ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 9 37

ஏளனம் ததும்பிய வறட்டுப் புன்னகையுடன் ..

வனிதா, “இப்பவும் பார். கேவலம் செக்ஸ் மட்டும்தான் உன் மனசில் முதலில் வருது”

விஸ்வா, “வேற என்ன?”

வனிதா, “சொல்றேன். ஒரு பெரிய லிஸ்டே இருக்கு. ரெண்டு கால கட்டங்களில் சந்திரசேகரோடு உடலுறவு வெச்சுட்டு உன் மரியாதைக்குப் பாத்திரமா நான் நடந்துக்கலை. ஆனா நான் உன் மேல் வெச்சு இருந்த மரியாதையை பல முறை இழந்து இருக்கே. ஒவ்வொண்ணா சொல்றேன். சொந்த சகோதரனுக்கு பாராட்டு கிடைச்சதால் பொறாமை பட்டது, போரில் அவ்வளவு பெரிய வீர சாகசம் செஞ்சும் அந்தப் பெருமையை மறந்துட்டு கேவலம் ஒரு காலில் அடிபட்டதை நினைச்சுக் வருத்தப் பட்டது, இதை எல்லாத்தையும் விட கேவலம் ஒரு ப்ரொமோஷன் கிடைக்காம இன்னும் ரெண்டு வருஷம் அந்தக் கம்பெனியில் வேலை செய்யணுமேன்னு விரக்தி அடைஞ்சு சுத்தி இருந்த எல்லோரையும், முக்கியமா என்னை அவ்வளவு வருத்தப் பட வெச்சது.

விஸ்வாவுக்கு நெத்தியில் சுத்தியலால் அடித்தது போல் உணர்ந்தான்

விஸ்வா, “சொல்லு விஸ்வா, இதெல்லாம் மரியாதைக்கு உரிய விஷயமா?”

விஸ்வா வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தான் …

வனிதா, “அது மட்டும் இல்லை. கவுன்ஸிலிங்க் தொடக்கத்தில் செக்ஸ் வேற லவ் வேறன்னு நான் சொல்லிட்டு இருந்தேன். நீ அதை ஏத்துக்கலை. ஆனா, நீ கல்யாணம் ஆன பிறகும் அதே செக்ஸ் சுகத்தை சுயமா அனுபவிச்சே. அதுவும் என்னை நினைச்சு இல்லை. மனசில் எதையோ ஃபாண்டஸைஸ் பண்ணிட்டு மாஸ்டர்பேட் பண்ணி இருக்கே. நான் சந்திரசேகரோடு செஞ்சதுக்கும் நீ செஞ்சதுக்கும் என்ன வித்தியாசம்? அதே சுய இன்பம் காணும் பழக்கத்தினால் உன்னால் நீண்ட நேரம் இயங்க முடியாமல் போச்சு. இந்த நிமிஷம் வரை இந்த விஷயத்தை என்னிடம் மறைச்சு இருக்கே. I am the affected party because of that. Don’t you think I deserve the truth? And is your deceit respectable?”

விஸ்வா தலை குனிந்து அமர்ந்து இருந்தான் …

வனிதா, “இதை எல்லாத்தையும் விட நீ என் மரியாதையை மிகப் பெரிய அளவில் எப்படி இழந்தே தெரியுமா?”

விஸ்வா, “ம்ம்ம்?”

வனிதா, “நான் முதல்ல சொன்னதெல்லாம் நடந்த பிறகும் நீ PMLஇல் சேர்ந்த பிறகு PMLலுக்காக அப்படி உழைச்சப்ப மறுபடி என் மனத்தில் நீ உயர்ந்தே. நான் சந்திரசேகர் மேல் எப்பவும் மரியாதை வெச்சது இல்லை விஸ்வா. சபலப் புத்திக்காரன். ஆசையை அடக்க முடியாதவர்ன்னு அவரிடமே கேவலமா சொல்லி இருக்கேன். போரில் அந்த பாகிஸ்தானிய ஆஃபீஸர் தான் தன் குடும்பத்தின் ஒரே மகன், என் மனைவி முழுகாம இருக்கா அப்படின்னு எல்லாம் கெஞ்சியும் நாட்டின் நலனைக் கருதி தீர்க்கமா யோசிச்சு அவனை சுட்டுக் கொன்னேன்னு தெரிஞ்சுட்டப்பவும் உன் மேல் ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. ஆனா, அதே விஸ்வா சுமதி மேடம் தன்னோடு படுக்கணும்ன்னு கண்டிஷன் போட்டான்னு தெரிஞ்சப்போ உன் மேல் நான் வெச்சு இருந்த மரியாதையை ரொம்பவே இழந்துட்டே விஸ்வா.”

விஸ்வா தலைகுனிந்தான் …

விஸ்வா, “இன்னமும் அப்படி கண்டிஷன் போட்டதுக்காக நான் ரொம்ப வெட்கப் படறேன். கடமைக்காக ஒருத்தனைக் என் கையால் இறக்கம் இல்லாமல் கொன்னதுக்காக என் மனத்தில் வந்த குற்ற உணர்ச்சியை விட சந்திரசேகர் சாவினால் எனக்கு இருக்கும் குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுக்க என்னை உறுத்தும்” என்று கண் கலங்கினான் …

வனிதா தன் பங்குக்கு மௌனம் சாதித்தாள் …

பெருமூச்செறிந்த விஸ்வா, “சோ, என்ன செய்யலாம் சொல்லு. எஸ், நீ என் மரியாதையை இழந்துட்டே அதே மாதிரி நான் உன் மரியாதையை இழந்துட்டேன். ஆனா, என்னால் வேற ஒருத்தியை காதலிக்க முடியலை வனிதா. உன்னால் வேற ஒருத்தனை என்னைக் காதலிச்ச மாதிரி காதலிக்க முடியுமா?”

14 Comments

  1. Needed story for all.

    1. ஸ்டோரி சூப்பர் ஆனா முடிவு சுபம் இல்லை வனிதா வுக்கு ஒவ்வொரு முறையும் மெஸ்மோரிசம் பன்னுகிற மருந்து கொடுத்து சம்மதிக்க வைத்ததுபோல் காமித்து இறந்துபோன சந்திரசேகர் மேல் பழியைப் போட்டு விசுவாசம் அனிதாவையும் நலமுடன் வாழ வைத்திருக்கலாம் கதை முதலில் அதை போல் தான் சென்றது கடைசியில் கல்யாணம் முடிந்தது ஜீரணிக்க முடியவில்லை ராம் அவளுக்கு கொழுந்தன் இது செக்ஸ்கதைக்கு ஓகே ஆனால் இந்த ஸ்டோரி அதுபோல் இல்லை

  2. Wonderful story I ever read in this platform, it’s not just a story it’s an experience, Thanks for that Author, may I know your profile id for your other stories?

  3. Good decision and nice ending… congrats…

  4. இந்த தளத்தில் பதிவிடுவதற்கான எந்த விடயமும் இல்லாத ஒரு கதை ஆனாலும் அருமை முடிவு சிறப்பு

  5. Wonderful story I ever read in this platform, it’s not just a story it’s an experience, Thanks for that Author, may I know your profile id for your other stories?

  6. இந்த தளத்தில் பதிவிடுவதற்கான எந்த விடயமும் இல்லாத ஒரு கதை ஆனாலும் அருமை முடிவு சிறப்பு

    Superb.Hats off author

  7. Really a wonderful realistic and practical story describing the basic necessities and understanding between the spouses. Is this a real story based on name change?

  8. மிக அருமையான கதை மனோதத்துவ சிகிச்சைகுறித்தும் அதன் பலன் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சினைக்கும் தவறுகளுக்கும் ஒருவர் மட்டுமே காரணமாக இருந்திட முடியாது எனும் கதையின் மையமாக இருப்பதாக உணர்கிறேன்

  9. Kathainra perla oru anninravanga amma stage la paakanum sex stories la kadaisila avangala panish panratha ninaixhu ram character ah insult panreenga part 2 potu antha vidow vayum ramayum Sethu vainga it’s the real love for anni amma purinjurukum author ku

  10. Story super…ending nalla yille..
    Vishwa vanitha onne seranum..

  11. அருமையான கதை. படித்து மலைத்து போனேன். அருமையான மனோதத்துவம் கலந்த கதை. வனிதா என் மனதில் உயர்ந்து விட்டாள். உண்மைக் கதைப் போல இருந்தது. திரைப்படம் எடுக்க தகுதியான கதை. Karan johar கொத்திக் கொண்டு போகி விடுவார். இந்த கதையின் பாதிப்பில் இருந்து வெளி வர சில தினங்களாகும் என்று நினைக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.