ஒருவன் 2 298

காலையில் கண்விழித்த அகிலன் படுக்கையில் தான் மட்டும் படுத்திருப்பதை உணர்ந்து சோம்பல் முறித்தவாறு படுக்கையிலிருந்து எழுந்தவன் பாத்ரூமினுள் நுழைந்து காலை கடன்களை முடித்தவன் குளித்துவிட்டு இடுப்பில் துண்டுடன் வெளியில் வந்தவன் மேசையில் காபி கோப்பையை கண்டவன் இவ எப்போ வந்தா கலையில இருந்து கண்ணுலயே சிக்கல சரி கிளம்பி கீழே போகலாமேன உடைகளை அணிந்து கொண்டு காபி கோப்பையை கையில் எடுத்தவன் அதை குடித்தவாறு படியில் இறங்கி கீழே ஹாலுக்கு சென்றான். அங்கு ஹாலில் போடபட்டிருந்த சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்திருந்த சுந்தரத்தை கண்டவன் குட் மாரணிங் மாமா என்க.

பேப்பரில் இருந்து பார்வை விலக்கிய சுந்தரம் அகிலனை பார்த்து வெரி குட் மார்னிங் மாப்ள வாங்க வாங்க உக்காருங்க. என்ன மாப்ள காபி சாப்பிடறிங்களா என்றவர் வேலையாளை அழைக்க பார்க்க .

இப்பதான் சாப்டேன் மாமா. ஆமா மாமா கீர்த்தனா எங்க மாமா அவள ஆளையே காணோம் நான் எழந்துகிறது முன்னமே எழுந்துட்டா போல .

அவ எப்பவும் காலைலேயே எழுந்துக்குவா இப்போ தோட்டத்துல தான் இருக்கா. ஒரு விஷயம் மாப்ள கீர்த்தனா மேரேஜ்க்கு முன்ன ஒரு கண்டிஷன் போட்டா இங்கயே இந்த காம்பௌன்ட் குள்ளயே தனியா தனியா ஒரு வீடு வேணும்ணு ஏன்னு கேட்டதுக்கு எங்களுக்கு பிரைவசி வேணும்னு சொல்லிட்டா அதனால அந்த வீடு கட்ட ஆம்பிச்சு முடியிற ஸடேஜ்ல இருக்கு .

அத அவ ரசனைக்கு ஏத்த மாதிரி செஞ்சிட்டு வரா அதயும் எப்பவும் காலையில எழுந்ததும் ஒரு தரம் பார்த்துட்டு வருவா மாப்ள நீங்களும் வாங்களேன் போய் பார்த்துட்டு வருவோம் என்படி சோபவில் இருந்து எழுந்தார் சுந்தரம்.

அவருடன் எழுந்தவன் மாமா தனி வீடா இத பத்தி நீங்க சொல்லவே இல்ல.

அதுவா மாப்ள அது சஸ்பேன்சாம் கல்யாணத்துக்கு முன்ன உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கி கிட்டா என்றார் சிரித்தவாறு.

அகிலனுக்கு இதில் ஏதோ ஒன்று உறுத்தியது அது என்னவென்று தான் அவனுக்கு புரிய வில்லை.

மாமா நானும் கீர்த்தனாவும் அம்மாவோட கிளம்பி ஒரு ரெண்டு நாள் ஊருல இருந்துட்டு வரலாம்னு இருக்கேன். என்ன மாமா சொல்றிங்க போயிட்டு வரவா அங்க இருந்து நிறைய பேர் எங்க கல்யாணத்துக்கும் வரல அதனால என இழுத்தான்.

அதுல என்ன இருக்கு கண்டிப்பா போயிட்டு வாங்க என்றறார் அவர்

சரி மாமா வாங்க வீட்ட பார்த்துட்டு வருவோம் என்றான் அகிலன்.

சுந்தரத்துடன் புதிய வீட்டின் கடடுமானத்தினை பார்க்க சென்ற அகிலன்.

அங்கே கீர்த்தனாவினை கண்டான் அவளோ அங்குள்ள முடியும் தருவாயில் இருந்த கட்டிடத்தின் தொழிலாளிகடிடம் செய்ய வேண்டிய சில மாறுதல்கள் குறித்து சொல்லி கொண்டிருந்தாள்.

கட்டிட தொழிலாளிகளுக்கு அங்கு தங்கி வேலை செய்யும் அளவிற்க்கு சில வசதிகளை செய்து கொடுத்திருந்தார் சுந்நரம்.

அவர் தொழிலாளிகளையும் அவர்களின் உழைப்பையும் மதிக்க தெரிந்தவர்.

அதனால் தான் இன்று மிக பெரிய இடத்தில் இருக்கிறார்.

அகிலன் கட்டிடத்தின் உள்ளே சென்று அனைத்தையும் நிதானமாக சுற்றி பார்த்தான் அனைத்து வேலைகளும் கிட்ட நிறைவடைந்தே இருந்தது சில அலங்கார வேலைகளை தவிர.

ஓ மேடம் டேகரேஷன் பத்திதான் பேசிட்டு இருக்காங்க போல என நினைத்தவன் சுந்தரத்திடம் சென்று மாமா வீடு அருமையா இருக்கு ஆனா இவ்ளோ பெரிய வீடு ஏனென்று கேட்க. அதெல்லாம் ஒன்னுமில்ல உங்களுக்கு வீடு பிடிச்சிருக்கா அது மட்டும்தான் எனக்கு வேணும் சொல்லுங்க மாப்ள என்றார் அகிலனை பார்த்து சிரித்தவாறு.

பிடிச்சிருக்கு மாமா என்றான் அகிலன் மேலும் மாமா கீர்த்தனா எதோ வேலையா இருக்கா போல என்று அவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்க்கு சென்றான்.

அதன் பிறகு கீர்த்தனாவை தனியே சந்திக்கு வாய்ப்பு கிடைக்கமலே போனது . போனதா இல்லை கீர்த்தனா இவனை சந்திப்பதை தவிர்தாளா என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்.