சான்ஸே இல்லை… சும்மா போட்டு தாக்கு…3 7

“ராம்குமார்?” என்றது மறுமுனையில் ஒரு ஆண் குரம்.

“ஆமா. நீங்க?”

“திஸ் இஸ் அருண். அமெரிக்கால இருந்து.” என்றது முதலாளியின் குரல்.

“சார். குட் மார்னிங் சார். எப்படி இருக்கீங்க?” எனக்கு பதட்டத்தில் நாக்கு உளறியது.

“நல்லா இருக்கேன். பட் இங்க மார்னிங் இல்ல. லேட் நைட்.”

“ஓ. . . சாரி சார்.”

“தட்ஸ் ஆல்ரைட். நீ அங்க செட்டில் ஆகிட்டியா? நோ ப்ராப்ளம் ரைட்?”

“நோ ப்ராப்ளம் ஸார்.”

“ஓகே . . . குரு உன்கிட்ட எல்லாத்தையும் ப்ராப்பரா ஹேண்ட் ஓவர் பண்ணானா?”

“யாரு சார்?” ஆழமான தூக்கத்தில் இருந்து எழுந்ததும் இப்படி பதற்றத்துக்கு உள்ளானது, என் குரலை நடுங்க வைத்தது. லேசாக தலை சுற்றுவது போல் இருந்தது.

“குருமூர்த்தி யா . . . இதுக்கு முன்னாடி இங்க மேனேஜரா இருந்தவன். நீ அவன பாத்தியா இல்லையா?”

“பாத்தேன் சார்.”

“என்ன சொன்னான்?”

“சார் அவரு சாவிய குடுத்துட்டு கிளம்பிட்டாரு சார்.”

“தட்ஸ் ஆல்? பங்களாவ பத்தி எதுவும் சொல்லல?”

“இல்ல சார். எதோ அவரு பொண்டாட்டிக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு சார்.”

“பொண்டாட்டியா? குருவுக்கா?”

“ஆமா சார்.” அப்போது‌ வேணி அம்மா கிட்சனில் இருந்து, கையில் ஒரு டம்ளருடன் வெளியே வந்தாள். டம்ளரை என்னிடம் நீட்டினாள். நான் அதிலிருந்த தண்ணீரை குடித்த போதே, எனக்கு அருகிலிருந்த நாற்காலியை கொஞ்சம் நகர்த்தி, என் தோளைப் பிடித்து அழுத்தி அதில் என்னை அமர வைத்தாள். இன்னும் அதே நைட்டியில் முலையை தள்ளிக்கொண்டு தான் இருந்தாள்.

ஃபோனில் முதலாளி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

“யூஸ்லெஸ் ஃபூல். என்ன ஆச்சுன்னு தெரியல அவனுக்கு. சரி உனக்கு இந்த வேலைய பத்தி எதாச்சும் டவுட்ஸ் இருக்கா?”

நான் தண்ணீர் குடித்த பிறகு கொஞ்சம் தெளிவாகி இருந்தேன். “இப்போதைக்கு ஒன்னும் இல்ல சார். சண்முகம் எல்லா விவரமும் சொன்னான்.”

“யாரு சொன்னா?”

“சண்முகம் சார். ராமலிங்கத்தோட மச்சான்.”

“ஓ அவனா. சரி சரி. ராமலிங்கம் வர்ற வரைக்கும் இந்த பையன வச்சி நீ எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிக்கோ.”

“ஓகே சார்.”

“நான் உனக்கு எதுக்கு கால் பண்ணேன்னு சொல்லிடறேன். உன்னை பத்தி என்கிட்ட எல்லா விவரத்தையும் சொன்னாங்க. உன் ஃபேமிலி பத்தி கேள்விப் பட்டேன். உனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறதா சொன்னாங்க. நீ இனி எதையும் பத்தி கவலைப்பட வேண்டாம். நான் பாத்துக்குறேன். உன் லைஃபையும் நான் செட்டில் பண்ணி விட்டுடறேன்‌. யூ டோன்ட வொரி அபவுட் எனிதிங் ஓகே?”

“ஓகே சார்.”

“நீ இங்க இருந்து உன் வேலைய மட்டும் கரெக்டா பாத்துக்க, எனக்கு அது மட்டும் போதும். அந்த குரு கிட்டத்தட்ட பதினைஞ்சு வருஷமா என்கிட்ட வேலை பாத்தான். பயங்கரமான குடிகாரன், நிறைய பொய்க் கணக்கு எழுதுவான், பெருசா படிப்பு கிடையாது, பொய் கூட ஒழுங்கா சொல்லத் தெரியாது. ஆனா பதினைஞ்சு வருஷமா நான் அவன் பாத்துக்கிட்டேன். அவன் தங்கச்சி, கல்யாணம், தம்பி படிப்பு, எல்லாமே நான் தான் பண்ணி வெச்சேன். ஸோ உன்னையும் நான் நல்லா பார்த்துப்பேன், ஆனா நான் எதிர்பாக்கிற மாதிரி நீ நடந்துக்கணும்‌. நடந்துப்பியா?”

“நடந்துப்பேன் சார்!”

அப்போது வேணி அம்மா கையில் துண்டு, சோப்பு எல்லாம் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். நான் அதை கவனித்தேன், ஆனால் அதைப் பற்றி எதையும் என்னால் யோசிக்க முடியவில்லை.

“குட். நீ பண்ண வேண்டியது ஒரே ஒரு விஷயம்தான். நான் ரெண்டு மூனு வருஷத்துக்கு ஒரு தடவை தான் அங்க வருவேன். அப்பிடி நான் வரும்போது, எனக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது. வீடு நல்ல கண்டிஷன்ல இருக்கணும். இது ரெண்டு தான் நான் உன்கிட்ட எதிர்பாக்குறது. பில்ஸ், டேக்ஸஸ் எல்லாம் ஒழுங்கா கட்டணும், எல்லா ரூம்லயும் லைட்ஸ், பைப்ஸ், ஹீட்டர்ஸ் எல்லாம் வொர்க்கிங் கண்டிஷன்ல இருக்கணும். வெளிய‌ இருக்கிற கார்டென் ஏரியா எல்லாம் குப்பை ரொம்ப சேராம பாத்துக்கணும். அவ்ளோதான்‌, இதை மட்டும் செஞ்சா போதும். இதுக்கு மேல உனக்கு எந்த வேலையும் கிடையாது. உன்னால இதை செய்ய முடியுமா?”

“முடியும் சார்!”

“குட். நான் ஃப்ராங்கா சொல்றேன். நீ அந்த வீட்டை உன்னோட வீடு மாதிரி யூஸ் பண்ணிக்கோ, உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தா கூப்டு வந்து உன்கூட தங்க வெச்சிக்கோ, இல்ல உன் ஃபேமிலிய வேணாலும் கூப்டு வச்சிக்கோ, ஆனா வீட்டை மட்டும் நல்லா மெயிண்டெய்ன் பண்ணு. ஓகே?”

“சரி சார்.” அப்போது பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது‌.

“சரி, உனக்கு எவ்வளவு சேலரின்னு சொன்னாங்களா?”

“ஆமா சார். அம்பதாயிரம் ன்னு சொன்னாங்க.”

“ஓகே. உன்னுடைய ரியல் சேலரி அதை விட ரொம்ப அதிகம். அந்த குரு என்கிட்ட காட்டுற கணக்கு எல்லாம் அங்க ஒரு ஃபைல்ல இருக்கும் அதை பாத்தாலே பொய்க்கணக்குன்னு கண்டுபிடிச்சிரலாம், ஆனா அதை அவன் உக்காந்து உக்காந்து எழுதி நான் வரும்போது எல்லாம் காட்டுவான். நீ அதை எல்லாம் ஒரு தடவை பாரு. ஆனா நீ அப்படி எதுவும் எழுத வேண்டாம். நான் உனக்கு மாசம் மாசம் மூனு லட்சம் அனுப்புறேன்‌. அது வச்சி உன்னோட சேலரி, அங்க வேலை பாக்குற மத்தவங்களோட சேலரி, அது போக மத்த செலவு, எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிக்கோ, மீதி இருக்கிற பணத்தை நீயே வச்சிக்கோ. இந்த வயசுல உனக்கு நிறைய செலவு இருக்கும், அதுக்கு யூஸ் பண்ணிக்கோ. ஐ திங்க் அதுலையே உனக்கு மன்த்லி ஒன் லேக் வரைக்கும் கிடைக்கும். இந்த பணத்துக்கு நீ எனக்கு கணக்கு எதுவும் காட்ட வேண்டாம்.”

எனக்கு கண்ணில் ஒளி வீசியது. அவர் சொல்வதை எல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை.

“இதை பத்தி நீ அங்க இருக்கிற மத்தவங்க கிட்ட சொல்ல வேண்டாம். பட் இதுதான் உன் சேலரி. ஆர் யூ ஹேப்பி?”

“வெரி ஹேப்பி சார். தேங்க்ஸ் சார்.”

“சரி, அபப்றம் இன்னொரு விஷயம். நீ வாரா வாரம் எனக்கு சில ஃபோட்டோஸ் எல்லாம் மெயில் பண்ணு. அங்க எதாச்சும் வேலை நடந்திருந்தா, இல்ல வீட்டுல எதாச்சும் மெயிண்டெனென்ஸ் வொர்க் நடந்திருந்தா, எனக்கு அதை ஃபோட்டோ எடுத்து அனுப்பு. எதுவும் இல்லைன்னா வீட்டை மட்டும் ஃபோட்டோ எடுத்து அனுப்பு, சரியா. அங்க மொட்டை மாடிக்கு போனா கொஞ்சம் பிஎஸ்என்எல் சிக்னல் கிடைக்கும். அதை வெச்சி அனுப்பு, இல்லன்னா நீ பேங்குக்கு போகும்போது அனுப்பு. குருமூர்த்தி க்கு மெயில் எல்லாம் அனுப்ப தெரியாது. அதனாலதான் இந்த தடவை படிச்ச பையனா வேணும்னு தேடி உன்னை செலக்ட் பண்ணேன். ஓகே?”

“ஓகே சார்.”

“சரி… நான் இந்த வருஷம் முடியறதுக்குள்ள அங்க வருவேன். வர்றதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லிட்டுதான் வருவேன். அப்பப்போ கால் பண்ணி பேசுவேன். நீ என்னை காணடாக்ட் பண்ணணுமனா மெயில் அனுப்பு. என் மெயில் ஐடிய நான் உனக்கு வாடசாப் பண்றேன், நீ எப்ப நெட் கிடைக்குதோ அப்ப எடுத்துக்கோ.”

“ஓகே சார்.”

“சரி, வேற எதாச்சும் நீ என்கிட்ட கேக்கணுமா, இல்ல சொல்லணுமா?”

நான் ஒரு நொடி யோசித்தேன். பிறகு “சார் இங்க சமையலுக்கு ஒரு அம்மா வந்திருக்காங்க சார். என்கூட தான் தங்கி இருக்காங்க.” என்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *