இந்த அணைப்பு.. இந்த தடவல்.. இந்த முத்தம்! 4 88

சுவாதியும், நிருதியும் லிபிகா பேசியதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தனர். சந்துரு மட்டும் கடுப்பாகியிருந்தான்.

சிறிது நேரத்தில் இரண்டு பைக்குகளும் பிரியும் இடம் வந்தது. பைக்கை ஓரமாக நிறுத்தினான் சந்துரு.
“ப்ரீயா நிரு?”
“ஏன் நண்பா?”
“மீட் பண்ணலாம்னுதான்”
“நான் ப்ரீதான்.. ஆனா சிஸ்டர்..”
“அவ கெடக்கா. வீட்ல கொண்டு போய் தள்ளினா வேலை முடிஞ்சுது”
“காலை ஒடைச்சிருவேன். ஜாக்கிரதை” என்றாள் லிபிகா.
“சும்மாருடி. சுவாதியை வீட்ல விட்டுட்டு வரியா நிரு?”
“ஓகே. வரேன்”
“நான் கால் பண்றேன்”
“சரி..”

லிபிகா.. “நான் ஒண்ணு கேக்கவா?” என்று நிருதியைக் கேட்டாள்.
“கேளுங்க சிஸ்டர்”
“சுவாதி கோவிச்சுக்குவாங்களோனு தோணுது?”
“பரவால கேளுங்க”
“லவ் பண்றீங்களா?”
“சே.. என்னங்க நீங்க…”

சுவாதி வெட்கப் படுவதை கவனித்தாள் லிபிகா.
“ஓகே.. புரிஞ்சு போச்சு. சரி.. போங்க”
“ஓகேங்க.. நான் மத்த விபரம்லாம் அப்பறம் சொல்றேன்”
“இன்னொண்ணு”
“என்ன?”
“நீங்க ரெண்டு பேரும் எதுக்கு மீட் பண்ண போறீங்கனு சுவாதிக்கு தெரியுமா?”
“அது தெரியாது. ஆனா… அதனால நோ ப்ராப்ளம்..”
“என்னை மாதிரிதானா?”
“ஐயோ.. ப்யூச்சர்ல எப்படினு தெரியலங்க.”
“சரி.. சரி.. ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துக்கள். அப்பறம்.. உங்க பிரெண்டுக்கு ஒரு சங்கு குடுத்திங்கனா போதும். ரொம்ப போச்சுனா வீட்ல வந்து அவரு பண்ற அலம்பற தாங்க முடியாது” என்று சிரித்தபடி சொன்னாள்.

சந்துரு “விட்டா இவ ரோடுனு கூட பாக்காம நாள் பூரா பேசிட்டே இருப்பா..ஓகே நிரு. பத்து நிமிசத்துல நான் உனக்கு கால் பண்றேன்”
“ஓகே..”

நால்வரும் தலையாட்டி விடைபெற்று இரண்டு வழிகளில் பிரிந்தனர். சற்று நகர்ந்ததும் நிருதியைக் கேட்டாள் சுவாதி.
“இப்ப ரெண்டு பேரும் எங்க போறீங்க?”
“சும்மா… பேச..”
”இல்லையே.. அவங்க சொன்னதை வெச்சு பாத்தா.. சரக்கடிக்க போற மாதிரி இல்ல இருக்கு?”
“ம்ம்.. ஆமா”
“அவங்க இவ்ளோ ஜாலியா பேசறாங்க.. சரக்கடிச்சா விட்றுவாங்களா?”
“நம்மாளு அம்புட்டு நல்லவன்பா.. குடிச்சாலும் சைலண்ட்டா போயிறுவான். சின்ன பிரச்சினை கூட வராது”
“அப்ப நீ..?”

2 Comments

  1. Marvelous next one

  2. Continue this story, you got à Nice flow, very real and organic conversation between Chandhru and Libicca.. keep doing

Comments are closed.