என்னடா இது என்னமோ இவ கட்டி கொடுத்து புருஷன் வீட்டுக்கு போற மாதிரி இப்படி அழுகுறா அவ என்னமோ சொந்த தங்கச்சிய அனுப்புற மாதிரி ஆறுதல் சொல்றா இதல்லாம் ரொம்ப ஓவர்டி ரெண்டு பேருக்கும் என்று மனதிற்குள்ளே கிண்டல் அடித்தான் .ஆனால் அந்த அஞ்சலி வந்ததிலிருந்து அவனை கோபமாக முறைப்பது அவனுக்கு தெரிந்தது .
நான் வேணும்னா வந்து அந்த பொறுக்கிய கொஞ்சம் மிரட்டவா என்றாள் அஞ்சலி .வேணாம்க்கா பாவம் நான் மிரட்டனதுக்கே ஸ்கூல் பையன் மாதிரி பயந்து போயி கிடக்கான் .இனி நீங்க வேற மிரட்டுன்னிங்க பயத்துல பெண்ட்லே உச்சா போயிடுவான் என்று சொல்லி சிரித்தாள் .இரண்டு பேரும் விக்கியை ஒரு நிமிடம் உத்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள் ,அதை பார்த்த விக்கி என்ன இவளுக நம்மள ஏதும் ஒட்டுராலுகள என்று நினைத்தான் .
நீ வேணும்னா பாரு உனக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவன் கண்டிப்பா மாறி உன்னையே பிடிச்சுருக்குன்னு சொல்வான் என்றாள் அஞ்சலி .வேணாம் அக்கா அவன் அப்படியே இருக்கட்டும் நான் இப்படியே இருக்கேன் அத ரெண்டு பேருக்கும் நல்லது என்றாள் சுவாதி
ஏண்டி உனக்கு அவன் மாறுனா பிடிக்காதா .என்றார் அஞ்சலி .பாவம் அக்கா அவன் தப்பு எல்லாம் என் மேலதான் என்னையே காப்பாத்த போயி நானா அவன் கிட்ட தப்பா நடந்து அதனால அவன் பெஸ்ட் பிரண்ட பிரிஞ்சு ரொம்ப கஷ்டபட்டுடான்
இன்னைக்கும் என்னாலதான் அவனுக்கு இவளவு தொல்லை . அதனால இருக்க வரைக்கும் அவன் சந்தோசத்த கெடுக்காம ஒரு ஓரத்துல இருந்துட்டு குழந்தை பிறந்ததும் எவளவுக்கு எவளோ சீக்கிரம் பாஸ்போர்ட் எடுக்க முடியுமோ எடுத்துட்டு அவன நிம்மதியா அவன் பழைய வாழ்கைய கொடுத்துட்டு போயிடனும் என்றாள் ஒரு ஏக்கத்தோடு .
இதை சொன்ன போது அவள் விழி ஒரமாக மெல்ல கண்ணிர் துளிகள் வந்தது .அதை துடைத்து விட்டு காரில் உக்காந்து இருக்கும் விக்கியை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தாள்
அவள் பேசியதையும் விக்கியை பாரப்பதையும் புரிந்து கொண்ட அஞ்சலி சரி இத பத்தி நாம இன்னொரு நாள் பேசுவோம் இப்ப கிளம்பு நேரமாச்சு என்றாள் அஞ்சலி .ஒகே பாய் அக்கா என்று சொல்லிவிட்டு காரில் ஏறினாள் .
அவள் காரில் ஏறியதும் என்ன ஒரே அழுகையும் சிரிப்பும் மாறி மாறி ஒரு சீரியலே ஓடுச்சு என்ன நடந்துச்சு என்றான் .கார எடு அப்படியே போற வழில பேசுவோம் என்றாள் .அதுவும் சரிதான் என்று காரை எடுத்தான் . சுவாதி அவள் ஹாஸ்டலை பார்த்து கண்ணீர் விட்டவாறே பிரிந்தாள் .
பின் விக்கியின் காரில் சுவாதி ஏறி கொண்டு கண்ணீர் மல்க அவள் ஹாஸ்டலை விட்டு பிரிந்தாள் .என்ன ஏதோ புருஷன் வீட்டுக்கு போற பொண்ணு தன்னோட பிறந்த வீட்ட பாத்து அழுகற மாதிரி அழுகுற என்று கிண்டல் அடித்தான் விக்கி ,சுவாதி கண்களை துடைத்து கொண்டு அதாலம் உனக்கு புரியாது விக்கி நீ என்னைக்கு ஆச்சும் எதாக்கு ஆச்சும் பீல் பண்ணாதானே தெரியும் என்றாள்.
ம்ம் பிளிங்க்ஸ் வச்சு என்ன பண்ண முடியும் ஒன்னும் பண்ண முடியாது எந்த பீலிங் இருந்தாலும் அத தூக்கி போட்டு அடுத்த வேலையே பாக்கணும் அத விட்டுட்டு சும்மா கண்ண கசக்கி கிட்டு இருக்க குடாது என்றான் .ஏன் நீ இது வரைக்கும் எதுக்கும் பீல் பண்ணி அழுததே கிடையாதா என கேட்டாள் சுவாதி .பீல் பண்ணி இருக்கேன் ஆனா அழுததே கிடையாது என்றான் .
யாரும் உன்னையே விட்டு பிரிஞ்சா கூட அழுக மாட்டியா என்றாள் .ஹே அதான் Boys Never Cry ன்னு ஒரு விளம்பரமே வருதே அப்புறம் ஏன் ஒரு ஆம்பிள பையன் கிட்ட போயி அழுதுரிக்கியா இல்லாயன்னு கேக்குற இந்த விக்கி எப்பயும் அழுதாதே இல்ல இவளவு நான் ஆசையா வளத்த பூனை செத்தப்ப கூட அழுகல என்றான் .
என்னது பூனை வளத்தியா என சுவாதி ஆச்சரியத்தோடு கேட்டாள் .ம்ம் வளத்தேன் ஏன் அத இவளவு ஆச்சரியமா கேக்குற பூனைதானே வளத்தேன் புலியா வளத்தேன் ஆச்சரியபடறதுக்கு என்றான் .இல்ல உனக்கு ஒரு உயிர் மேல பாசம் எல்லாம் இருக்கானு தான் ஆச்சரியப்பட்டேன் என்று சுவாதி மனதில் நினைத்து கொண்டு இல்ல சும்மாத்தான் கேட்டேன் எப்ப வளத்த என்றாள்
காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் ஒரு 3 மாசம் வளத்தேன் என்றான் .ஏன் எல்லாரும் நாய்தானே பெட் அனிமலா வளப்பங்க நீ என்ன பூனையே வளத்துருக்க என்றாள் .அது காலேஜ் முடிச்சுட்டு கொஞ்ச நாள் வெட்டியா இருந்தேனா அப்ப ஒரு சின்ன விசயத்துல என்னையேஇந்த சமுதாயமே அப்செட் ஆகிருச்சு அதுக்குதான் பூனை வளத்தேன் என்றான் .
அது என்ன விஷயம் அதுக்கு ஏன் பூனை வளத்த என கேட்டாள் .அந்த விசயத்த நான் அப்புறம் சொல்றேன் ஆனா பூனை வளத்துக்கு காரணம் சொல்றேன் .அந்த விஷயத்துக்கு அப்புறம் நான் ஒரு வில்லனா இந்த சமுதாயத்துக்கு தெரியனும்னு நினச்சேன் அப்ப ஒரு பழைய படத்துல வில்லன் இந்த மாதிரி பூனை வளப்பனா அதான் நானும் பூனை வளத்தேன் என்றான் .
அதை கேட்டு சுவாதி சிரித்தாள் .ஒகே வில்லன் சார் அந்த பூனை எப்படி செத்துச்சு என்றாள் சிரித்து கொண்டே . அது வந்து பூனை குறுக்க போன கெட்டதாமெ அது தெரியாம என் பூனை ஓயாம எல்லாருக்கும் குறுக்க குறுக்க போச்சு அதுல யாரும் வண்டிய வச்சு அடிச்சுட்டாங்களா என்றாள் சுவாதி .