இல்ல அதனால நிறைய பேர் என் கிட்ட கம்ப்ளைன் பண்ணாங்க நான் அவங்க பண்ணாத காதுல வாங்காம கூட கொஞ்சம் செல்லம் கொடுத்து வளத்தேன் என்றான் .
அப்புறம் எப்படிதாண்டா செத்துச்சு என்றாள் .அதலாம் ஒன்னும் பெரிய விசயம் இல்ல ஒரு தடவ நான் காய்ச்சல் வந்து நெஞ்சு புல்லா ரொம்ப சளியோடு இருந்தேன் .அப்ப என் முட்டா பிரண்டு ஒருத்தன் நெஞ்சு சளிக்கு பூனை கறி நல்லதுன்னு சொன்னான் அதான் நானே என் பூனையே அடிச்சு சாப்புட்டேன் என்றான் .
அவன் அவ்வாறு சொன்னவுடன் சுவாதி உடனே காரிலே வாந்தி எடுத்தாள் அதை கேட்டு .அதை பார்த்து விக்கி அடிப்பாவி ஒரு நிமிஷம் பொறுத்து இருக்க கூடாதா இந்த வீடு வந்துருச்சு அதுக்குள்ளே என் கார நாறடிச்சுட்டியேடி என்றான் .
பின் காரை வீட்டு முன்பு நிப்பாட்டினான் .சுவாதி காரை திறந்து வீட்டு முன்பு தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .அதை பார்த்து விக்கி கொஞ்சம் தள்ளி போயி நின்றான் . பின் அவனை செய்கையால் கூப்பிட்டாள் .அவன் அவள் கிட்ட வந்தான். அவள் என்னவோ மூச்சு வாங்கி கொண்டே சொன்னாள் .என்னது என்றான் .நான் உக்காந்து இருக்க இடத்துல தண்ணி கேன் இருக்கு அத எடுடா என்றாள் .
அவன் அதை எடுத்து தள்ளி நின்று கொடுத்தான் .அவள் அதை வாங்கி வாய் கொப்புளித்தாள் .அதை பார்த்து முகத்தை சுளித்து கொண்டு சே இன்னும் இந்த வாந்தி கண்ராவிய 7 மாசம் கூடவெ வச்சு பாக்கணுமா எல்லாம் என் தலை எழுத்து என்று நினைத்தான் விக்கி .
அவள் வாந்தி எடுத்து விட்டு மூச்சு வாங்கியாவரே அவனிடிம் கேட்டாள் நிஜமாவே உன் பூனைய நீதான் கொன்னியா என கேட்டாள் .ஆமா கொன்னது மட்டும் இல்லாம அத எவனுக்கும் தராம நானே தின்னேன் என்றான் .அதை கேட்டு மீண்டும் வாந்தி எடுத்தாள் சுவாதி
பின் விக்கியிடம் ஏன்டா உன் பெட் அனிமல நீயே கொன்ன உனக்கு கொஞ்சம் கூட இந்த இரக்கமே இல்லையா என கேட்டாள் .ஹே என்ன பெட் அனிமல் மேல இரக்கம் வேண்டி கிடக்கு அப்படி பாத்தா ஊர்ல எல்லாரும் ஆட்ட வளத்து அவங்களே கொன்னு சாப்பிடறது இல்லையா அதே மாதிரித்தான் இதுவும் என்ன நான் கொஞ்சம் வித்தியசாமா ஆட்டுக்கு பதிலா பூனை அவளவுதான் என்றான் சிரித்து கொண்டே ,
சுவாதி அவனை முறைத்து பார்த்தாள் . அதை புரிந்த கொண்ட விக்கி நீ என்ன நினைக்கிறன்னு தெரியுது நான் ஒரு Moran அதானே என்றான் .
நீ அதுக்கும் மேலடா ராட்சஸா முதல எனக்கு குழந்தை பிறந்த உடனே உன்னயே விட்டு ஓடனும் இல்லாட்டி என்னையும் என் குழந்தையும் கூட நீ அடிச்சு சாப்புடுவ என்று சுவாதி மனதில் நினைத்து கொண்டாள் .
கவலைப்படாத உன்னையே எல்லாம் அடிச்சு சாப்பிட மாட்டேன் அதனால பயப்படாத என்றான் .இல்லையே நான் பயபடலாயே என்றாள் .நீ பயப்படறது உன் முகத்துல நல்லா தெரியுது என்றான்.
அதலாம் ஒன்னும் இல்லையே நீ வா இங்க வந்து என் திங்க்ஸ் எல்லாம் வீட்ல வைக்க ஹெல்ப் பண்ணு என்றாள் .என்னது உன் திங்க்ஸ இறக்கி வைக்கணுமா என்றான் .ஆமா விக்கி இத மட்டும் பண்ணி கொடுத்துரு ப்ளிஸ் என்றாள் ஹலோ மேடம் இந்நேரம் வரைக்கும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணி என் நேரம் வெட்டியா போயிடுச்சு தேவை இல்லாம நீயும் உன் ரூம் மெட்டும் போட்ட சீரியல் பாத்தது தான் மிச்சம் . நான் முதல பப்க்கு போகணும் . ரெண்டு வாரமா எவளையும் போடாம எனக்கு அடில ஒரு எரிமலையே எரிஞ்சு கிட்டு இருக்கு
இன்னைக்கும் அத தணிக்காட்டி அது வெடிச்சு சிதறிடும் அதனால நான் வேகமா போனும் என்றான் .விக்கி சொன்னா கேளு எல்லா திங்கசையும் நான் மட்டும் எத்தி இறக்குநேனா எனக்கும் குழந்தைக்கும் எதாச்சும் ஆகிடும் அதானல ப்ளிஸ் இத மட்டும் பண்ணிட்டு பப்க்கு போ என்றாள் .
அத உன் கஷ்டம் அத பத்தி எனக்கு கவலை இல்ல நான் கிளம்புறேன் என்றான் .ஓகே நான் அஞ்சலி அக்காவ கூப்புடுரென் என்றாள் . நல்லது அவங்கள கூப்பிட்டு திங்க்ஸ் இறக்கி வச்சுக்கோ என்றான் . அவங்கள திங்க்ஸ் இறக்கி வைக்க கூப்பிடல என்றாள் ,பின்ன எதுக்கு கூப்புடுர என்றான் .
நீ கேட்டாலே அப்படி என்ன அங்க ஹாஸ்டல பேசினிங்கன்னு என்றாள் . ஆமா என்ன பேசினிங்க என்றான் .நீ ஏதாச்சும் பிரபாளம் பண்ண போன் பண்ண சொன்னங்க என்றாள் .ஏன் அவங்க என்ன விஜயசாந்தி IPS ஆ என்று சொல்லி சிரித்தான் ,
அவங்க IPS இல்ல அவங்க புருஷன் IPS ஆபிசர் அது மட்டும் இல்லாம டெல்லி கமிசனர் அவரு டெல்லி ரேப் சம்பவத்துக்கு அப்புறம் அந்த மாதிரி எவன் ஆச்சும் கிடைச்சா அடிச்சு துவைக்கனும்னு எதிர் பாத்து கிட்டு இருக்காராம் .
அதுக்கும் நீ பேசறதுக்கும் சம்பந்தமே இல்லையே என்றான் விக்கி .என்ன விக்கி பார்க்ல நான் பண்ண ப்ளாக் மெயில மறந்துட்ட என்று சொல்லி சிரித்தாள் .வில்லி என்னதான் நீ வில்லத்தனத்த காட்டனாலும் நான் பயப்பட போறது இல்ல நான் போறேன் நீயா கசடப்படு என்று சொல்லிவிட்டு காரை எடுக்க போனான் .
சுவாதி அவன் பின்னாடியே போயி விக்கி நான் சாப்டவே கேக்குறேன் ப்ளிஸ் என்று கெஞ்சினாள் .அவன் அதை காதில் வாங்கமால் காரை ரிவர்ஸ் எடுத்தான் .சுவாதி அவனை கெஞ்சுவது போல நின்று கொண்டு இருந்தாள் .பின் கெட் வரைக்கும் போனவன் ஏதோ நினைத்து மீண்டும் வந்தான் .
