வழிமறியவள் – Part 44 29

EPISODE – 56 – சதிஷ் திடீர் பயணம்

அவளை அவரிடம் இருந்து பிரிச்சி அவளை சஞ்சல படுத்த நான் விரும்பல.

அவங்க ஒரு குடும்பமா உருவாகட்டும்.

நான் அவங்க குடும்பத்துல ஒண்ணாகிடுகிறேன்.

ஆண்களுக்கு ரெண்டு மனைவி இருப்பது தவறு இல்லைனு
நினைக்கிற

நாம,

பெண்களுக்கும் ஆசா பாசங்கள் இருக்குனு ஒத்துக்கணும்.

அவ இஷ்ட பட்ட வாழ்க்கையே வாழட்டும்.

அவங்க ரெண்டு பேரும் சம்மதிச்சா, நான் அவங்க கூட
இருந்துகிறேன்.

எனக்கு வேற வழி தெரியல,

சொல்லி சதிஷ் கண்ணீர் விட,

தம்பி, நீ மனசால ரொம்பவே உயர்ந்துட்ட டா.

அவனை அணைச்சி அவன் நெத்தியில் முத்தம் கொடுத்தா
செல்வி.

மறுநாள் பிளைட்டில் சதிஷ் கிளம்பினான்.

அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மன வருத்தம்.

ரெண்டு மாசம் லீவில் வந்திருப்பதாக சொன்ன மகன்

இப்படி உடனே கிளம்பியது பெத்த மனசுக்கு சங்கடமாக இருந்தது.

தம்பியின் நிலைமைக்கு தான் தான் காரணம் என்று உணர
ஆரம்பித்த

செல்வி, தன் மனசாட்சியின் நிமித்தமாக ரொம்பவே ஒடுங்கி
போனா.

உடம்பு நோய் வாய் பட்டது .

இவளின் நிலைமை அறிந்த வெங்கட் ரொம்பவே பயந்து போய்,

வேறு வழி இல்லாம சதீசுக்கு போன் போட்டு விஷயத்தை
சொன்னான்.

தன் ஓய்வு நேரத்தில் சதிஷ் தன் அக்காவுக்கு போன் போட்டு
அவளை தைரிய படுத்தினான்.

புருஷன் ஊருக்கு போய்விட்டதை அறிந்த பவித்ரா உள்ளுக்குள்
ரொம்பவே நொறுங்கி போனா.

என்ன விஷயம் என்று அவளுக்கு தெரியல.

உடனே செல்விக்கு போன் போட, அவள் எடுக்கல.

செல்வி போன் எடுக்காதது, பவித்ராவின் மனசுக்குள் அலாரம் அடித்தது.

அவள் உடனே வெங்கட்டுக்கு போன் செய்ய அவன் உடனே
எடுத்தான்.

2 Comments

  1. Seekiram nalaiki adutha part podunga

  2. Bro story supera ieruku next part yappo varum

Comments are closed.