வழிமறியவள் – Part 35 48

EPISODE – புது தோழி சுமித்ரா

ஆஸ்ரமத்தில் இருந்து வந்த மறுநாள் காலை

முதல் வேலையாக பவித்ரா ஹசனுக்கு போன் செய்து

தான் நேற்று இரவு ஆஸ்ரமத்தில் இருந்து வந்து

விட்டதாகவும் தங்களை காண வேண்டும் என்று

அழ, ஹசன் சிரித்து கொண்டே அன்று மாலை

வர சொன்னார்.

பவித்ராவுக்கோ ரொம்ப சந்தோசம்.

பின்பு தன்னுடைய நெருங்கிய தோழி ரூபாவிற்கு போன் போட

அவள் பவித்ராவின் குரலை கேட்டவுடன் சந்தோசம் தாங்க முடியல

ரூபா, ஏய் பவித்ரா, எப்படிடி இருக்கிற

பவி, நல்ல இருக்கேண்டி. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க

ரூபா, நீ இல்லாம ரொம்பவே போர் டி.

நீ எப்ப வேலைக்கு வர போற

பவி, இன்னும் அதை பத்தி ஒன்னும் முடிவு எடுக்கல ரூபா

சரி, வசந்தி எப்படி இருக்கிறா,

ரூபா, இரு போனை அவ கிட்ட தரேன்.

அப்படியே போன் வசந்திக்கு கொடுக்க பட அவளுக்கும் ரொம்ப சந்தோசம்.

வசந்தி, என்னடி, எங்களை மறந்திட்டியா,

பவி, லூசு மாதிரி பேசாதேடி, உங்களை மறக்கிறதா,

வசந்தி, பின்ன ஏண்டி ஒரு போன் கூட பண்ணல

பவி, என் சூழ் நிலை அப்படி,

நான் நேர்ல பார்க்கும் போது எல்லாத்தையும் விவரமாக சொல்றேன்.

நீ போனை ரூபா கிட்ட கொடுடி

போன் ரூபாகிட்ட மாற,

பவி, ஏண்டி ரூபா, இப்போ மீட் பண்ணலாமா

ரூபா, நாங்க ஆபிசில் இருக்கோம் டி,

இப்ப வர முடியாது.

இப்பொது பெர்மிசன் கிடைக்காது,

மாலை வேளையில் பார்க்கலாமா என்று ரூபா கேட்க

என்னது, பெர்மிசன் கிடைக்காதா, பவித்ரா கேட்க

ஆமாண்டி, எனக்கு பர்மிசன் கேட்க பயமா இருக்குது னு ரூபா சொல்ல

அதற்கு பவித்ரா தான் லீவே வாங்கி தருவதாக சொன்னாள்

உடனே ரூபா,

பவித்ரா கேட்கும் போது, மூன்று பேருக்கும் சேர்த்து லீவு கேளுடினு கேட்க

பவித்ரா, எனக்கு எதுக்கு டி லீவ் கேட்கணும்.

நான் வீட்டுல தானே இருக்கேன்.

ரூபா, ஐயோ, உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.

நம்ம கேங்குல ஒரு புது வரவு.

பவி, என்னடி சொல்ற, தெளிவா சொல்லு.

ரூபா, புதுசா ஒரு பெண் வேலைக்கு சேர்ந்து இருக்காங்கடி.
பேர் சுமித்ரா.

பவி, அப்படியா, எப்படி நம்ம கூட சேர்த்துக்கிட்டிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *