இதை கேட்ட செல்வி கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்க்க
அழ வேண்டியது நான்தான். நீ ஏன் அழுற
தம்பியின் வார்த்தைகள் அவள் உள்ளத்துக்குள் ஊசியாக குத்த.
அவன் மடியினில் படுத்து குலுங்கி அழ ஆரம்பிச்சா செல்வி.
தம்பி, என்னை மன்னிச்சிருடா,
விளைவுகளை நினைச்சி பார்க்காம துணிஞ்சி இப்படி பண்ணிட்டோம்.
எழுந்து அவனை இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்க
சதீசும் அவளை கட்டி பிடிச்சி அழுதான்.
கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர்.
சதிஷ் தான் பேச்சை ஆரம்பிச்சான்.
அக்கா நான் ஊருக்கு போறேன்.
போறேன்னு சொல்லாதேடா,
வேற என்ன சொல்ல,
எனக்கு கிடைச்ச பொக்கிஷத்தை உன்னிடம் நம்பி தானே
ஒப்படைச்சிட்டு போனேன்.
நீயும் மாமாவும் என்ன சொன்னீங்க,
நீ போயிட்டு வா, பவித்ராவை பத்திரமா பார்த்துகிறோம் னு
ரெண்டு பெரும் சொன்னீங்கல்லே,
அதை நம்பி தானே நான் போனேன்.
இப்படி கொடுத்த பொருளை பாதுகாக்காம அப்படியே
வேறு ஒரு ஆளுக்கு தூக்கி கொடுத்துடீங்க,
எந்த விதத்துல நியாயம்.
தம்பி கேட்கிற எந்த கேள்விக்கும் செல்வியிடம் பதில் இல்லை.
அமைதியாக இருந்தா.
செல்வி, தம்பி, நீ கேட்கிற எந்த கேள்விக்கும் என்னால
பதில் சொல்ல முடியல
அப்படி பெரிய தப்பு பண்ணிருக்கேன்.
நான் பவித்ராவிடம் பேசுறேன்.
எல்லாத்தையும் விட்டுட்டு வரட்டும்.
இதுக்கு எல்லாம் ஒரு முற்று புள்ளி வரட்டும்.
கொஞ்ச நாள் அவளுக்கு கஷ்டமாக இருக்கும்.
ஹசனிடமும் நான் பேசுறேன்.
மறுபடியும் பவித்ராவை உன்னிடம்……………….
அவ சொல்லி முடிக்கல
சதிஷ், வாயை மூடு……………………
தம்பி கத்த. அதிர்ச்சியாயிட்டா செல்வி.
சதிஷ், மேலும் மேலும் தப்பு பண்ணிட்டே போகாதேக்கா.
அவளை ஹசனிடம் இருந்து பிரிச்சிட்டா, அவ இங்கே வந்து
நிம்மதியாக இருப்பாளா,
அவ மனசு எவ்வளவு பாடு படும்.
அவ அவர் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கானு அன்னைக்கு நான் கண் கூடாக
பார்த்தேன்.
நீங்க பண்ண அந்த பாவத்தை, என்னை பண்ண வைக்காதேக்கா.
பவித்ரா அவர் கூடயே வாழட்டும்.
நான் ஊருக்கு கோச்சிட்டு போகல.
போயிட்டு ஒரு மூணு மாசத்துல வேலையை விட்டுட்டு வர போறேன்.
அம்மாகிட்ட சொல்லிட்டேன்.
அம்மாவும் அப்பாவும் சரினு சொல்லிட்டாங்க.
வந்து இங்கேயே ஒரு வேலை பார்த்துக்க போறேன்.
நான் பவித்ராவை ரொம்ப நேசிக்கிறேன்க்கா
அந்த பாசத்தை நான் வெளிப்படையாக காட்ட வேண்டிய நேரம்
Bro next part yappo varum