என் காதலி Part 7 34

ஆனா ஒரு ரெண்டு வாரம் கழிச்சு காய்ச்சல்ன்னு ஆஸ்பத்திரிக்கு போனேன் .அங்க என் பிரண்டு மூர்த்திதான் டாக்டர் .அவ கிட்ட பேசிக்கிட்டே இருக்கும் போது சொன்னான் எங்க அம்மாவுக்கு ஒன்னும் இல்ல .அவங்க நான் கல்யாணம் பண்ணனும்கிறதுக்கு காக பொய் சொல்லிருக்கங்கன்னு . எனக்கு வந்துச்சு பாரு கோபம் . வீட்டுக்கு போனேன் பிடிச்சு எல்லாத்தையும் திட்டுனேன் .

அப்புறம் இனிமேல் நான் அந்த வீட்ல இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு வெளியேறிட்டேன் .ஆனா அப்பயும் சென்னைலயே இருந்ததால எங்க அம்மா என் பிரண்ட்ஸ் தூது அனுப்பி என்னையே வீட்டுக்கு வர சொல்லிகிட்டே இருந்தாங்க .ரெண்டு மூனு தடவ எங்க அம்மாவே வந்து பாத்து அழுதாங்க வீட்டுக்கு வர சொல்லி நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன் .

அதுக்கு அப்புறம் தமிழ் நாட்டுல இருந்தாதானே இந்த தொல்லைன்னு முடிவு பண்ணி என் பிரண்டு ஒருத்தன் மூலமா மும்பை வந்துட்டேன் , இன்னைக்கு வரைக்கும் நான் யார் கூடயும் எங்க வீட்ல இருக்கவங்க கூட பேசுறது இல்ல அதே நேரத்துல எப்பவும் லவ்வும் பண்ண கூடாது கல்யாணமும் பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணேன் .என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான் .

சுவாதியும் எதுவும் சொல்லமால் இருந்தாள் .ம்ம் என்ன என் பிளாஸ்பேக் புடிக்கலையா என்றான் . அப்படி இல்லடா இது வரைக்கும் உன்னையே ஒரு பொம்பள பொறுக்கின்னுதான் நினைச்சு கிட்டு இருந்தேன் . ஆனா இப்ப உன் கதைய கேட்டதுக்கு அப்புறம்தான் உன் சோகம் புரியுது நீ எடுத்த முடிவு நல்ல முடிவு உன் இடத்துல நான் இருந்தாலும் இத தான் செஞ்சு இருப்பேன் என்றாள் .

அதை கேட்டு விக்கி ஆச்சரியப் பட்டு கொண்டே யே சும்மா ஐஸ் வைக்காத அதான் உன்னையே என் வீட்ல இருக்க அனுமதி கொடுத்துட்டேன்லே அப்புறம் என்ன என்றான் .

எ ஐஸ் வைக்கலடா உண்மைய தான் சொன்னேன் என்றாள் ,போடி இதுக்கு முன்னாடி என் கதைய சில பொண்ணுக கிட்ட சொன்னப்ப அவளுக எல்லாம் ஒரு ரெண்டு பொண்ணு ஏமாத்திட்டான்னு நீ கல்யாணமே வேணாம்னு சொல்ல கூடாது .உனக்குன்னு ஒருத்தி வேணும் .நீ வாழற வாழ்க்கை தப்பான வாழ்கை அப்படின்னு சொல்லி திட்டி இருக்கலாக என்றான் .

அதலாம் அவளுக லூசுக சும்மா சொல்றளுக என்னையே பொறுத்த வரைக்கும் அன்னைக்கு நீ சொன்ன பாரு லவ் எல்லாம் பொய்ன்னு .அதான் கரெக்ட் என்றாள் .

என்ன திடிருன்னு உனக்கு இப்படி ஒரு மாற்றம் உன் பழைய லவ் பெயிலியர் ஆனதலையா என கேட்டான் .அதுவும் ஒரு காரணம் .அதே நேரத்துல லவ்கிறது நீ சொல்ற மாதிரி ஒரு கானல் நீர் அது வேஸ்ட்ன்னு புரிஞ்சு கிட்டேன் .

லவ் கல்யாணம் அப்புறம் டிவோர்ஸ் எல்லாம் இப்ப நினச்ச்லே சுத்தமா பிடிக்கல என்றாள் .அப்ப குழந்தை மட்டும் பிடிக்குமா என்றான் சிரித்து கொண்டே .டேய் அது என்னோட பொருள் என்னோட ரத்தம்டா என்று சொல்லிக்கொண்டு விக்கியை செல்லமாக அடித்தாள் .

அவனும் வலிப்பது போல நடித்தான் . பின் இருவரும் சிரித்தனர் .நன்கு சிரித்து விட்டு விக்கி சொன்னான் சரி இனி உன்னையே பத்தி கொஞ்சம் சொல்லு தெரிஞ்சுகிறேன் என்றான் .

அவள் சிரிப்பதை நிறுத்தி விட்டு அமைதி ஆனாள் .அப்புறம் சொன்னாள் என் லைப்ல சொல்றதுக்குன்னு ஒன்னும் இல்ல என்றாள் .எ சும்மா சொல்லு நான்லாம் சொன்னேன்லே அதுனால நீயும் சொல்லு என்றான் .பின் பார்க்கில் மழை வந்தது சுவாதி சொன்னாள் பாத்தியா என் லைப் பத்தி பேசுறது அந்த வானத்துக்கு கூட பிடிக்கல என்றாள் .

பின் இருவரும் நனைந்து கொண்டே ஒதுங்க இடம் தேடினார் .விக்கி சொன்னான் எ கார் ஆச்சும் கொண்டு வந்து இருக்கலாம் மழை இப்படி பெய்யுதே என்ன பண்ண என்றான் .

ஹ மறுபடியும் கோப பட ஆரம்பிச்சுடாத அங்க மழைக்கு ஒதுங்கற மாதிரி ஒரு இடம் இருக்கு வா அங்க போவோம் என்றாள் . இருவரும் ஒரு இடத்தில போய் நின்றார்கள் .மழை நன்கு பெய்து கொண்டு இருந்தது .சுவாதி தனியாக ஒரு பக்கம் நின்று மழை துளிகளை கைகளால் தொட்டு தொட்டு ரசித்து கொண்டு இருந்தாள் ,

அப்போது விக்கி அவளை பார்த்தான் . அவன் பார்ப்பதை பார்த்த சுவாதி அவன் பக்கம் வந்து டேய் என் இப்ப என்னையே சைட் அடிக்கிற என்றாள் .

அடசீ உன்னையே யாரு சைட் அடிச்சா . என்னடா இவ ஏதோ லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கலேன்னு பாத்தேன் ,ஏன்னா படத்துல வர ஹீரோஇன் மாதிரி உனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும் அதானே என்றான் .

இல்ல எனக்கு மழைன்னா சுத்தமா பிடிக்காது என்றாள் .அப்புறம் ஏன் மழைய பிடிச்சு பிடிச்சு ரசிச்ச என்றான் .எனக்கு மழைநா பிடிக்காது .ஆனா என் வயத்துல இருக்க என் குழந்தைக்கு பிடிச்சு இருக்கு போல என்றாள் சுவாதி ,அது எப்படி உனக்கு தெரியும் என்றான்

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *