மேடம் 10 200

மாலதியின் கோபம் தணியவே இல்லை. இரண்டு வாரமாக நானும் மெசேஜ் செய்து பார்த்தேன், பதில் இல்லை. கால் செய்தால் அட்டென்ட் பண்ணவே இல்லை. சுதாவிடம் இதைப் பற்றி கேட்கலாம் என்றால் மாலதியின் கோபம் மேலும் அதிகரிக்கும் என்று அந்த நினைப்பை கைவிட்டேன். பள்ளியில் நேரில் பார்த்தால் பேசலாம் என்று சென்றேன். ஆனால் என்னைப் பார்த்ததும் திரும்பிக் கொண்டு சென்றாள். எனக்கு வெறுப்பும் கோபமும் கலந்து வந்தது.
‘சே.. அப்படி என்ன தப்பு செய்துட்டேன்னு இவ்ளோ கோபமா இருக்கா? இந்த பொம்பளைங்களுக்கு சந்தேகப் புத்தி வந்துட்டாலே இப்படித்தான்..’ என்று எனக்குள் புலம்பியபடி இரவுகளை கனவுகளால் நனைத்தேன்.
எதிலும் மனம் ஒட்டவில்லை. மாலதி நினைவுகளால் தவித்தேன். அவளிடம் எப்படியாவது பேச வேண்டும் போல் இருந்தது. அவளின் உணர்வுகளை தெரிந்து கொள்வதற்காக சுதாவிடம் பேசுவது என்ற முடிவுடன் போன் செய்தேன்.
‘ஹலோ.. சிவா..’
‘ஹலோ சுதா..’
‘எப்படி இருக்கீங்க?’
‘நல்லா இருக்கேன். நீங்க?’
‘ம்ம்ம் பைன் சிவா.’
‘உங்க போஸ்டிங் விசயம் என்னாச்சு சுதா?’
‘தெரியல. இன்டர்வியூ வரும்னு சொல்றாங்க? அதான் காத்திட்டிருக்கேன்.’
‘டோன்ட் வொரி சுதா. சீக்கிரமே உங்க ஆசை நிறைவ÷றும்.’
‘தேங்ஸ் சிவா.’
‘ம்ம். உங்க பிரன்ட் எப்படி இருக்காங்க?’
‘யாரு?’
‘நான் யாரை கேப்பேன்னு உங்களுக்கு தெரியாதா?’
‘ம்ம் தெரியும் தெரியும். நல்லா இருக்காங்க.’
‘ம்ம்ம்.’
‘சிவாõ..’
‘சொல்லுங்க’
‘உங்க ப்ராப்ளம் இன்னும் ஓயலையா?’
‘என்ன ப்ராப்ளம்?’
‘எல்லாம் தெரியும் சிவா. நீங்க ரெண்டு பேரும் பேசுரது இல்லனு தெரியும். பட் எதனாலனு தெரியாது. மாலதி கிட்ட கேட்டேன். ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாங்க.’

‘ஓ.’
‘என்னதான் ப்ராப்ளம்.? நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?’
‘இல்ல பரவால்ல சுதா.. ஒன்னுமில்ல. சும்மாதான் பேசுறதில்ல.’
‘ஹலோ.. எனக்கு தெரியாதா.. உங்க ரெண்டு பேர பத்தி. சும்மா ஓப்பனா சொல்லுங்க. விருப்பம் இல்லேனா சொல்ல வேணாம்.’
‘என்ன சுதா? என்ன தெரியும் எங்கள பத்தி?’
‘எல்லாம் தெரியும்.’
‘எல்லாம்னா?’
‘அது.. வந்து.. தெரியும் விடுங்க சிவா..’
‘தெரியும்னா என்ன தெரியும் சொல்லுங்க மிஸ்.’
‘அய்யோ.. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கனு தெரியும்.’
‘வாட்.. என்ன சுதா இது? அவங்க மேரேஜ் ஆனவங்க. நானும் அவங்களும் எப்படி லவ் பண்ண முடியும்? சே.. சே.. அப்படி எல்லாம் ஒன்னுமில்ல.’
‘ஹலோ.. ஹலோ.. போதும். போதும். ஏன் நடிக்கிறீங்க.? எனக்கு எல்லாம் தெரியும்னு உங்களுக்கே தெரியும். அப்புறம் எதுக்கு இந்த டயலாக்..?’ (சிரித்தாள்.)
‘ம்ம்ம்.’
‘இப்பவாச்சும் சொல்லுங்க? என்னதான் ப்ராப்ளம்? ‘உங்க ஆளு’ ஏன் இவ்ளோ கோபமா இருக்காங்க?’
‘உண்மைய சொல்லனும்னா உங்களாலதான் இந்த பிரச்சினையே’.
(லேசான அதிர்ச்சியுடன்) ‘வாட்.. நான் என்ன செஞ்சேன்?’

நான் நடந்ததை விவரித்தேன்.
‘ஓ.. இதுதான் பிரச்சினையா? அதுதான் மாலதி என்கிட்டயும் ரெண்டு மூணு நாள் சரியா பேசாம இருந்தாங்களா?’
‘இப்போ நல்லா பேசுறாங்களா?’
‘ம்ம்.. என்கிட்ட இப்போ நார்மாலாத்தான் இருக்காங்க. ஐ யம் சாரி சிவா.’
‘ஏன்?’
‘என்னால உங்களுக்குள்ள இவ்ளோ பிரச்சினை வரும்னு நான் நெனக்கல. வெரி சாரி.’
‘இட்ஸ் ஓகே சுதா. இத பத்தி அவ கிட்ட எதுவும் கேக்க வேணாம்.’
‘என்னது அவளா?’
‘ஓ. சாரி. அவங்க கிட்ட கேக்க வேணாம்.’
(கிண்டலுடன் சிரித்தாள்) ‘ஓகே.. ஓகே.. நான் சும்மா விளையாட்டுக்குதான் கேட்டேன். உங்க லவ்வர்.. நீங்க என்ன வேணா சொல்லலாம். எனக்கெதுக்கு வம்பு?’
(சிரித்தேன்.) ‘சுதா..’
‘ம்ம்ம்.’
‘இப்போ மாலதி எங்க?’
‘கிளாஸ் போய் இருக்கா.’
‘என்னை பத்தி எதுவும் பேசுறாளா?’
‘முந்தி என்கிட்ட பேசும் போதெல்லாம் சிவா சிவா..னு உங்க புராணம்தான் பாடுவா? பட் இப்போ ஒரு வாரமா சரியா பேசுறதில்ல. உங்க மேல ஏதோ பெரிய கோபம்னு தெரிஞ்சிச்சு. இப்போதான் காரணம் தெரிஞ்சிச்சு. கொஞ்சம் வாடிப்போய்த்தான் இருக்கிறாங்க.’
‘ஓ.. அவளுக்கு எப்படி புரிய வெக்கிறதுன்னு தெரியல. பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு..’
‘ஹலோõ.. கூல். காதலி பேசலேனா காதலன் எப்படி இருப்பான்னு தெரியும். தாடி வளர்த்து தண்ணியெல்லாம் அடிக்க ஆரம்பிச்சாச்சா?’

1 Comment

  1. Bro madam next part yappo bro publish pannuvinga

Comments are closed.