ஆதலால் காதல் செய்வீர் Part 6

திவ்யாவிற்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் ,

தர்ஷன் மனைவியாகிய இந்த திவ்யாவிற்கு கதிரவன் மனைவி எழுதிக்கொள்வது… நீ நினைக்கலாம் மூன்று நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் எப்படி நான் உன்னை தர்ஷன் மனைவி என்று குறிப்பிட்டேன் என்று ,அது உனக்கு அதிர்ச்சியாகவும் இருக்கலாம் எனக்கு தெரியும் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று …

ஏனென்றால் அவன் ஒரு துரோகி நீயும் ஒரு துரோகி தான் சொந்த சகோதரிக்கு துரோகம் செய்த துரோகி நீ …

ஒவ்வொரு துரோகத்திற்கும் ஒருவகையான தண்டனை கண்டிப்பாக உண்டு.நீ செய்த துரோகத்திற்கான தண்டனை சில மாதங்களில் கிடைக்கும்.அது எந்த வகை தண்டனை என்று அதுவரை உனக்கு தெரியாது.தெரியும் பொழுது அதற்காக நீ வருத்தப்படுவாய்.அப்படி வருத்தப்படும் போதும் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது …

அதுவரை நீ சந்தோஷமாக இரு… இப்பொழுது நாங்கள் எங்கே என்று நீ கேட்கலாம் எங்களுக்கு உங்களைப் போன்ற துரோகிகள் உடன் வாழ விருப்பமில்லை …எனவே நாங்கள் எங்களுக்காக ஒரு பிள்ளையை தத்து எடுத்துக் கொண்டோம்… அது வேறு யாருமல்ல நீ வேண்டாம் என்று ஒதுக்கிய உத்தமன் ராஜாதான் …நீ அவனை பிச்சைக்காரன் என்று நினைத்தாய் உண்மையிலேயே நீங்கள் இருவரும் தான் பிச்சைக்காரர்கள்…

அவன் தான் ராஜா குரூப் ஆப் கம்பெனிகளின் ஓனர்.கையில் கிடைத்த வைரத்தை கூலாங்கல் ஆக நினைத்த நீ கூழாங்கல்லை வைரமாக நினைத்துக் கொண்டாய்… மிஸ்டர் தர்சனுக்கு நீங்கள் தற்போது நிற்கும் வீடும் தற்போது வைத்திருக்கும் கம்பெனிதான் சொத்து …

மீதமுள்ள அனைத்தும் என்னுடைய கணவரின் சுய சம்பாத்தியத்தில் வந்தது. அவையனைத்தும் எங்களுடைய மகன் ராஜாவுக்கு தான்.அதை நாங்கள் உயில் எழுதி வைத்து விட்டோம்…

நீங்கள் இருவரும் உழைத்தால் பிழைப்பீர்கள். இல்லை என்றால் மீதி வார்த்தையை நான் சொல்ல விரும்பவில்லை…. உன்னுடைய கணவன் மீது எப்பொழுதும் ஒரு கண்ணாயிரு …இல்லை என்றால் அவன் தன்னுடைய சுய தேவைக்காக உன்னை விபச்சாரியாக விற்க கூட தயங்க மாட்டான்…

புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்..

நன்றி ..

என்று முடிந்திருந்தது

காவியாவை ஆசிரமத்தில் கொண்டு விட்ட அன்று ராணி பெட்டியுடன் தயாராக காத்திருந்தாள் ..
ராணியை பார்த்ததும் காவியாவிற்கு அவளை எங்கோ பார்த்தது போல் இருந்தது
…நீங்கள் யார் என்று கேட்டாள்

ராணி தன்னை குறித்து அவளிடம் சொன்னாள் ….அவளுக்கு இப்பொழுது நன்றாக புரிந்தது.ராணி காவியாவை விட பேரழகி …அந்த ராணுவ தங்குமிடத்தில் அவளுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது …ஆனால் அவள் யாரையும் ஏறெடுத்து பார்க்க மாட்டாள்… தன்னுடைய புருஷன் தன் குழந்தை என்ற இருந்துவிட்டாள் .

அவள் இங்கு எப்படி வந்தால்… புருஷன் இறந்ததும் எங்கேயோ காணாமல் போய்விட்டாய் என்று நினைத்து அவளைப் பற்றி அவரிடமே கேட்டுக்கொண்டாள் …

அவளும் நடந்ததையெல்லாம் சொன்னால் கடைசியாக காவியா ராணியிடம் இப்பொழுது எங்கு கிளம்பி செல்கிறீர்கள் என்று கேட்டாள் …அதற்கு அவள் உங்களுடைய கணவன் என்னை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் …அதனால்தான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டாள்… அது காவியாவிற்கு உறுத்தலாக இருந்தது …

இருந்தாலும் கணவன் மேல் நம்பிக்கை இருந்தது…. கிருஷ்ணனும் அப்படித்தான் சுய ஒழுக்கம் உள்ள மனிதராக இருந்தார் …

பேரழகியே அவர் முன் அம்மணமாக நின்றாலும் அவர் அவளை ஏறெடுத்துப் கூட பார்க்க மாட்டார் என்று அவளுக்கு தெரியும்… அப்படி இருக்க ஏதாவது வீட்டில் வேலைக்கு அவளை அழைத்துச் செல்வார் என்று நினைத்துக்கொண்டாள்…

ராணி எப்படி பெட்டியுடன் தயாராக காத்திருந்தால் என்று நீங்கள் நினைக்கலாம்… ஆம் காவியாவின் சகோதரர்கள் இருவர் தான் அதற்கு காரணம் …சகோதரர்கள் இருவரும் ராணியிடம் தொடர்ந்து படையெடுத்தனர்

கிருஷ்ணனைப் பற்றியும் அவருடைய மகள் பவித்ராவை பற்றியும், காவியாவும் திவ்யாவும் அவர்கள் இருவருக்கும் செய்த துரோகங்களை பற்றியும் ,தற்பொழுது கிருஷ்ணனும் பவித்ராவும் படும் வேதனையையும் எடுத்துக் கூறிக் கொண்டே இருந்தார்கள் …

தினமும் அண்ணனும் தம்பியும் மாறி மாறி வந்து அவளை மனமார செய்தார்கள்… நீயும் எனக்கு ஒரு சகோதரி தான் இவ்வளவு நாளும் அனாதையாக இருந்து விட்டாய்… தற்போது அங்கு சென்றால் உனக்கு உறவாக ஒரு கணவனும் பெறாத மகளும் கிடைப்பார்கள் …

அப்படி உனக்கு செல்ல விருப்பமில்லை என்றாலும் எங்களுடன் வந்துவிடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *