வாசமான ஜாதிமல்லி – பாகம் 5 49

“நீ இப்போது செல்ல வேண்டியதுக்கு என்ன அவசரம், அப்படி என்ன முக்கியமான விஷயம்? இந்த சோகமான நேரத்தில் உன் அம்மாவும் தங்கைக்கும் நீ இங்கு இருப்பது தானே நல்லது.”

“எனக்குத் தெரியும், ஆனால் நான் அங்கே ஒரு தொழிலைத் தொடங்கி இருக்கேன், அதற்கு என் அவசர கவனம் இப்போது தேவை. நான் ஒரு வாரத்தில் மீண்டும் இங்கு திரும்பி வருவேன்.”

சரி, நீ உன் பிசினெஸ் ஒருவருக்கு விற்கவோ அல்லது அதை அங்கே மூடிவிட்டு நீ இங்கு நிரந்தரமாக வர முடியாதா? உன் தந்தை இனி இல்லை என்று ஆகிவிட்டதால் உன் அம்மாவுக்கு நீ இங்கேயே இருந்தால் நல்லது.”

“அது சாத்தியமில்லை, நான் சேமித்த என் பணத்தை அதில் நிறைய முதலீடு செஞ்சிட்டேன். பிசினெஸ் வளரும் முன்பு நான் விற்க நினைத்தால் ரொம்ப கம்மியான விலை தான் கிடைக்கும். நான் அதைச் முதலில் மேம்படுத்துத வேண்டும்.”

“ஓ, அப்படியா. அப்போ ஏன் உன் அம்மாவை நீ உன்னுடும் அழைத்துச் செல்லக்கூடாது. உன் தந்தை இனி இங்கு இல்லாமல் இருக்க அவுங்க மிகவும் தனிமையாக உணருவங்க. உன்னுடும் இருந்தால் அவுங்க பேரக்குழந்தையைப் பார்ப்பது அவுங்களுக்கு ஒருவித ஆறுதலாக இருக்கும். ”

“நான் இதை சொல்லி இருக்க மாட்டேன்னா, ஆனால் முடியாது என்று சொல்லிட்டாங்க. அவுங்க வாழ்க்கையை முழுதும் கிட்டத்தட்ட கழித்த வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதியாக சொல்லிட்டாங்க. நான் அவுங்கள சம்மதிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன், முடியில, ரொம்ப பிடிவாதமாக இருக்காங்க.”

பிரபு தனக்குத்தானே நினைத்துக் கொண்டான், ”இது முரண் இல்லை. நான் மீராவை மயக்க முயற்சித்தபோது, நான் ஒரு பெரிய கதை அவளிடம் விட்டேன். ஏனென்றால் என்னால் மீராவை போல ஒரு அழகான மனைவி அமைந்தால் என்னால் ஒரு தொழிலை நடத்த முடியாது. மனைவியை சுற்றி சுற்றி வருபவன் எப்படி தொழிலை கவனம் செலுத்த முடியும் என்று. அவளை வாச படுத்த அவளை புகழ்ந்து பேசின பேச்சு. இப்போது எனக்கு பொறுப்புகள் உள்ளன, நிஜ வாழ்க்கை சூழ்நிலையில், வாழ்வாதாரம் முக்கியம் ஆகிவிட்டது. பொறுப்பில்லாமல் சும்மா சுற்றிக்கிட்டு இன்னொருவனின் மனைவியின் கற்பை பறிக்க முயற்சிப்பது எளிது. அனால் இப்போ குடும்பம், பொறுப்பு என்று வந்த போது இதுவெல்லாம் செய்யவா முடியும். இப்போது தான் சரவணன் இருந்த நிலைமை சரியாக புரிந்தது.

2 Comments

  1. Super Saravana…

  2. சூப்ப்ர்ஹீரோ

Comments are closed.