இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 3 93

“நான் ஒரு மணி நேரம்……….. அது எப்புடி…………. உனக்கு”

ராம் திக்கி திணறி பேச, அந்த நேரம் பார்த்து அந்த ஆண்ட்டி சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வெளிவர ராம் பக்கத்தில் இருந்த கிஷோரை பார்த்ததும் முகத்தை முந்தானையால் மூடிக் கொண்டாள்.

கிஷோர் அந்த பெண்ணையும் ராமையும் ஒரு விதமான சந்தேகத்துடன் பார்க்க, அவள் முகத்தை மூடிக் கொண்டே அவர்கள் அருகே வந்து எதுவும் பேசாமல் கிஷோரை பார்த்து நகரும் படி சைகை செய்தாள். கிஷோர் நகர, அவளுடைய ஸ்கூட்டியில் சாவியை நுழைத்து திருகி வண்டியில் விர்ரென புறப்பட்டு சென்றாள்.

அவள் அருகே வரும் பொது, சற்று முன் ராமின் மேல் வீசிய அதே நெடி (வேர்வை, ஷாம்பு மற்றும் வேறு ஒரு இனம் புரியாத மணம்) அந்த பெண்ணின் மேலும் வீச, கிஷோர் முற்றும் புரிந்தவனாக ராமை அதிர்ந்து பார்த்து

“என்னடா தம்பி பண்ணி வச்சுருக்க, யாருடா அவங்க”

“அவங்க பேரு மஞ்சு.. எப்புடி நடந்தது ன்னு தெரியாம நடந்துருச்சு ன்னே!! ப்ளீஸ் யாரு கிட்டயும் சொல்லாத ன்னே”

கிஷோரின் செல்போன் திரை மின்ன, அதில் மச்சினிச்சி வனிதா calling

“ப்ளீஸ் ண்ணே!!! போன் எடுக்காத, எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்”

“சரி ஏறுடா வண்டில”