எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 18 49

“ஹ்ம்ம்.. நீங்கதான் டிவில அட்வர்டைஸ்மன்ட் மட்டுந்தான பார்ப்பிங்க.. பாருங்க..!!”

“ஹஹா.. லூஸு..!!”

தங்கையின் கிண்டலுக்கு அசோக் மெலிதாக சிரித்தான்..!! அவளும் சிரித்துவிட்டு மீண்டும் புத்தகம் வாசிக்க ஆரம்பிக்க.. இவன் டிவியை பார்க்காமல்.. டீப்பாயில் இருந்த செய்தித்தாளை கையில் எடுத்துக் கொண்டான்..!! ரெட்ஹில்ஸ் கொலை கேஸ் புலன் விசாரணையில்.. சமீபத்தைய முன்னேற்றத்தை வாசித்து தெரிந்துகொள்ள ஆரம்பித்தான்..!!

“சங்கீஈஈஈ..!!!!” சமையலறையில் இருந்து பாரதி அலறினாள்.

“என்ன மம்மி..??”

“இங்க கொஞ்சம் வாடி..!!”

“என்னன்னு சொல்லு..!!”

“ப்ச்.. வாடின்னு சொல்றேன்ல.. வா..!!!”
பாரதியின் குரல் அவ்வாறு கோபமாக ஒலிக்க.. சங்கீதா இப்போது எரிச்சலானாள்..!! அந்த எரிச்சலை பதிலுக்கு கத்துவதில் காட்டாமல்.. பக்கத்தில் இருந்த அண்ணனிடம் குறைபட்டுக் கொண்டாள்..!!

“ஹ்ம்ம்.. பாருடா இந்த மம்மியை.. நிம்மதியா ஒரு புக் கூட படிக்க விடமாட்டேன்றாங்க..!! ச்சே..!!”

சலிப்பாக சொன்னவள், கையிலிருந்த புத்தகத்தை மடக்கி, டம்மென்று டீப்பாய் மீது வைத்தாள். அசோக்கின் பார்வை இப்போது எதேச்சையாக அந்த புத்தகத்தின் மீது விழுந்தது. அந்த புத்தகத்தை பார்த்ததும், அவனுடைய நெற்றி நெருக்கமாய் சுருங்கிக் கொண்டது. அது.. மும்தாஜ் இவனிடம் படிக்க சொல்லி கொடுத்த அந்த புத்தகம்.. கிறித்தவ மத போதனைகளை உள்ளடக்கிய புத்தகம்.. ஆர்வமில்லாமல் இவன் இத்தனை நாட்களாய் படிக்காமலே வைத்திருந்த புத்தகம்..!!

“ஹேய்.. சங்கி.. இ..இது.. இது என்னோட..” அசோக் முடிக்கும் முன்பே,

“ம்ம்.. ஆமாம்.. உன் பேக்ல இருந்த புக்தான்.. போரடிக்குதுன்னு நான்தான் எடுத்துட்டு வந்து படிச்சுட்டு இருந்தேன்..!! சும்மா சொல்லக் கூடாது.. ஜீசஸோட லைஃப் ஹிஸ்டரி.. படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு..!!”

சங்கீதா சிந்திய வார்த்தைகளில் உண்மையான ஒரு உற்சாகம் பொங்கியது..!! அசோக் இப்போது மீண்டும் அந்த புத்தகத்தின் மீது பார்வையை வீசினான்.. புத்தக முகப்பில் பெரிதாக எழுதப்பட்டிருந்த அந்த தலைப்பை கண்களாலேயே வாசித்தான்..!!

“தட்டுங்கள் திறக்கப்படும்..!!”

அதை வாசித்த அந்த நொடியிலேயே…

“மனம் போலே எல்லாம் நடக்கும்..!!” டிவியில் பாண்ட்ஸ் விளம்பர பாடல் ஓடியது.

“போடா.. போய் தேடு..!! தேடுனாத்தான் எதுவும் கெடைக்கும்.. தட்டினாத்தான் எதுவும் திறக்கும்..!!”

என்று.. பாரதி மூன்று நாட்களுக்கு முன்னால், கிருஷ்ண பகவான் கோவிலில் வைத்து அவனிடம் சொன்னதும் நினைவுக்கு வர.. அவனது உடலில் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பு எழுந்து அடங்கியது..!! அந்த புத்தகத்தை எடுப்பதற்காக மெல்ல கையை நீட்டினான்.. புத்தகத்தை பற்றி டீப்பாயில் இருந்து எடுத்தான்..!! அதே நேரத்தில்.. சங்கீதா அம்மாவின் அழைப்பிற்காக சோபாவில் இருந்து அவசரமாய் எழ.. ஆக்சிடன்டலாக அண்ணனின் கையை தட்டிவிட்டாள்..!!

அந்த புத்தகம் அசோக்கின் கையிலிருந்து விடுபட்டு.. எங்கோ அந்தரத்தில் பறந்தது..!! சங்கீதா ‘ஓவ்’ என்று ஓசை எழுப்பிக்கொண்டே.. அந்த புத்தகத்தை கீழே விழாமல் பிடிப்பதற்காக.. கைநீட்டியவாறே திடீர் பரபரப்புடன் நகர்ந்தாள்..!! அந்த புத்தகத்தில் இருந்து விடுபட்ட அது மட்டும்.. காற்றில் மிதந்து.. பறந்தவாறே கீழிறங்கி.. அசோக்கின் மடியில் வந்து மெல்ல அமர்ந்தது..!!

அது.. ஒரு புகைப்படம்.. ஒரு பெண்ணின் புகைப்படம்..!! அந்தப் பெண்ணின் முகம் மட்டுமே பிரதானமாக தெரியுமாறு.. படம்பிடிக்கப்பட்ட புகைப்படம்..!! அந்த முகம் கூட முழுதாக தெரியவில்லை.. அந்தப்பெண் தனது துப்பட்டாவால் பாதி முகத்தை மூடி சுற்றியிருக்க.. அவளது கண்கள் மட்டுமே தெளிவாக பிரகாசித்தன..!!