என் காதலி Part 7 34

அப்புறம் மறுபடியும் படம் போட்டாங்கே . அதுகளும் மறுபடியும் அந்த கருமத்த பண்ண ஆரம்பிச்சுக . ஆனா இந்த தடவ நந்தினி நான் இருக்கேன்னு தெரிஞ்சு கிட்டு அவன் கைய தட்டி தட்டி விட்டா என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே

சுவாதி குறுக்கிட்டு அதுக்கு அப்புறம் நீ என்ன பண்ணேன்னு சொல்லவா என்றாள் .சரி சொல்லு என்றான் . காதல் கொண்டேன் தனுஸ் மாதிரி அதுகளுக்கு இடைஞ்சல் கொடுக்க கூடாதுன்னு வெளிய எந்த்ருச்சு போயிட்ட கரெக்ட்டா என்றாள் .

இல்ல அங்கதான் வில்லன் விக்கியே உருவானான் என்றான் .

அப்படி என்னடா பண்ண என்றாள் சுவாதி .

சொல்றேன் இரு…

அங்கதான் வில்லன் விக்கியே உருவானான். எனக்கு அதுக ரெண்டும் அப்படி கொஞ்சிகிட்டு இருக்கிறத பாத்து பயங்கர வருத்தமாவும் எமாற்றமாவும் இருந்துச்சு .நான் அவள ரொம்ப நம்பி இருந்தேன்.

என்னையே நான் நம்புனத விட அவள நான் நம்புனதுதான் அதிகம் .அவளால என் வாழ்க்கை மாறும்னு நினச்சேன் . இப்படி எல்லாம் நம்பி இருந்த நான் அவ அப்படி பண்ணவும் கொஞ்ச நேரம் அழுதேன் .நீ சொன்ன மாதிரி அதுக பண்றத பாத்துட்டு நான் தியட்டர் விட்டு எந்திருச்சு போயிரலாம்னு கூட நினச்சேன் .

ஆனா நான் அப்படி போகாம உக்காந்து என் அழுகைய நிப்பாட்டிட்டு என் கண்ண துடைச்ட்டு உக்காந்து யோசிச்சேன் .அப்பதான் எனக்கு புரிஞ்சுச்சு என்னோட மிக பெரிய வீக்னெசே என் வாழ்க்கைல நான் எப்பவுமே ரொம்ப நல்லவனா இருக்கிறதுதான் புரிஞ்சுகிட்டேன் .

அன்னைக்கு உமா கிட்ட இருந்து என்னையே எங்க அப்பா பிரிச்சப்ப நான் அவர்கிட்டயும் உமா அப்பா கிட்டயும் சண்டை போட்டு என் உமாவ நான் கல்யாணம் பண்ணிருக்கணும் . அத பண்ணால .அப்புறம் நந்தினியை காதலிச்சுருக்க கூடாது .அப்படியே காதலிச்சு இருந்தாலும் அவள நம்பி இருக்க கூடாது .

இல்ல காதலிச்ச உடனே இவள தனியா கூப்பிட்டு போயி மேட்டர போட்ருக்கணும் .அப்படி போட்ருந்தா இன்னைக்கு இவ இப்படி போனாலும் ஏதோ அவ மூலமா கிடைச்சு இருக்குன்னு விட்ருப்பேன் .

ஒரு வேல அவளும் இதுக்காக வேற ஒருத்தன தேடி போக மாட்டான்னு . அன்னைக்கு முடிவு பண்ணேன் இனிமேல் எவளையும் லவ் பண்ண கூடாது .மேட்டர மட்டும் பண்ணிட்டு விட்ரனும்னு முடிவு பண்ணேன் . அதுக்கு அப்புறம் நான் தியட்டர விட்டு எந்தரிச்சு போகல

வேணும்னே அவளையே பாத்துகிட்டு இருந்தேன் .என்னையே இவளவு தூரம் அழுக வச்சவ கொஞ்ச நேரமாச்சும் சந்தோசம் இல்லாம இருக்கணும்னு நினைச்சு அவள நான் ஒரு கோபத்தோடு முறைத்து கொண்டு இருந்தேன் .அப்புறம் நான் பாத்துகிட்டே இருக்கிறத பாத்து அவ அவன ஒண்ணுமே பண்ண விடல . எனக்கு அதுல ரொம்ப சந்தோசமா இருந்துச்சு .

அந்த தியட்டர விட்டு போனதுக்கு அப்புறம் நான் அவள திரும்பி கூட பாக்கல .காலேஜ்ளையும் அவள பாக்கனும்னு ஆச படல .அதுக்கு அப்புறம் நான் நிறைய பொண்ணுகள கரெக்ட் பண்ணேன் மேட்டர் பண்ணேன் . எவளையும் லவ் மட்டும் பண்ணல .ஆனா எப்பவுமே ஒன்னு மட்டும் ஞாபகமா உறுதியா வச்சு கிட்டேன் .

எவள வேணும்னாலும் போடலாம் . ஆனா அடுத்தவனுக்கு சொந்தமான ஒருத்திய மட்டும் தொட கூடாதுனு . ஏன்னா என்னையே மாதிரி இன்னொருத்தொனோட நம்பிகைய நான் சிதைக்க கூடாது அப்படின்னு முடிவு பண்ணேன் .அதான் எவளும் அடுத்தவன் பொண்டாட்டியோ இல்ல லவ்வரோன்னு தெரிஞ்சா நான் அடுத்த நிமிசமே அவள பாக்க கூட மாட்டேன் என்றான் .

அதை சொல்லிவிட்டு அமைதி ஆனான் .இருவருமே அமைதியாக இருந்தார்கள் .பின் சுவாதி கேட்டாள் அதுக்கு அப்புறம் எப்படி மும்பை வந்த என கேட்டாள் .

ம்ம் அதுக்கு அப்புறம் நான் அப்படி இப்படி இருக்கிறது வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு .அதனால காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் எங்க அப்பா கம்பனிய எடுத்து நடத்த சொன்னாரு நான் முடியாதுன்னு சொல்லிட்டு முன்ன விட அதிகமா கூத்து அடிக்க ஆரம்பிச்சேன் .என்னால வீட்டுக்கு நிறைய கம்பலைன் போச்சு

அதனால வீட்ல எங்க அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சா சரி ஆகிடும்னு சொன்னங்க அவெங்கலெ சொந்தத்துல ஒரு பொன்னும் பாத்தாங்க .நான் கல்யாணமா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன் . அட்லிஸ்ட் பொன்னயச்சும் வந்து பாரு . பிடிக்காட்டி வேணாம்னு சொல்லிடுன்னு சொன்னாங்க .

அப்புறம் என்ன ஆச்சு போயி பொண்ணு பாத்தயா என கேட்டாள் சுவாதி .சரி நானும் எங்க அம்மா அடிகடி ஆஹா ஓஹோன்னு சொல்றத பாத்தா பொண்ணு எங்கிட்டும் அழகா இருக்கும்னு நினைச்சு போயி பாத்தா அவ ரொம்ப அவ்றேஜா இருந்தா .

பத்துக்கு நாலு மார்க்தான் வருவா நான் சரி அங்கேயே பிடிக்கலன்னு சொன்னா நல்லா இருக்காதுன்னு நினைச்சுகிட்டு வீட்ல வந்து சொன்னேன் எனக்கு பொண்ணு பிடிக்கலன்னு .

உடனே பெரிய சண்டை அப்புறம் ஏன் பாக்க வந்தே அப்படி இப்படின்னு ஒரு கட்டத்துல எங்க அம்மா நெஞ்ச பிடிச்சுகிட்டு மயங்கி விழுந்தாங்க என்றான் .

உடனே சுவாதி அய்யயோ அப்புறம் என்ன ஆச்சு என்றாள் .எல்லாரும் கொண்டு போயி ஹாஸ்பிட்டல் சேத்தோம் .எங்க அம்மா என்னையே கூப்பிட்டு சாகுரதுக்குள்ள நான் மருமகள பாக்கணும் அப்படின்னு சொன்னங்க அதுனால நான் வேற வழி இல்லாம ஒத்துகிட்டேன் .

அப்ப உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்றாள் ,இல்ல என்றான் .அப்புறம் என்ன ஆச்சு கல்யாணத்துக்கு அன்னைக்கு ஓடி வந்துட்டியா என்றாள் .இல்ல வீட்ல தடல புடல கல்யாண ஏற்பாடு எல்லாம் நடந்துச்சு கரெக்ட்டா படத்துல மாதிரி முகுர்த்த நேரத்து அப்ப பொண்ண காணோம் .

போயி பாத்தா அவ யாரையோ காதலிக்கிறதா லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போயிருக்கா .எனக்கு உள்ளுக்குள்ள சந்தோசமா இருந்தாலும் வெளியே காட்டிக்கல . அதுக்கு அப்புறம் நான் வீட்ல வந்து வழக்கம் போல சந்தோசமா இருந்தேன் .யாரையும் ஒன்னும் சொல்லல நான் பாட்டுக்கு இருந்தேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *