“பாவங்க ரெண்டு பேருமே அனாதை புள்ளைங்க, பக்கத்துல இருக்க ஹோம்ல தங்கி படிக்குதுங்க”
“சரி பிரபா, நீ ஒழுங்கா ஆன உடனே அந்த ஹோம்கு போய் நம்மளால முடிஞ்சது டொனேட் பண்ணிட்டு வந்துடலாம்”
“அதை தான் நானும் சொல்லணும்னு வந்தேன், நீங்க முந்திக்கிடீங்க”
“இவ்ளோ வருசமா கூட இருக்கேன், இது கூட தெரியாதா என்ன”
இரண்டு நாட்கள் களித்து பிரபாவுடன் சென்று ஐந்து இலக்க தொகையை நன்கொடையாக கொடுத்தான்.
“ரொம்ப தேங்க்ஸ் சார், எங்க காப்பகத்துக்கு வந்த பெரிய அமௌன்ட் இது தான். நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க”
“White Hat Hacker”
“அப்படின்னா”
“பெரிய பெரிய சொப்ட்வ்ர் கம்பெனியோட ப்ரோக்ராம்ல இருக்க தப்பை கண்டுபிடிச்சு அதை அவங்களுக்கே சொல்லுவேன். அவங்க கண்டுபிடிச்ச பக் ஏத்தா மாதிரி பணம் தருவாங்க”
“இதெல்லாம் வேற தர்ராங்களா”
“ஆமா, இப்போ எல்லாமே சாப்டவேர்ல தானே இருக்கு. இதுவே பேங்க் அக்கவுண்ட் சாப்டவேர்ல பிரச்சனை இருந்தா எல்லா பணமும் போய்டமே அதனாலே அவங்களே பக் பவுண்டினு பக் கண்டுபிடிச்ச காசு கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க”
அவர்கள் பேசிட்டிவிட்டு வெளியே வந்தபோது எதிரே ஸ்கூல் யூனிபார்மில் வந்த இன்னொரு பெண்ணை பார்த்து பிரபா நின்றாள்.
“ஏய் என்னாச்சு டல்லா வரே. அமிர்தா காலஜ் படிக்குறேன்னு சினிமா சான்ஸ் தேடி போய்ட்டா”
“நீ +2 நல்ல படிக்கணும் என்ன”
“ஹ்ம்ம்” என்று சொல்லிவிட்டு அனு நடக்க தொடங்கினாள்.
“இவ தான் அனு, என்னை பார்த்துகிட்டே இன்னொரு பொண்ணு. அமிர்தாவும் இவளும் ஒண்ணா இந்த ஹோம்ல தான் வளர்த்தாங்க. துள்ளி குதிச்சிட்டு இருந்தா அவ போன உடனே ஆளே டல்லயிட்டா”
“அனு உனக்கு போர் அடிச்சா எங்க வீட்டுக்கு வா, பிரபாவுக்கு நான் இல்லாத டைம்ல போர் அடிக்கும்” தூர சென்றவளிடம் ஆனந்த் கத்தி சொல்லினான்.
“சரி அங்கிள்”
மூன்று வாரம் கழித்து, பிரபா குழந்தையை பெற்று எடுத்தாள். அனு அவர்கள் வீட்டில் அதிக நேரம் கழித்தாள். +2 தேர்வு முடிவடைந்தவுடன் கேரளாவில் நர்சிங் படிக்க சென்றவள் போன 1 வருடம் களித்து விடுப்பில் வந்தபோது கூட இவர்களை எல்லாம் வந்து பார்த்துவிட்டு அமிர்தாவுக்கு கூடிய சீக்கிரமே ஒரு படவாய்ப்பு அமைய போவதாக சொன்னாள். அதற்க்கு பிறகு அவர்கள் அனுவை பார்க்கவில்லை.
ஆனந்த் எவ்ளவோ மறுத்தும் பிரபா அவனை வற்புறுத்தி ஒரு கார் வாங்க வைத்தாள். புது கார் வாங்கியதை முன்னிட்டு அவர்கள் ஊட்டி போகலாம் என்று முடிவெடுத்து போகும்போது தான் அந்த துரதிர்ஷ்ட சம்பவம் நடந்தது. எதிரே வேகமாக வந்த கார் இவர்களின் காரை இடித்து தள்ளியதில் இவர்களின் கார் பள்ளத்தாக்கில் தூக்கி வீசப்பட்டு ஒரு பெரிய மரத்தில் மாட்டிக்கொண்டு நின்றது.
“பிரபா பிரபா சீட் பெல்ட் சீக்கிரம் கழட்டு கார் கீழே போகுது” மயக்கத்தில் இருந்தவளை எழுப்பிய ஆனந்த் அழுது கொண்டு இருந்தான்.
“என்னாச்சி….”
“ஆக்சிடன்ட்.. நீ மயக்கம் ஆகிட்டே”
“சீட் பெல்ட்டை கழட்டி வா இந்த மரக்கிளை வழியா பக்கத்து மரத்துக்கு போய்டலாம்”
சீட் பெல்ட் கழட்டி அவளை பாதுகாப்பாக கூட்டி கொண்டு பக்கத்து மற கிளைக்கு சென்றவுடன் தான் “என்னங்க குழந்தை” பிரபா கதறினாள்.
“நம்ம மேல அந்த கார் இடிச்ச உடனே நீ மயங்கிட்ட பிரபா, உன் கையில் இருந்தவன் அப்போவே கீழே விழுந்துட்டான்.
“ஆஆ” என்று ஓலமிட்டாள். தொப் என்ற சத்தத்துடன் சில ஆயிரம் அடி உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.
அங்கிருந்தவர்கள் சத்தம் கேட்டு பார்க்க போலீஸ் வரவழைக்கப்பட்டு இவர்கள் இருவரும் கயிறு மூலமாக மீட்கபட்டனர். மூன்று நாட்களுக்கு அடர்ந்த காடு என்பதால் குழந்தையை மீட்கும் பனி கைவிடப்பட்டது.
இவன் எவ்வ்ளவு சொல்லியும் போலீஸ் தரப்பில் இது வெறும் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எதிரே வேற எந்த காரும் வந்து இடிக்கவில்லை என்று கேஸ் மூடப்பட்டது. ஆனந்த மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று திரும்பி வரும் போது அங்கிருந்த ஒரு கடையின் வெளிப்புறத்தில் CCTV கமெரா ஒன்று இருந்ததை பார்த்தான். அவர்களிடம் சென்று சம்பவம் நடந்த அன்று இருந்த ரெக்கோர்டிங்கில் அந்த பாரின் கார் தாறுமாறாக ஓடிவரும் காணொளியை எடுத்துக்கொண்டு டிஜிபிடம் சென்றான்.
“நான் எவளோ சொல்லியும் நம்பளை சார் நீங்க. ஆக்சிசன்ட் நடந்த நாள் 2 நிமிசத்துக்கு முன்னாடி நான் சொன்ன அதே அடையாளம் உள்ளே கார் எப்படி தறிகெட்ட போகுதுன்னு”
“இந்த பூட்டேஜ் மட்டும் வச்சி எல்லாம் அது ஆக்சிடெண்ட்னு ப்ரோவ் பண்ண முடியாது Mr .ஆனந்த்”
“கரெக்ட் நான் சொன்னது உண்மைன்னு ப்ரூவ் ஆகுதுல்ல. இது யாரோட கார் என்னன்னு விசாரிச்சு பார்த்தா ஏதாச்சும் கிளு கிடைக்கலாம்ல”
“ஆனந்த் இதுல எல்லாம் நேரத்தை வீணாக்கி லைப்பை வேஸ்ட் பண்ணாதீங்க. உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வயசு ஆகலை இந்த மாதிரி ராபிட் ஹோல்லா எல்லாம் வெஸ்ட் பண்ணாம அடுத்தது ரெடி பண்ணீங்க அப்படின்னா எல்லாம் மறந்து போய்டும் என்ன நான் சொல்லுறது”
ஆனந்திற்கு அவரை அடிக்க வேண்டும் என்பது போல தோன்றியது, இருந்தாலும் இடம் ஏவல் அறிந்து பொறுமையாக சென்றான்.
ஆனந்த் அந்த கார் இம்போர்ட்டட் கார் என்பதால் தமிழகத்தில் எத்தனை கார் இருக்கிறது என்பதை ரொம்ப சுலபமாக கண்டுபிடித்த அவனுக்கு அந்த கார் த்ரியாவின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ய பட்டதை கண்டுபிடிக்க ரொம்ப நாள் ஆகவில்லை. ஆருஷ் த்ரியா சோசியல் மீடியாவில் சம்பவம் நடந்த நாட்கள் அதற்கு முன்பு போட்ட பதிவுகள் எல்லாம் வைத்து பார்த்ததில் அவர்கள் இருவரும் ஊட்டியில் இருந்தது தெரியவந்தது. போலீஸ் ஏன் கேஸை மாற்றி எழுதியது எல்லாம் அவனுக்கு நன்றாக இப்போது விளங்கியது.
இதை எல்லாம் அவன் மனைவியிடம் சொல்ல சென்றபோது தான் அவள் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதை பார்த்தான். அவன் மனைவி ஆக்சிடென்ட் குழந்தை இழந்த சோகத்தில் நடைப்பிணம் ஆனவள் கொஞ்சம் நாட்களில் பிணமாகவே ஆகிவிட்டாள். ட்ராமாலா இருந்த ஸ்ட்ரெஸ் அவங்களால தாங்க முடியாம ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க என்று டாக்டர்கள் ஏதோ சொன்னார்கள், ஆனந்த் தனித்து விடப்பட்டான். அப்போது தான் அனு அவனை பார்க்க வந்தாள், அவனுக்கு சமாதானம் கூறினாள்.
“அமிர்தா எங்கே அணு”
அணு ஓவென்று அழ தொடங்கி ஆருஷ் எப்படி அவளை ஏமாற்றினான் என்பதை எல்லாம் சொல்லி காட்டினாள்.
“என்ன சொல்லுற ஆருசா”
“ஆமா எனக்கு வாரத்துக்கு ஒரு தடவையாச்சும் போன் பண்ணி பேசிடுவா. பாலரத்னம் படம் ஓகே ஆயிடிச்சினு சந்தோசமா சொல்லிட்டு அடுத்து பாண்டி போறதயும் சொன்னா. அதுக்கு அப்புறம் போன் பண்ணல. விசாரிச்சப்போ தான் அவ சூசைட் பண்ணிக்கிட்டது தெரிய வந்திச்சு. த்ரியா படத்துல ஆருஷ் ஹீரோவா ஆனதுக்கு அப்புறம் ஆருஷ்கும் த்ரியாவுக்கும் அமிர்தா சூசைட் பண்ணிக்க காரணம்னு தோணுச்சு”