மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 6 127

ராம்மிடம் எதுவும் சொல்லாமல், சுவாதி சிவராஜ்ஜிடன் வெளியே செல்வது ஆச்சர்யமாக இருந்தது. அவனுக்கு அது கொஞ்சம் கோபமூட்டினாலும், அதை அடக்கிக் கொண்டு அவன் மகளை சாப்பிட வைத்தான்.

சற்று நேரம் கழித்து காலிங்பெல் சத்தம் கேட்டது. ராம் கதவை திறந்தான். சிவராஜ்ஜுடன் கூட இருப்பவர்கள் சுப்பு உடன் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர்.

ராம்: சிவராஜ் சார் இல்லை. வெளியே போயிருக்காரு.

சம்பத்: தெரியும். அவர் சொல்லி தான் வந்திருக்கோம்

அவனை கடந்து சிவராஜ்ஜின் அறைக்குள் சென்றனர். ராம் பதட்டமடைந்து சிவராஜ்ஜிற்கு போன் செய்து நடந்தவற்றை விளக்கினான்.

சிவராஜ்: நான் தான் அனுப்பினேன். கொஞ்ச வேளை இருக்கு. அவங்க பாப்பாங்க. நீங்க போய் தூங்குங்க. உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க.

சிவராஜ் பேசிவிட்டு காலை கட் செய்யும் போது, அவனது மனைவியின் குரல் கேட்டது,

சுவாதி: “ம்ம்ம் இது நல்லாயிருக்கு. அழகாயிருக்கு. என்னங்க இது எப்படி இருக்குன்னு பாருங்க.”

சிவராஜ்: ம்ம்ம் நல்லாயிருக்கு. உனக்கு பிடிச்சிருக்குன்னா இதையே எடுத்துக்கோ

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ராம் குழப்பமடைந்தாலும், அவன் மனதில் இருந்த பயம் மறைந்துவிட்டது. சிவராஜ் ஆட்கள் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான். சிவராஜ்ஜின் அறையில் இருந்த அலமாரியை நகர்த்தி, ராம் அறையில் வைத்தனர். ராம் அறையில் இதுவரை எந்த அலமாரியும் இல்லை. குடிக்க தண்ணீர் கேட்க, ராம் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தான். அவர்கள் வேலையை முடித்துவிட்டு சோபாவில் உட்கார்ந்திருந்தனர். ஒரு மணி நேரம் கழித்து சிவராஜ்ஜின் சுவாதியும் வீடு திரும்பினர். இருவரின் முகத்தில் புன்னகை படர்ந்திருக்க, சிவராஜ்ஜின் விரல்கள் சுவாதியின் இடையில் இருந்தது. ராம்மிற்கு அதை பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது. சிவராஜ் அவளின் இடையில் இருந்து கையை எடுக்காமல், சோபா வரை வந்தான். சுவாதியும் ராம்மை பார்க்கவில்லை. சோபாவில் உட்காரும் போது அவளின் இடுப்பில் இருந்து கையை எடுத்தான். சிவராஜ்ஜின் ஆட்களை சுவாதிக்கு சிவராஜ் அறிமுகம் செய்து வைத்தான். ராம்மை பார்த்து சிவராஜ் தண்ணீ எடுத்து வர சொன்னான். ராம் திரும்பி சுவாதியை பார்க்க, சுவாதி அவனை பார்க்காமல், சிவராஜ்ஜின் ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். ராம் கிட்சனுக்கு போய் தண்ணீர் குடுவை எடுத்துக் கொண்டு வந்து சிவராஜ்ஜிடம் கொடுத்தான். பிறகு ஒதுங்கி நடப்பவற்றை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் வேனின் ஹார்ன் சத்தம் வாசலில் கேட்டது. சிவராஜ் அவனின் வேலையாட்களை பார்த்து ஏவினான். மூவரும் வெளியே வேனை நோக்கி சென்றனர். சில நிமிடங்களில் இருவர். புது கட்டிலுடன் ஹாலுக்கு வந்தனர். ஹாலில் வைத்துவிட்டு, சிவராஜ்ஜின் அறையில் இருந்த கட்டிலின் மெத்தையை தூக்கி கீழை வைத்து விட்டு, கட்டிலை தூக்கிக் கொண்டு, வெளியே சென்றனர். சுப்பு புது மெத்தையை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் வைத்துவிட்டு, சிவராஜ்ஜின் அறையில் இருந்த பழைய மெத்தையை தூக்கி சென்றான். அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு, இரண்டு பேர் கவரால் மூடப்பட்ட பெரிய பெட்டி ஒன்றை தூக்கி வந்து ஹாலில் வைத்துவிட்டு, ஹாலில் இருந்து புது கட்டிலை தூக்கிக் கொண்டு சிவராஜ்ஜின் அறைக்கு சென்றனர். சுப்புவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். சிவராஜ்ஜும், சுவாதியும் எழுந்து அவர்களின் அறைக்கு சென்றனர். சிவராஜ் அவர்களை பார்த்து ஆணைபிறப்பித்துக் கொண்டிருக்க், அவனின் கை மீண்டும் சுவாதியின் இடையில் இருப்பதை ராம் கவனித்தான். ராம்மிற்கு அசூதையாக இருந்தது. சுவாதியோ எதையும் பொருட்படுத்தாமல், அவர்கள் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். கட்டிலில் மெத்தையை வைத்து சரி செய்த பின் சுப்பு அதில் ஏறி நான்கு முறை நன்றாக குதித்தான். ராம்மிற்கு அது புதுவகையான விலை உயர்ந்த ஸ்பிர்ங் மெத்தை என புரிந்து கொண்டான். சோதனை முடிந்த பின் சுப்பு பேசினான்

சுப்பு: அண்ணே. நல்லாயிருக்குண்ணே. இனிமே மஜா தான்.

ராம் இதை கேட்டு உணரும் முன்னே. சிவராஜ்ஜின் உதவியாளர் அவனை லேசாக தலையில் அடித்தார்.
சம்பத்; வாய மூடுறா. எப்போ எங்க என்ன பேசனும்னு தெரியலை

அதை பார்த்து அனைவரும் சிரித்தனர். ராமும் சிரித்தான். இருந்தாலும் அவனுக்கு நடப்பது வருத்தத்தை தந்தது. அசிங்கமான உள் அர்த்தத்தில் சொல்லப்பட்ட ஜோக்கிற்கு, அவளின் மனைவியும் சிரித்துக் கொண்டிருப்பதும், சிவராஜ்ஜின் கை அவளின் இடையை பற்றியிருந்ததும், அதை பற்றி கவலைபடாமல், சுவாதி இருப்பதும், அவனை கவலையடையச் செய்தது. அதன் பிறகு மூவரும் சிவராஜ் சுவாதியுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். சாப்பிட்ட பிறகு அனைவரும் அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பேச்சு சற்று நகைச்சுவையாக சென்றது. அப்போது சுப்பு ஒரு 18+ ஜோக்கை சொல்ல, சம்பத். அதை கேட்டு சிரித்தபடியே அவனை லேசாக அடித்தான். சுவாதியும் அவர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருப்பதை ராம் பார்த்தான். சிவராஜ் கை அவ்வப்போது, சிரிக்கும் போது அவளின் தோள்பட்டையை வருடி வருவதை ராம் கவனித்தான். ராம்மிற்கு அங்கு நடப்பவை சங்கடத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம் கழித்து சுப்பு எழுந்து, ஹாலில் இருந்த மூடப்பட்ட பெரிய பெட்டியின் கவரை பிரித்தான். அது அழகிய கண்ணாடி வேலைப்பாட்டுடன் கூடிய பெரிய பீரோ. பிறகு சுப்பு சிவராஜ்ஜின் அறைக்கு சென்று ஒதுங்க வைத்தான். மற்ற இருவரும், பீரோவை தூக்கிக் கொண்டு சிவராஜ்ஜின் அறையில் வைத்தனர். அடுத்த சில நிமிடங்களில் மூவரும் சிவராஜ்ஜிடமும் சுவாதியிடமும் விடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினர்.
சிவராஜ்: ராம் பழைய பீரோ உங்க ரூம்ல இருக்கட்டும். உங்க ரூம்ல பீரோ இல்லையில
அதை கேட்டு ராம் நெகிழ்ந்து போனான். சிவராஜ்ஜிற்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவன் அறைக்கு சென்று தூங்கினான்.

3 Comments

  1. Interest ah ila…… Part 6 romba boreee …..seirathave 10 pakkam read panuna epdi ….. Time waste…. Next part interest ah podunga pls …..rkmba lenth ah ilukathinga

  2. Motham ethana part bro

  3. ரொம்ப husband humiliation இருக்கு. இது ரொம்ப sadist மாதிரி இருக்கு. Very irritating.

Comments are closed.