நிறைய பேருக்கு அவர் செய்வது கேலி கூத்தாக இருந்தது.
ஆனால் அவர் பவித்ரா மேல வச்ச அதிகப்படியான பாசம்
அவரை இவ்வளவு தைரியமாக செயல் பட வைத்தது.
முதலில் சதீஷை இகழ்ந்த (மறைமுகமாக ) கம்பனி அதிகாரிகள்,
அவனுடைய திறமையான அணுகுமுறையினாலும்,
நல்லா குணத்தினாலும் அனைவரும் அவனை ஏற்று கொள்ள
ஆரம்பித்தனர்.
சதிஷுடைய முன்னாள் மனைவிதான் பவித்ரா என்று
யாருக்கும் தெரியாது.
அமீர், ரூபா, வசந்தி, சுமித்ரா – இவர்களை தவிர.
சதீசுக்கு ரொம்பவே உறுதுணையாக இருக்கிறது அமீர் மட்டுமே.
கம்பனியின் நுணுக்கங்களை அவனுக்கு ஏற்றாற்போல சொல்லி
கொடுத்து
கம்பனி வளர்ச்சி எக்காரணத்தை கொண்டும் கீழ சரிந்து
விடாமல் பார்த்து கொண்டது அமீர்.
சில மாதங்களில் சதிஷ் அங்கு நல்லா உழைக்க கற்று
கொண்டான்.
கம்பனி வளர்ச்சி அடைய அதுவே அவனக்கு நல்ல ஊக்கமா
அமைந்தது.
தொடரும்
இந்த கதை என்ன ரொம்ப பீல் பண்ண வைக்குது, சூப்பர் ஸ்டோரி, ஒரு நிஜமான சம்பவம் மாறி இருக்கு