யே நீ எந்த காலத்துல இருக்க? Part 3 234

“ஹோ..”
அவன் சொற்கள் உயிரற்றதாய் தோன்றியது. தன்னிடம் பேசும்போது எழும் இயல்பான அந்த புன்னகையுமில்லை. அவளுக்கு புரிந்தது. அவன் கண்களை நேராகப் பார்த்து இதழ்களை நாவால் தடவிச் சிரித்தாள். அவளிடம் எழுந்த தயக்கமும் தடுமாற்றமும் அவளின் உள்ளாழத் தவிப்பை உணர்த்தியது. அவன் குடித்திருப்பது ஒன்றே அவளுக்கு தடையாயிருப்பதை உணர்ந்தான்.
“ஸாரி பேபி” என்றான்.
புரியாமல் பார்த்து “ஏன்? ” எனக் கேட்டாள்.
“நான் குடிச்சது உனக்கு புடிக்கல”
“அப்படி இல்ல..” ‘ஆமாம்’தான். ஆனால் அதைச் சொல்ல மனம் வரவில்லை. அது அவனை புறக்கணிப்பதாய் ஆகும். ‘இல்லை. நான் உன்னை ஒதுக்கவில்லை’ என்று சொல்ல வேண்டும். ஆனால்…
“பரவால்ல” சிரித்தான்.
தயக்கத்துடன் அவனைப் பார்த்து நின்றாள். பின் ஒரு நொடியில் தன்னைத் திரட்டிக் கொண்டு முலையெழ பெருமூச்சு விட்டு அவனை நெருங்கினாள். படபடத்த நெஞ்சத்துடன் தன் வலக் கன்னத்தைக் காட்டினாள்.
“என்ன?” சிரித்தபடி கேட்டான்.
“கிஸ் குடுத்துக்கோங்க. கன்னத்துல மட்டும்”
சிரிப்பு மாறாமல் அவள் கன்னத்தில் முத்தமிட்டான் “லவ் யூ ஸோ மச் பேபி”
“மீ டூ..”
“ஒரு ஹக் பண்ணிக்கவா?”
“ம்ம்” தலையசைத்து நின்றாள். அவன் மூச்சுக் காற்றின் வாசத்தில் லேசான பிராண்டி வாசமிருந்தது.
அவள் தோள்களில் கைகளை வைத்து மெல்ல அணைத்தான். அவளே முன்சென்று அவன் நெஞ்சில் அணைந்தாள். அவள் கைகள் அவன் உடலை சுற்றி வளைத்து அணைத்தன. அவளின் சிறு முலைகள் அவன் நெஞ்சில் புதைய அணைத்து தழுவி அவளின் உச்சியில் முத்தமிட்டான். ஒரு நொடி அவள் சிலிர்ப்புடன் அவனை இறுக்கி அணைத்து விடுவித்தாள். பின் விலகி துப்பட்டாவை சரி செய்து கொண்டு “ஓகே. நான் முன்னால போறேன். வாங்க” என்று திரும்பி நடந்தாள்.
இரண்டு நிமிடங்கள் கழித்து கதவைச் சாத்திவிட்டு அகல்யாவின் வீட்டுக்குச் சென்றான் நிருதி.. !!
அகல்யாவுடையது எளிமையான பழைய வீடு. அவள் அப்பாவின் பூர்வீக வழி வீடு என்பதால் இன்னும் மாற்றிக் கட்டப்படாமலே இருந்தது. முன் பக்கம் சமையலறை. உள்ளே பெரிய அறை. அதிலேயே படுக்கை. பின் பக்கமும் ஒரு கதவு, அதன் வழியாக வெளியே பாத்ரூம். வீட்டினுள் இரண்டு இடங்களில் சன்னல் உண்டு.

அகல்யாவின் அம்மா அவனை வரவேற்று சேரை எடுத்துப் போட்டாள்.
“உக்காரு தம்பி”
“ஆனந்து வரலையாக்கா?”
“அடுத்த மாசம் வரேன்றுக்கான்பா. வந்தா ரெண்டு நாளாவது இருக்கணுமில்ல?”
அவர்களுடன் பேசியபடி உட்கார்ந்தான். அவன் மனைவி கேள்விக் கனைகளால் துளைக்க ஆரம்பித்தாள்.
அகல்யா டீயை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.
“யாரு, நீ வெச்ச டீயா?” சிரித்தபடி கேட்டான்.
அவள் அம்மா “அவ வெச்சு யாருப்பா குடிக்கறது?” என்று வெற்றிலைச் சாறு படிந்த வாயுடன் சிரித்தாள். அதிகம் வெற்றிலை போடும் பழக்கம் இருப்பதால் அவள் பற்களில் கரை படிந்திருந்தது.
“ஏன்க்கா.. அகல்யா அவ்வளவு மோசமாவா டீ வெப்பா?”
“அதெல்லாம் இல்ல” என்றாள் அகல்யா “நான் நல்லாதான் வெப்பேன். என்ன எங்கம்மா இன்னும் நல்லா வெக்கும்”
“பழகிக்கோ”
“எங்க பழகறா? எப்ப பாரு அந்த போனுதான்”
“லூசு அம்மா. பேசாம இரு நீ” என்று விட்டு கட்டிலில் டீயுடன் உட்கார்ந்து கால்களை மடித்துக் கொண்டாள். அருகில் பிஸ்கெட் வைத்திருந்தாள். அதை எடுத்து அவனிடம் நீட்டினாள் “எடுத்துக்கோங்க”
ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு “போதும்” என்றான்.
அவன் மனைவிக்கும் கொடுத்தாள் அகல்யா.

பகலவன் மறைந்து இரவணைந்தது. பேசி சலித்து அகல்யாவின் வீட்டில் இருந்து தன் வீட்டுக்குச் சென்றனர். அகல்யாவும் அவர்களுடனே வந்து விட்டாள்.
சிறிது நேரம் பொதுவாகப் பேசியபின் நிருதியிடம் சொன்னாள் அவன் மனைவி.
“ஏங்க, இவ யாரு தெரியுமா?”
“யாரு?” எனக் கேட்டான் நிருதி. அவன் பார்வை இயல்பாக அகல்யாவைத் தொட்டுச் சென்றது.
“அக்க்கா..” எனச் சிணுங்கினாள் அகல்யா.
அகல்யாவைப் பார்த்து “சொல்லுடி. யாரு அவன்?” என்றாள்.
“பிரெண்டுக்கா”
“ஏங்க ஒரு பிரெண்டு இப்படி பண்ணுவானா?”
“எப்படி? ”
“பஸ்ல போனமா. இவ பஸ்ல போறோம்னு போன்ல அவனுக்கு சொல்லிருக்கா போல. அவன் நால்ரோடு பஸ் ஸ்டாப்புக்கு வந்துட்டான். அங்க கொஞ்ச நேரம் பஸ் நிறுத்திதான் எடுப்பாங்க. பஸ்க்குள்ள வந்து இவளுக்கு சாக்லெட்டு அது இதுனு என்னென்னமோ குடுத்தான். உருகி உருகி பேசறான். பஸ்ல அத்தன பேர் இருக்கறத அவன் கண்டுக்கவே இல்ல. அப்றம் பஸ் கிளம்பி அடுத்த ஸ்டாப்ல போய் நிக்கறப்ப அங்கயும் வந்துட்டான். பைக்ல கூடவே வந்து இந்த எலிக்குட்டி மாதிரி எங்க பாத்தாலும் தெரியறான். அவன் பிரெண்டாமா? யாருகிட்ட கதை விடுற?”
“பிரெண்டுதான்க்கா” மிகவும் குழைந்து சிணுங்கினாள் அகல்யா.
“இரு உங்கம்மாகிட்ட சொல்லி கேக்கறேன்”
“கேட்டுக்கோங்க. அவன எங்கம்மாக்கும் தெரியும். வீட்டுக்கு எல்லாம் வந்துருக்கான்”
“பொய் சொல்லாதடி. அப்றம் லவ் பெயிலியர் ஆகிரும்”
“ஐயே.. அக்கா நான் அவனை லவ்வே பண்ல. அப்றம் அது பெயிலியர் ஆனா என்ன?”
“பாக்கறேன். ஒரு நாள் நீயே சொல்லுவ?”
“ஐயோ.. அம்மா சத்தியமா அவனை நான் லவ் பண்லக்கா” என்றாள்.
இரவு உணவுக்கு புரோட்டாவும் சப்பாத்தியும் செய்தாள் அவன் மனைவி. அகல்யாவும் அவள் கூடவே இருந்து உதவினாள். புரோட்டாவும் சிக்கன் குருமாவும் அவளுக்கு மிகவும் பிடித்தது. திருப்தியாகவே சாப்பிட்டாள். எட்டரை மணிக்கு தன் வீட்டுக்குக் கிளம்பினாள். “நான் போறேன்க்கா. அண்ணா பை”
“இந்தாடி உங்கம்மாக்கும் ரெண்டு கொண்டு போய் குடுத்துரு”
“என்னக்கா?”
“புரோட்டா” அவள் கொடுத்ததை மறுக்காமல் வாங்கிப் போனாள் அகல்யா.. !!

பகலுணவு நேரம் என்பது அகல்யாவைப் பொறுத்தவரை இனிய நேரமாகவே மாறியது. கல்லூரி விடுமுறையையும், வீட்டிலேயே இருப்பதையும் இந்த முறை அவள் மிகவும் விரும்பினாள். அவள் காலைப் பொழுதில் கீர்த்தியின் வீட்டுக்கு சென்றால்கூட நிருதி தன் வீட்டுக்கு வரும் நேரத்துக்கு அங்கிருந்து கிளம்பி வந்து விடுவாள். நிருதி மேல் அவளுக்குள் எழுந்திருக்கும் ஈர்ப்பும், அவனிடம் உண்டாகியிருக்கும் நெருக்கமும் அவளால் தவிர்க்க முடியாததாகவே இருந்தது.. !!

1 Comment

  1. oru kadaiyavadu muzhusa podunga pa nalla irukkura ella kadiume appadiye ittudurenga matha website kadaila sex mattumdan irukkum iduladan kadai kamam ellame irukku so parta fulla mudenga please

Comments are closed.