அசோக் நல்ல படிப்பாளி மற்றும் திறமைசாலியே அவனுக்கு நிறைய கனவுகள் உண்டு மனதளவில் அவன் மிகவும் பக்குவ பட்டவனும் கூட தன்னுடைய படிப்பை முடித்தும் தொழில் துவங்க பணத்திற்காக தன் பொற்றோரின் நிலத்தை விற்க்கும் படி மாமா மாயாண்டியிடம் கூற இடைமறித்த அத்தை அகிலம் நிலத்தையெல்லாம் வித்துட்டு முறையான தொழில் அறிவில்லாம பணத்தை இழந்து நஷ்டபடவேணாம் அதனால எங்கையாச்சும் வேலைக்கு போ நாலு ஆட்கள பழகிக்க நாட்டுநடப்ப புரிஞ்சிக்கோ அப்பறம் நிலத்த பத்தி பேசலாம் அது மட்டுமில்ல உனக்கு ஒரு கால் கட்டு போட்டதும் தான் நிலத்தை உன்கிட்ட ஒப்படைக்கிறதுன்னு நானும் உன்னோட மாமாவும் முடிவு பண்ணிட்டோம் அதுப்படி நடக்க பாரு என்று சொல்லிவிட்டு விருட்டென சமயலறைக்குள் புகுந்து கொண்டாள் அவன் அத்தை.
அசோக் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை அதனால் தன் மனதின் ஆசைகளை மூட்டை கட்டிவிட்டு இப்பொழுது வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான் அதிலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தினால் அகிலம் அது அவன் திருமணம் உடனே நடக்க னும் அவனுக்கு இதுதான் கால்யாணம் நடக்க வேண்டிய வயசு ஜோசியர் சொன்னதா சொல்லி ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணும்னு ஒரு குண்ட தூக்கி சாதரனமா அசோக் தலைல போட்டா அகிலம் ..
அதோட விடாம அசோக்கோட மாமாவயும் பொண்ணு தேட வச்சுட்டா என்ன காரணமோ பொண்ணு அமையல கடைசியா அஅகிலம் அவ புருசன் கிட்ட ஏங்க கைல வெண்ணைய வச்சுகிட்டு ஏன் நெய் அலையனும் நம்ம பொண்ணு ஆர்த்தியையே அவனுக்கு கட்டிவச்சுட்டா என்ன அவளும் அவனதான சுத்தி சுத்தி வறா உங்களுக்குக்கும் நம்ம உறவு விட்டுபோகூடாதுன்னு ஆச தான அதனால அவன நம்ம மருமகனாக்கிடலாம்னு முடிவா சொல்லிவிட அவருக்கு ம் அது சரி என்றே தோன்றியது .
இது தொடர்பாக அசோக்கிடம் சொல்ல அவனோ இதை தீவிரமாக மறுத்தான்.
என்ன அத்த நீங்க ஆர்த்திய நான் என்னோட தங்கச்சி போல தான் நினைக்கிறேன்.
அவள எப்டிநான் கட்டிகிறது பிளிஸ் அத்த நான் சொல்றத கேளுங்கனு கெஞ்ச ஆரம்பிச்சான் ஆனா அகிலமோ என்னமோ நீ சின்ன வயசுல அனாதையா நிராதரவா இருந்தப்ப உன்ன கூட்டிவந்து வளர்த்து படிக்க வச்ச உன்னோட மாமாவோட ஆசை இந்த கல்யாணம் இத கூட நிறைவேத்த உன்க்கு பிடிக்கல.
அதுதான் வளந்து ஆளாயிட்ட இனிமே எங்க அந்த மாமன் பேச்ச மதிக்கபோற என்று தன் சாணக்கிய தனமான பாசமெனும் அம்பெய்து அசோக்கை சம்மதிக்க வைத்து பின்பு வந்த முதல் முகுர்த்தத்தில் திருமணமும் முடிந்தது .
ஆர்த்தியோ மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தால் ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்குமா ..
முதலிரவு அறையில் அசோக்
முதலிரவு அறை வாசலில் ஆர்த்தி கையில் பால் சொம்புடன்
