டீச்சரம்மா.. Part 4 58

விடிந்தும் விடியாத அந்த காலை வேலையில் “பூவு.. பூவு..” என்று ஒரு பாட்டியின் குரல் கேட்க, வெளியே சென்று அந்த பாட்டியிடம் ஒரு முழம் மல்லிகைப் பூ வாங்கி தலையில் வைத்துக்கொண்டேன்.

பின்னர் வீட்டுக்குள் சென்றவள், நாங்கள் கொஞ்சி விளையாட கட்டிலை தயார் செய்துகொண்டிருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது.

நான் மிகுந்த ஆவலோடு ஓடிச்சென்று கதவைத் திறந்தேன். “என் கணவர் வந்துவிட்டார். எத்தனை நாட்கள் கழித்து அவரைப் பார்க்கிறேன்..” என்று நினைத்து எனக்கு உடல் புல்லரித்துப் போனது.

அவரும் காலையிலேயே என்னை புடவை, மல்லிகைப் பூவுடன் பார்த்தும் அசந்துபோனார். வீட்டுக்குள் வந்தவர், என்னை இடுப்போடு இறுக்கிப்பிடித்து, தூக்கி நடு ஹாலிலேயே ராட்டினம் சுற்ற ஆரம்பித்தார்.

பின் என்னை இறக்கிவிட, நான் அவர் மார்பின் மீது சாய்ந்துகொண்டேன். “இதுக்காக நான் எத்தனை நாள் காத்திருந்தேன் தெரியுமா?” என்று அவர் மார்பில் சாய்ந்த படி சொன்னேன்.

“நானும்தான்டி பொண்டாட்டி..” என்றவரின் உதடுகளை நான் கவ்வப் போக, என்னைத் தடுத்தார் என் கணவர்.

நான் அவரை ஏன் என்பதுபோல பார்க்க, “ஏய் ராத்திரி முழுசா ரயில்ல வந்திருக்கேன். இன்னும் பல் கூட விலக்கலை. கொஞ்சம் பொறுடி.. பிரஸ் ஆகிட்டு வந்திடுறேன்..” என்று சொல்ல, “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்ற நான், அவர் உதட்டைக் கவ்விக்கொண்டேன்.

ஏதோ சுத்தம் அது இது என்று வீராப்பாக பேசிய என் கணவர், என் உதடுகள் பட்டதும் பதிலுக்கு அவரும் என் உதடுகளை கவ்விக்கொண்டார். இருவரும் மூச்சு முட்டும் அளவுக்கு உதட்டு முத்தம் இட்டுக்கொண்டோம்.

பின்னர் அவர் குளித்து வருவதாக சொல்லி பாத்ரூமிற்கு செல்ல, நான் வாசலில் கிடந்த பால் பாக்கெட்டை எடுத்து காப்பி போட ஆரம்பித்தேன்.

அவர் குளித்து வருவதற்குள் காப்பி போட்டு முடித்து, இரு தம்ளர்களில் ஊற்றி ஹாலில் காத்திருக்க, இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு அவரும் ஹாலுக்கு வந்தார்.

நான் அவரிடம் காப்பி தம்ளரை நீட்ட “என் பொண்டாட்டி கையால காப்பி குடிச்சு எத்தனை நாள் ஆச்சு..” என்றவர் என் காப்பியை ரசித்து குடித்து முடித்தார்.

நான் அவரிடம் “காப்பி எப்படி இருக்கு?” என்க, “சூப்பர்டி.. செம சூடா.. டேஸ்ட்டா இருந்துச்சு..” என்றார்.

“ஓஓஓஓ.. அப்படியா? காப்பிய விட இன்னொன்னு ரொம்ப சூடா இருக்கு! காட்டட்டுமா?” என்றேன்.

“அதப்பாக்கத்தான்டி வந்திருக்கேன்..” என்றவர் என்னை அப்படியே புல்லுக்கட்டு போல தூக்கிக்கொண்டார். பெட்ரூம் அங்கயிருக்கு என்று நான் கைகாட்ட, “எல்லாம் கவனிச்சுட்டுதான்டி வந்தேன்..” என்று சொன்னவர் என்னை பெட்ரூமுக்கு தூக்கிச் சென்று கட்டிலில் போட்டார்.

என் அருகே வந்தவர், என் வயிற்றுப் பகுதியில் சேலையை விலக்கி, அங்கே ஒரு முத்தம் இட, எனக்கு முந்தைய நாள் சரண் அங்கே முத்தமிட்டது ஞாபகத்திற்கு வந்தது. உடனே அலைபாயும் என் கவனத்தை திசை திருப்ப, “ஏங்க, இத்தனை நாள் நான் இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க? அதனால அவசரம் வேண்டாம். ரெண்டு நாள் முழுசா இருக்கு. உங்க ஆசை தீர பொறுமையா பண்ணுங்க. நீங்க என்ன சொன்னாலும் செய்ய நான் தயாரா இருக்கேன்..” என்று சொல்லி, என் வயிற்றில் முத்தமித்த கணவரை இழுத்து, என் உதட்டோடு அவர் உதட்டை பொருத்திக்கொண்டேன்.

உடனே “ரெண்டு நாளெல்லாம் கிடையாது அம்மு. இன்னைக்கு நைட் நான் கிளம்பியாகனும்..” என்றார் என் கணவர்.

அவர் இப்படி சொன்னது எனக்கு ஏமாற்றமாக இருக்க, “ரெண்டு நாள் லீவு இருக்குன்னு சொன்னீங்களே..” என்றேன்.

“ஆரம்பத்துல லீவு கேட்டு வாங்கிட்டேன். ஆனா எனக்கு பதிலா டூட்டி பாக்குற ஒருத்தர் மனைவிக்கு நேத்து திடீர்ன்னு பிரசவ வலி வந்திருச்சு. அதனால அவரு அவசரமா லீவு போட்டுட்டாரு. அவரு போனதால எனக்கு ஒரு நாள்தான் லீவு கிடைச்சது..” என்றார்.

நான் அவர் முதுகில் கை வைத்து உடலோடு சேர்த்து அணைத்தபடி “அவரு பொண்டாட்டி மாதிரி நானும் பிரசவத்துக்கு போக வேண்டாமா?” என்றேன்.

1 Comment

  1. Raji vantha mail pannu ma

Comments are closed.