என் காதலி Part 4 142

மெதுவா போடா வயத்துக்குள்ள இருக்க என் பிள்ள பயந்துட போகுது என்றாள்.இவளுக்கு வேற வார்த்தையே வாயில வராதா என்று நினைத்து கொண்டு வண்டியின் வேகத்தை மெல்ல குறைத்து ஓட்டினான் ,பின் அவன் புது வீட்டிற்கு கொண்டு போயி நிறுத்தினான் . அவன் புது வீட்டை பார்த்த சுவாதி என்னடா வீடு ரொம்ப தனியா இருக்கு யாரும் பக்கதுல இல்லாம இருந்தா என்னையே ஈசியா கொன்னுடலாம்னு பாக்குறியா என்றாள் .

வா இம்சை முதல்ல உள்ள என்றான் . பின் வீட்டின் கதவை திறந்தான் . சுவாதி உள்ளே வந்தாள் .சே புது வீட்டுக்கு முத முதலல ஒரு ஸ்பெஷல் பிகர கூப்பிட்டு வரணும்னு நினைச்சோம் .போயும் போய் இவள போயா கூப்பிட்டு வரணும் எல்லாம் என் தலை எழுத்து என்று மனதில் நினைத்து கொண்டான் .சுவாதி வீட்டை முழுதும் மெல்ல சுற்றி பார்த்தாள் .பரவல வீடு நல்லா பெருசாதான் இருக்கு .உன் பழைய அப்பர்ட்மெண்ட்க்கு இந்த வீடு நல்லாவே இருக்கு .

பின் ஒவ்வொவொரு அறையாக சுற்றி பார்த்தாள் .ம்ம் நான் நினைச்ச மாதிரியே தனித்தனியா ரெண்டு பெட்ரூம் இருக்கு ஓகே என்றாள் .அவள் ஏதோ புது வீடு வாடகைக்கு வந்தவள் போல் ஒவ்வொரு அறையாக வீட்டை சுற்றி பார்ப்பது எரிச்சலாக இருந்தது .சுவாதி சுவாதி என்று அவளை கடுப்போடு கூப்பிட்டான் .ம்ம் சொல்லு என்று சொல்லி விட்டு சுவாதி இன்னும் ரூமை பார்த்து கொண்டு இருந்தாள் . சுவாதி இன்னும் நாம ஒரு முடிவுக்கு வரல அதனால வந்து இப்படி உக்காரு என்றான் .

அவள் மெல்ல சோபாவில் உக்காந்தாள் . விக்கியும் உக்காந்தான் . சுவாதி First of all நீ ஏன் உன் கருவ கலைக்கல என்றான் . விக்கி இத பத்தி நம்ம நேத்து பார்க்ல ரொம்ப நேரம் பேசி சண்ட போட்டுட்டோம் சோ வேற எதாச்சும் கேளு என்றாள் .ஓகே அப்ப இந்த குழந்தைக்கு அப்பா யாரு என்றான் . இங்க பாரு விக்கி திரும்ப திரும்ப தேவை இல்லாததையே பேசி நாம சண்ட போட வேணாம் இப்ப விஷயம் நான் உன் வீட்டுக்கு எந்நேரம் ஷிப்ட் ஆகுரதுங்கிறது தான் என்றாள் .

என்னது ஷிப்ட் ஆகுரதா முடிவே பண்ணிட்டியா என்றான் .வேற வழி இல்ல விக்கி என்றாள் .சரி நான் இத மட்டும் கேட்டுக்குறேன் நான் உன்னையே என் கூட தங்க வைக்காட்டி போலீஸ் கிட்ட போவேன்னு சும்மாதானே சொன்ன என்றான் சிரித்து கொண்டே .அவளும் சிரித்து கொண்டே இல்ல சிரியஸா தான் சொன்னேன் என்றாள் .அதை கேட்டு விக்கி சிரிப்பதை நிறுத்திவிட்டு அமைதியானான் .

சரி அடுத்து என்ன பண்றது என்றான் . அடுத்து என்ன எனக்கு வீடு ரொம்ப பிடிச்சு இருக்கு இப்பவே என் ஹாஸ்டலுக்கு போயி என் திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு இங்க ஷிப்ட் ஆகணும் என்றாள் .பண்ணியே ஆகணுமா வேற வழியே இல்லையா என்று கெஞ்சுவது போல் கேட்டான் . கண்டிப்பா பண்ணனும் என்றாள் .

வேணும்னா நீ நாளைக்கு ஷிப்ட் பண்ணேன் எனா இன்னைக்கு ஞாயிற்று கிழமை நான் கடைசியா ஒரு தடவ எவள ஆயச்சும் என் ரூம்ல போட்டுகிறேன் என்றான் .அது ஏன்னா இன்னைக்கு கடைசி நீ பாட்டுக்கு உன் ரூம்ல வச்சு எவ கூட வேணும்னாலும் என்ஜாய் பண்ணு நான் பாட்டுக்கு என் ரூம்ல நான் இருக்குறது கூட தெரியாம தூங்கிகிரென் .எந்த காரனத்த கொண்டும் உன் சுதத்திரத்துக்கோ இல்ல உன் சந்தொசத்துக்கோ நான் குறுக்க வர மாட்டேன் .

எனக்கு தங்க ஒரு இடம் வேண்டும் அவளவுதான் என்றாள் சுவாதி .ஓகே என்றான் ஒரு சலிப்போடு .சரி வா என் ஹாஸ்டல் போவோம் என்றாள் , இப்பயேவா என்றான் .ஆமா வந்து என் திங்க்ஸ் எல்லாம் வச்சுட்டு நான் நாளைக்கு வேலைக்கு போகனும் . அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போறேன் என்றாள் .சரி வரேன் என்றான் .

பின் அவள் ஹாஸ்டல் போயி நிப்பாட்டினான் .நீ வெளியேவ இரு நான் எல்லா திங்க்ஸ்ம் எடுத்துட்டு வரேன் என்று உள்ளே போனாள் . விக்கி சே என்று தலையை ஸ்டீரிங்கில் சாய்ந்து அவனை அவனே திட்டி கொண்டு இருந்தான் .பின் அவன் கார் சன்னல் தட்டப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்து கதவை திறந்தான் .

ஹலோ நீதான் மக்கியா என்று அஞ்சலி கேட்டாள் .அவன் என்னது மக்கியா என்று புரியமால் முழித்து கொண்டு இருக்க அவள் பின்னாடியே சுவாதி வந்து மக்கி இல்லாக்கா விக்கி என்றாள் .ஏதோ ஒன்னு என்று சொல்லி விட்டு கார் டிக்கியை திற திங்க்ஸ் வைக்கணும் என்றார்கள் . பின் அஞ்சலியும் சுவாதியும் ஹாஸ்டலில் இருந்து மாற்றி மாற்றி திங்க்ஸ் கொண்டு வந்து வைத்து காரில் வைத்தனர் .

எல்லா பொருள்களையும் வைத்த பின் சுவாதி அஞ்சலியிடம் ஓகேக்கா நான் போறேன்க்கா என்றாள் அழுது கொண்டே .போறேன் சொல்லாதேடி போயிட்டு வரேன்னு சொல்லு என்றாள் அஞ்சலி , அவள் அழுது கொண்டே மெல்ல சிரித்து விட்டு சொன்னாள் .இனி எங்கிட்டு இங்க வர போறேன் .குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அப்படியே கனடா போ போறேன் என்று சொல்லிவிட்டு ரொம்ப அழுதாள்.

சரி சரி அழுகாத அக்கா இங்கதான் இருக்கேன் எப்பனாலும் எனக்கு போன் போடு உடனே நான் வந்துடுறேன் என்றார்கள் .சரிக்கா என்று சொல்லி விட்டு இருவரும் கட்டி பிடித்தனர் .பின் அஞ்சலி அவள் கண்ணீரை துடைத்து விட்டு விக்கியை முறைத்து பார்த்து கொண்டே சொன்னாள் அந்த ராஸ்கல் எப்ப என்ன பிரச்சின பண்ணாலும் சொல்லு உடனே நான் போலிச கூப்பிட்டு அங்க வந்துறேன் என்றார் .சுவாதியும் சிரித்து கொண்டே சரிக்கா என்றாள் .

அவர்கள் இருவரும் விக்கிக்கு கொஞ்சம் தொலைவில் நின்று பேசியாதல் விக்கிக்கு அவர்கள் பேசியது கேக்கவில்லை .ஆனால் சுவாதி அழுவதும் அஞ்சலி அவளை கட்டி பிடித்து ஆறுதல் சொல்வதும் மட்டும் அவனுக்கு புரிந்தது .