மாமி எங்களுக்குத் தூரத்து உறவு 264

மாமி எங்களுக்குத் தூரத்து உறவு. உறவுமுறைப்படி அவளோட புருஷன் எனக்கு மாமா முறை ஆகணும். மாத்தூர் அவர்கள் குடியிருந்த ஊர்.

வேறு சில மாமிகளும் எனக்கு இருந்ததால் இந்த மாமியைக் குறிப்பிடுவதற்காக அவளது ஊர்ப் பெயரையும் சேர்த்து மாத்தூர் மாமி என்று சொல்வோம்.

நாங்கள் சிட்டியில் குடியிருந்தோம். மாமியின் ஊர், மாத்தூர், சிட்டியில் இருந்து 75 கிலோமீட்டர் தள்ளி இருந்தது.

தூரத்து உறவுதான் என்பதால் அவர்களுடன் எங்களுக்கு நெருங்கிய உறவு இல்லை.

எப்போதாவது கல்யாணம், காட்சி என்று நல்லது கெட்டதின்போது பார்த்து நலம் விசாரித்துக்கொள்வதோடு சரி.

இருந்தாலும் மாமி எங்களிடம் மிகவும் பிரியமாக இருந்தாள்.

எங்களை விசேஷங்களில் பார்க்கும்போதெல்லாம் “ஒரு தடவை வீட்டுக்கு வாங்க” என்று அழைப்பாள்.

சும்மா உபசாரத்திற்கு அழைக்காமல் மனமுவந்தே அழைப்பாள்.

ஒரு முறை கோடை விடுமுறையின்போது “யார் வீட்டுக்குப் போவது?” என்று பேசிக்கிட்டிருந்தபோது, வழக்கமாகப் போகும் இடத்திற்குப் போகாமல் இந்த முறை வித்தியாசமாக எங்கேயாவது போவோம் என்று பேசிக்கிட்டிருந்தோம்.

அப்போது எங்க அம்மா ஒரு யோசனை சொன்னாங்க.

பேசாமல் மாத்தூர் மாமியின் வீட்டுக்குப் போனால் என்ன, ரொம்ப நாளா நம்மை கூப்பிட்டிருக்காளே என்பதுதான் அந்த யோசனை.

அந்த யோசனையை முழு மனதோடு ஏத்துக்க முடியலை. அவங்க எங்களுக்குத் தூரத்து உறவுதானே என்பதால் எழுந்த தயக்கம்.

இருந்தாலும் போய்த்தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தோம்.

கோடை விடுமுறையைக் கழிப்பதற்கு மாத்தூர் வருகிறோம் என்று கடிதம் எழுதிப் போட்டோம்.

மாமியின் வீட்டில் தொலைபேசி கிடையாது. உடனே பதில் கடிதம் வந்தது.

“அதுக்கென்ன, தாராளமா வாங்க” என்று மாமி பதில் எழுதியிருந்தாள்.

இந்த இடத்தில் மாமியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

நல்லா, மூக்கும் முழியுமா இருப்பாள் மாமி. மாமாவைவிட வயதில் இளையவள்.

அவளுக்கும் மாமாவுக்கும் இடையே பத்து வயசு வித்தியாசம்.

அவளுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை.

மாமியின் பெண் என்னைவிட வயதில் மூத்தவள். எனவே நான் அவளை திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை.

மாமியையும் அவளது பெண்ணையும் பக்கத்தில் பக்கத்தில் நிறுத்தி வைத்துப் பார்த்தால் இரண்டு பேரும் அம்மா – பெண் போல இருக்க மாட்டார்கள்.

ஏதோ அக்கா தங்கச்சி போலதான் இருப்பார்கள். அந்த அளவுக்கு மாமி இளமையாக இருப்பாள்.

கோடை விடுமுறைக்காக முதல் முறையாக மாத்தூர் மாமி வீட்டுக்குப் போயிருந்தோம் முதல் முறையாக.

1 Comment

  1. Mannichidunga ram mamma kulanthaikalukaha ithai Panren next part.. cont

Comments are closed.