அம்மா உன்னோடயும் இவளோடயும் ஒரே ரோதனையாப் போச்சு… மனுஷன நிம்மதியா இருக்க விட்றீங்களா? வேலைக்கு சேந்து கொஞ்ச நாள் ஆகல. அதுக்குள்ள இவ்ளோ பிரட்சனை?
புவனா கண்கள் கலங்க பதட்டத்தில் இருந்தாள்.
ஏன்டி நீ எதுக்கு பையனோட போய் ரூம்ல கதவை சாத்திக்கிற… அர்த்த ராத்திரில பையனோட உலாவுற?
இல்லங்க… நீங்களும் நைட் டூட்டி போய்டிறீங்க… இந்த எடம் தனியாயிருக்கு. நைட் தனியா படுக்க பயமாயிருக்கறதால குமார கூட படுக்க வச்சிக்கிட்டேன்…
அவன் அவளை மவுனமாக பார்க்க,
முந்தா நாள் நைட் வயிறு ஒரு மாதிரி இருக்குன்னு குமார கூட்டிட்டு வெளிக்காட்டு பக்கம் போலாம்னு கெளம்புனா உங்கம்மா கத்தி கூப்பாடு போட்டு ஊரக் கூட்டி மானத்தை வாங்கிடுச்சு…
லேப்டாப் திரையில் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, பரவாயில்ல, நல்லாவே சமாளிக்கிறா… என்று தோன்றியது.
புவனாவின் கணவன், நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன்… ஒரு ரெண்டு நாள் லீவு சொல்லிட்டு உங்க கூட நைட் தங்கலாம்னு இருக்கேன்… அப்பவாவது உங்க சண்டை ஓயுதா பாப்போம்… என்று சொல்ல,
எனக்கு, என்னடா இப்படி ஆயிடுச்சே… என்று தோன்றினாலும் எல்லாம் நல்லதுக்கே என்று தோன்றியது. ஒன்னுதான் இப்படி ஆகிடுச்சு, அடுத்த ரெண்டு குடும்பம் எப்படி இருக்குன்னு பாப்போம் என்று தோன்றியது.
செட் 2 கேமாராவை கிளிக் செய்தேன்
கவிதா வீட்டில் மாமனார் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவளது கணவன் ரூமில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். தங்கராஜ் காலேஜ்க்கு கிளம்பினான். கவிதாவை காணவில்லை. கிச்சன் பக்கம் கேமராவிலும் தென்படவில்லை. எங்கேப் போனாளென்று தெரியவில்லை.
செட் 3 கேமாராவை கிளிக் செய்தேன்
