“நீதானேடீ அவன் கிட்ட பேசுங்க பேசுங்கன்னு நேத்து ராத்திரி பூரா என் உயிரை வாங்கினே?”
“அப்பா…”
“சீனு… நான் நேரா விஷயத்துக்கு வர்றேன்டா.. உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்ன்னு, உன் அம்மாவும், அத்தையும் ரொம்ப ஆசைப்படறாங்கப்பா.. அவங்க எதிர்பார்ப்பிலேயும் தப்பு இல்லே; வாழ்க்கையிலே எல்லாமே அந்தந்த நேரத்துல நடந்து முடியணும்பா..” இதமாக பேசினார், ராகவன்.
“ம்ம்ம்..”
“உஷா… அந்த லலிதாவோட போட்டோவையும், அவளைப் பத்திய குறிப்பையும் எடுத்துட்டு வா.. இந்த பொண்ணு காஞ்சீபுரமாம்… நல்லாப் படிச்சிருக்கா… இங்க சென்னையிலத்தான் வேலை செய்யறாளாம்… உன் அத்தையோட மச்சினருக்கு தெரிஞ்ச ஃபேமலியாம்…”
“ம்ம்ம்…”
“உனக்கு இந்த பொண்ணைப் பிடிச்சிருந்தா, மேல் கொண்டு நடக்க வேண்டியதை பேச ஆரம்பிக்கலாம்…”