மயக்கம் என்ன 2 113

“ஆமால உனக்கு இங்க இனி எந்த வேலையும் இல்ல..”

“ம்ம். ஆமா..”

அவனின் கிளம்பி செல்ல ஆரம்பிக்கும் போதே அவனை ஏக்கத்துடன் பார்த்தேன். அவனிடம் நேரடியாகவே வாய்விட்டு என்னை வந்து சந்தோஷப்படுத்து என கேட்டுவிடலாம் கூட தோன்றியது.. ஆனால் ஒரு பெண்ணாக இருந்து அதை நேரடியாக கேட்க முடியவில்லை.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சில எட்டுகள் வைத்து நடந்தவன் என்னை பார்த்து திரும்பி நடந்து வந்தான்.. அவன் திரும்பி வருவதைவிட இவன் ஏன் திரும்பி வருகிறான் என்ற கேள்வி தான் மனதிற்குள் வந்தது. என்னை நோக்கி வந்தவன்,

“உங்க ஹஸ்பண்ட் இன்னும் வரலையா?” கேட்க

“ஆமா.. இன்னும் வரல..”

“ம்ம் ஓகே.. வந்துடுவாங்கல..”

“இல்ல..”

“இல்லையா.?”

“ஆமா..”

“ஏன்.. என்ன ஆச்சு?”

“மழைனால காலைல தான் வருவேன் சொல்லீட்டாங்க..”

“ஓ.. ஓகே.. அப்ப தனியாதான இருக்கனும் நீங்க..”

“ஆமா.. தனியா தான் இருக்கனும்..”

“ம்ம் ஓகே..”

அவன் ஓகே சொன்னதும் நீ வந்து துணைக்கு இருக்கிறியா? என வாய்வரை வார்த்தை வந்து நின்றது.. மீண்டும் அவனை பார்த்து,

“கிளம்புறியா?”

“ஆமா.. கிளம்புறேன்.. சாப்பிட்டேன்.. மனசுல இருந்தத கேட்டுட்டேன்.. நீங்க பதிலும் சொல்லிடீங்க.. கிளம்ப வேண்டியதான..”

“ம்ம்.. ஆனா நீ உன் மனசுல இருந்தத கேட்டுட்டா.. என் மனசுல இருக்குறத கேக்கவே இல்லையே..”

“உங்க மனசுலையா..?”

“ஆமா.. என் மனசுல தான்..”