“இல்……… இல்ல….. அது வந்து” அவன் குரலில் நடுக்கம்.
என்ன ப்பா சொல்லு,
ஏன் கலை உங்க அம்மா பக்கத்துல இருக்காங்களா?
இல்ல கிஷோர், அவங்க இன்னும் கடைல இருந்து வரல. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க.
கிஷோரின் தலையில் முதல் இடி விழுந்தது.
ஓஓ!!!!! உங்க அம்மா பேரு என்னது?
ஏய் என்னாச்சு உனக்கு, திடீர்னு போன் போட்டு எங்கம்மா பேரு என்னன்னு கேக்குற.
இல்லப்பா அது சும்மா தான். நீ சொல்லு
எங்க அம்மா பேரு மஞ்சு பார்கவி.