்பு பசங்க எல்லோரும் வணக்கம் சொல்ல எழுந்து நிற்க நான் பதில் வணக்கம் சொல்லாமல் இருந்ததால் ஒருவன் சார் உட்காரலாமா என்று கேட்டதும் தான் நான் நிஜத்திற்கு வந்து சரி சரி உட்காருங்க இன்னைக்கு அறிவியல் டெஸ்ட் வைக்க போறேன்னு சொல்லி இருந்தேனே எல்லோரும் படிச்சுட்டு வந்தீங்களா என்றதும் பசங்க எல்லோரும் ஒரே குரலில் சார் இன்னைக்கு கணக்கு டெஸ்ட் தானே சொன்னீங்க என்றனர். நான் அசடு வழிந்து சரி கணக்கு டெஸ்ட் தான் என்று கரும்பலகையில் கேள்விகளை எழுத ஆரம்பித்தேன். பொதுவா வகுப்பு போகும் போது நான் மொபைல் ஆப் செய்துட்டு தான் போவேன் ஆனா இன்னைக்கு மறந்து விட்டேன். கேள்விகளை எழுதி கொண்டிருக்கும் போது மொபைல் அடித்தது. பசங்க மறுபடியும் சத்தமாக சார் போன் அடிக்குதுனு குரல் குடுக்க நான் சரி சத்தம் போடாம இருங்க என்று வகுப்பை விட்டு வெளியே சென்று போனை ஆன் செய்தேன். மாலதி நம்பர் இன்னும் பதிவு செய்யவில்லை அதனால் யார் பேசறதுனு கேட்க மறுபுறம் உம் உங்க புது பொண்டாட்டி என்று மாலதி கிண்டலா பதில் சொல்ல எனக்கு கொஞ்சம் புரிந்தது அவ எதுக்கு கால் செய்து இருக்கா என்று. இருந்தாலும் சொல்லு மாலதி வகுப்பில் இருக்கேன் விஷயத்தை சீக்கிரம் சொல்லு என்றேன்.

அவ நீங்க இனிமே வகுப்பிலே தான் இருக்க வேண்டி இருக்கும் இனிமே வீட்டு பக்கம் வர நினைக்காதீங்க உங்க கிட்டே படிச்சு சொன்னேன் அந்த தலைவர் கிட்டே வம்பு வச்சுக்க வேண்டாம் நீங்க அவர் கிட்டே சண்டை போட்டது மட்டும் இல்லாம என் மாமா கிட்டேயும் விஷயத்தை சொல்லிடீங்க இப்போ மாமா பயந்து போயி என் பாதுகாப்புக்கு அவர் தம்பியை அனுப்பி இருக்கார். இப்போ என்ன செய்ய போறீங்க தம்பி குளிச்சுட்டு இருக்கார் அதான் கால் செய்யறேன் நான் உடனே போன் ஆப் செய்து விடுவேன் மாமாவுக்கு தெரியாது இல்ல என் கிட்டே போன் இருக்கிறது என்று சொல்லி விட்டு நான் பதில் சொல்வதற்குள் கட் செய்தாள். மீண்டும் வகுப்புக்குள் போனாலும் எனக்கு சொல்லி தரும் மூட் இல்லை. பசங்க கிட்டே பசங்களா இன்னைக்கு டெஸ்ட் இல்லை வேறு ஒரு நாள் வைக்கிறேன் என்றதும் ஒரு பையன் எழுந்து சார் இன்னைக்கு தான் படிச்சுட்டு வந்திருக்கிறோம் ஏன் சார் வீட்டிலே ஏதாவது பிரெச்சனையா என்று கேட்க நான் அவனை முறைத்து பார்த்து அதிகப்பிரசங்கி எனக்கு தெரியும் எப்போ டெஸ்ட் வைக்கணும்னு இப்போ ஒழுங்கா வாய்ப்பாடு எழுதுங்க என்று சொல்லி விட்டு என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன்.

எப்போடா மணி அடிக்கும் என்று பார்த்தது கொண்டிருந்தேன். மணி சத்தம் கேட்டதும் பசங்க எழுந்து வகுப்பை விட்டு ஓடினாங்களோ இல்லையோ நான் வேகமாக அறையை விட்டு வெளியே சென்றேன். ஸ்டாப் ரூமில் ரெண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள். வேறு வழியில்லாமல் பாத் ரூம் சென்றேன். மாலதி நம்பரை ரெண்டு மூணு முறை போட்டு பார்த்தேன் சுவிட்ச் ஆப் என்றே வந்தது. நானும் விடாமல் போட்டு கொண்டிருந்தேன். ஐந்தாறு முறை விட்டு விட்டு போட்ட பிறகு கடைசியா மாலதி சொல்லுங்க என்று ரகசியமா பேச நான் ஹே என்னப்பா போன் சுவிட்ச் ஆப் செய்து இருக்கே எனக்கு இருப்பே இல்லை என்ன செய்ய போறே என்றேன். அவ ரொம்ப பொறுமையா என்ன நீங்க என்னமோ ஆடி மாசம் பொறந்த வீட்டுக்கு போன பொண்டாட்டி கிட்டே கேட்கறது மாதிரி கேட்கறீங்க இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகல நீங்க இங்கே இருந்து கிளம்பி இப்போ எதுக்கு பதட்டம் அது மட்டும் இல்ல வம்பை விலைக்கு வாங்கியது நீங்க தானே பொறுமையா இருங்க நடக்கறது எல்லாம் நல்லதுக்கேன்னு எடுத்துக்கோங்க. தம்பி இன்னும் என் கிட்டே எதுவும் விவரமா பேசல அவர் பேசாம நான் அவர் கிட்டே எதுவும் துருவி கேட்க முடியாது. ஆனா தம்பி இங்கே தாங்கறா மாதிரி வந்தா மாதிரி தெரியல அவர் எதுவும் துணி எல்லாம் எடுத்து வரல ஒரு வேளை தலைவர் கிட்டே பேசிட்டு கிளம்பினாலும் கிளம்பிடுவார் அவர் இல்லாத போது நானே பேசறேன் சரி தம்பி வரார் வைக்கிறேன் என்று கட் செய்தாள்.

பள்ளி முடிந்து வீட்டுக்கு போவதா அலல்து என்ன தான் நடக்கும்ன்னு தைரியமா மாலதி வீட்டுக்கே போகலாமா இல்லை இரவு வரை காத்திருக்கலாமா என்று குழம்பியது மனசு. நேரா என் வீடு அருகே சென்றேன். போகிற வழியில் இன்னொரு பள்ளி ஆசிரியர் பைக்கில் வந்து கொண்டிருந்தவர் வண்டியை நிறுத்தி பேச்சு குடுத்தார். எனக்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. நடந்து போனாதான் என்னை அந்த ஊர் தலைவர் அடையாளம் கண்டுப்பார் நாம் இந்த பைக்கை கடன் வாங்கிகிட்டு போகலாம் மாலதி வீட்டை ஒரு ரவுண்டு அடிப்போம் வாய்ப்பு கிடைச்சா வீட்டுக்குள்ளே போகலாம் இல்லைனா திரும்பிடலாம் இரவு பார்த்துக்கலாம் என்று முடிவு செய்து நண்பனிடம் கொஞ்சம் பேசி விட்டு அவனிடம் பைக் ஒரு ரெண்டு மணி நேரம் கிடைக்குமா என்றேன். நான் பொதுவா பைக் ஒட்டி அவன் பார்த்தது இல்லை அதனால் என்ன புதுசா பைக் கேட்கிறேனு யோசித்து முதல் முறையா அவனிடம் கேட்பதால் மறுக்க முடியாமல் சரி இந்த எடுத்து கிட்டு போங்க திருப்பி வரும் போது வீட்டிலே விட்டுடுங்க என்றார். நான் ஹெல்மெட் போட்டு முகத்தை மறைத்து கொண்டு பைக்கில் ஏறி மாலதி வீடு பக்கம் சென்றேன். மாலதி வீட்டை நெருங்கும் போதே வாசலில் ஒருவர் திண்ணையில் உட்கார்ந்து இருப்பது தெரிந்தது அப்போ இந்த நேரம் போக முடியாது வாடிய மனசோடு பைக்கை மறுபடியும் என் வீட்டு பக்கம் திருப்பினேன். திரும்பி கொண்டிருக்கும் போது ஒரு சின்ன குழப்பம் மாலதி வீட்டின் முன் உட்கார்ந்து இருந்தவர் நல்ல வாட்ட சாட்டமா ஆர்மியில் வேலை செய்பவர் போல இருக்கார் ஒரு வேளை இங்கே தங்கிட்டா மாலதி பார்வை அவர் பக்கம் திரும்பிடுமோ என்று.

மாலதி வீட்டு தெருவை திரும்பும் போது எதுக்கும் மாலதி அண்ணன் வீடு வழியா போகலாம் ஒரு வேளை ரஞ்சித் அங்கே விளையாடி கொண்டிருந்தா அவன் கிட்டே பேச்சு குடுத்து மாலதி என்ன செய்யறா என்று தெரிந்து கொள்ள முடியும்னு வண்டியை திருப்பினேன். மறுபடியும் மாலதி வீட்டை கடந்து போகும் போது திண்ணையில் யாரும் இல்லை அப்போ அவன் உள்ளே இருக்கிறான் மாலதியும் உள்ளே தான் இருக்கணும் ஒரு வேளை கை வச்சு இருப்பானோ என்றெல்லாம் மனசு அலைபாய்ந்தது. என்னமோ மாலதி நான் தாலி கட்டிய பொண்டாட்டி மாதிரி நானே யாருடைய பொண்டாட்டியை அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன் ஒரு மாசமா இதுலே பொறாமை தான் கேடா. பைக் மாலதி வீட்டை கடக்கும் வரை நான் ரோடு பார்த்து ஒட்டவில்லை வீட்டை பார்த்து கொண்டு தான் ஓட்டினேன். கொஞ்சம் கடந்து போன பிறகு ரோடு மேல் பார்வை திரும்பியது. பைக்கை உருட்டி கொண்டு போற அளவுக்கு தான் வேகம் இருந்தது. மாலதி அண்ணா வீடு ரெண்டு தெரு தாண்டி இருந்தது.